ஜப்பான் விமர்சனம்.; கார்த்தியின் 25வது படம் எப்படி.?

ஜப்பான் விமர்சனம்.; கார்த்தியின் 25வது படம் எப்படி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘ஜப்பான்’.

இதில் அனு இமானுவேல், ஜித்தன் ரமேஷ், சுனில், கே.எஸ்.ரவிகுமார், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர், பவா செல்லதுரை உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க எஸ்.ஆர்.பிரபுவின்
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
தயாரித்துள்ளது.

கதைக்களம்.?

அரசியல்வாதி கே எஸ் ரவிக்குமாருக்கு சொந்தமான ஒரு நகைக்கடையில் 200 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடிக்கிறார் ஜப்பான் (கார்த்தி). இதனால் அரசியல்வாதியின் கட்டளை பேரில் காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் இறங்குகின்றனர்.

தென்னிந்திய முழுவதும் தேடப்படும் மிகப்பெரிய கொள்ளைக்காரன் ஜப்பான் தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் சினிமாவில் முதலீடு செய்து படங்களையும் வீடியோக்களையும் எடுத்து இணையதளங்களில் பதிவிட்டு மக்களிடையே பிரபலமாகி வருகிறார்.

இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் ஜப்பானுடன் தொடர்பு இருப்பதாக ஒரு நபரை விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றனர்.. அவரோ மனைவி குழந்தை மீது அதிக பாசம் கொண்டவர்.. அந்த அப்பாவியின் நிலை என்ன?

இந்த நிலையில் போலீசில் சிக்கும் ஜப்பான் மீது செய்யாத குற்றத்திற்காக மற்றொரு வழக்கும் போடப்படுகிறது. அப்படி என்றால் அந்த குற்றத்தை செய்தவர் யார்? ஜப்பானுக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு?

தென்இந்தியா முழுவதும் தேடப்படும் குற்றவாளி ஜப்பான் உண்மையில் யார்? அவனது பின்னணி என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

சிறுத்தை படத்திற்குப் பிறகு பக்கா திருடனாக ஜப்பானாக ஜொலிக்கிறார் கார்த்தி.. எந்த இடத்திலும் கார்த்தியை வெளிப்படுத்தாத வண்ணம் குரலை மாற்றி வித்தியாசமாக முயற்சித்து இருக்கிறார். ஆனால் சில இடங்களில் மட்டும் சத்தமாக பேசும் காட்சிகளில் குரல் மாற்றம் தெரியல.

அதேசமயம் தாய் பாசத்திற்காக ஏங்கும் நாயகனாகவும் நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் சொல்லப்படும் அந்த மீன் கதை உயிரோட்டமாக இருந்தாலும் படத்தின் நீளத்திற்காக குறைத்து இருக்கலாம்.

கார்த்தியின் 25வது படத்தில் தான் நாயகி என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம் அணு இம்மானுவேல் மற்றபடி அவரது காட்சிகள் அணு அளவே உள்ளது.

அரசியல்வாதி கே.எஸ்.ரவிக்குமார்.. போலீஸ் அதிகாரி.. சுனில் & விஜய்மில்டன் ஆகியோர் தங்களது பங்களிப்பில் குறை வைக்கவில்லை.. எழுத்தாளர் பவா செல்லத்துரை-யின் கேரக்டரில் வலுவில்லை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாகை சந்திரசேகர் மனதில் நிற்கும் படியான கேரக்டரை கொடுத்திருக்கிறார்.

கார்த்தி கும்பலில் இருக்கும் ஜித்தன் ரமேஷ் கேரக்டர் திடீரென மாறுவது எதிர்பாராத ஒன்று. இவர்களின் மோதல் சண்டைக் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. நுங்கு பாம் வித்தியாசமான கற்பனை.

டெக்னீசியன்கள்…

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்ய ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் பின்னணி இசைக்கு கொடுத்த ஆர்வத்தை பாடல்களிலும் கொடுத்திருக்கலாம். பாடல்கள் ஈர்க்கவில்லை என்பது வருத்தம்.

ஒளிப்பதிவாளர் தன் பங்களிப்பில் நேர்த்தி. ஆனால் எடிட்டர் பொறுமையை சோதித்து விட்டார்.. மீன் கதை.. ஹீரோயின் ஷூட்டிங் காட்சிகள் உள்ளிட்டவைகள் நீளம்.

மிகப்பெரிய கொள்ளைக்காரன் கார்த்தி பெரிய அளவில் யாரையும் கூட வைத்துக் கொள்ளாதது நம்பும் படியாக இல்லை. . போலீஸால் தேடப்படும் ஒரு திருடன் சினிமா எடுப்பது வீடியோ பதிவிடுவது எல்லாம் நம்ப முடியாத லாஜிக் ஓட்டை.

லாஜிக்கை எல்லாம் மறந்து கொள்ளை மேஜிக்கை காண நினைத்தால் இந்த படத்தை பார்க்கலாம்.. ஜோக்கர் குக்கூ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் எடுத்த ராஜூமுருகன் இதில் தன் பாதையை மாற்றி கமர்சியலுக்கு தாவியுள்ளார்.

அதேசமயம் அரசியல்வாதிகளையும் காவல்துறையையும் தன்னுடைய நையாண்டி மூலம் கலாய்த்திருப்பது சிறப்பு.

ஒரு மெசேஜ் அனுப்பினால் அதை ஒரு நிமிடத்தில் ஆயிரம் பேருக்கு ஃபார்வேர்டு செய்வார்கள்.. வதந்தியை நம்பும் வாட்ஸ்அப் மக்கள் கூட்டம் என்றும் ஜனங்களையும் கலாய்த்து இருக்கிறார்.

தமிழ்நாடு மட்டுமல்ல கேரளா போன்ற எந்த மாநிலம் என்றாலும் காவல்துறையிலும் கருப்பு ஆடுகள் இருப்பதால்தான் திருடர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுற்றுகிறார்கள் என்பதையும் அப்பட்டமாக காட்டி இயக்குனர் ராஜூமுருகன்.

ஜப்பான்

japan movie review and rating in tamil

AGE IS JUST NUMBER… கபில் ரிட்டர்ன்ஸ் விமர்சனம்.

AGE IS JUST NUMBER… கபில் ரிட்டர்ன்ஸ் விமர்சனம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீனி சௌந்தரராஜன்.. இவரே இந்தப் படத்தின் கதையின் நாயகனாக நடித்து இயக்கி தயாரித்திருக்கிறார். தனது நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையப்படுத்தி இந்த திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்.

கதைக்களம்…

ஸ்ரீனி சௌந்தர்ராஜன் இவரது மனைவி நிமிஷா. இவர்களுக்கு 12 வயதில் ஜான் என்று ஒரு மகன்.

ஸ்ரீனி ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார் அசோக் (ஸ்ரீனி). இவருக்கு கார் ஓட்ட தெரியாது பைக் ஓட்ட தெரியாது.. எனவே ஆபீசுக்கு வையாபுரி ஓட்டும் ஆட்டோவில் தான் செல்கிறார்..

இப்படியான சூழ்நிலையில் ஒரு நாள் தன் மகனுக்கு விபத்து ஏற்படவே திடீரென அவசர அவசரமாக காரை ஓட்டி செல்கிறார். இதனால் மனைவிக்கு சந்தேகம் வருகிறது.

மற்றொரு நாள் காய்கறி விற்க்கும் நாகரத்தினம் சீனியை பார்த்து நீ கபில்தானே எப்படி இருக்கிறாய்.? என்கிறார். இதனால் மேலும் குழப்பம் அடையும் மனைவி நிமிஷா.. உங்களின் பிளாஷ்பேக் என்ன? நீங்கள் யார்? என பல கேள்விகளை கேட்கிறார்.

உண்மையில் அசோக் (சீனி சௌந்தரராஜன்) யார்? அவரது பெயர் கபில்.? அவருக்கு கார் ஓட்ட தெரியும் என்றால் தினமும் ஆட்டோவில் செல்வதற்கு காரணம் என்ன உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை அளிக்கிறது கபில் ரிட்டன்ஸ்.

கேரக்டர்கள்..

ஸ்ரீனி சௌந்தரராஜன்.. இது இவரது முதல் படம் என்றாலும் நல்ல ஒரு கதை களத்தை தேர்ந்தெடுத்து சாதிக்க வயது தடையில்லை என திரைக்கதையில் சொல்லி இருக்கிறார் முக்கியமாக கிரிக்கெட் விளையாட்டில் இவர் மேற்கொள்ளும் பயிற்சிகள் நம்மை கூட விளையாட வைக்கும்.

சில காட்சிகளில் நாடகத் தன்மை தென்பட்டாலும் புதுமுகம் என்பதால் பொறுத்துக் கொள்ளலாம்.

நம் வீட்டுப் பெண்களைப் போல நிமிஷா. யதார்த்த நடிப்பில் நம்மை கவர்கிறார்.

காய்கறி விற்கும் நாகரத்தினமா வரும் வருண் என்பவர் சின்ன வேடம் என்றாலும் கதையின் திருப்புமுனைக்கு உதவி இருக்கிறார். அவர் காட்டும் ஆச்சரியங்களும் நண்பனின் ஆர்வத்திற்கு கொடுக்கும் உற்சாகமும் நட்புக்கு அப்ளாஸ்.

சிறு வயது ஸ்ரீனி செளந்தரராஜன் வேடத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் பரத் மற்றும் ஸ்ரீனியின் மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் ஜான் இருவரும் ஓகே ரகம். சிறுவனுக்கு பில்டப் சாங் ரொம்ப ஓவர்.. அதுவும் அவனுக்கு பொருந்தாத குரலில் கொடுத்திருப்பது வருத்தமே..

இவர்களுடன் வையாபுரி & சரவணன் உள்ளிட்டோரும் உண்டு..

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஸ்ரீனி புதுமுகம் என்றாலும் எடிட்டர் கேமரா மேன் இசையமைப்பாளர் பாடல் ஆசிரியர்கள் அனைவரையும் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுப்பது தேர்ந்தெடுத்திருப்பது சிறப்பு.

ஒளிப்பதிவாளர் ஷியாம் ராஜ். இசையமைப்பாளர் ஆர்.எஸ்.பிரதாப் ராஜ் இசையில், சினேகன், பா.விஜய், அருண்பாரதி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

இடைவேளைக்கு முன்பு 4-5 பாடல்கள்.. பிறகும் 4 பாடல்கள் என பாடல் போட்டு.. இது பாட்டா நம் பொறுமைக்கு வைக்கும் வேட்டா? என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த கதை கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை வைத்திருக்கலாம். ஆனால் பல காட்சிகளில் கிரீன் மேட் பயன்படுத்தி உள்ளது அப்பட்டமாக தெரிகிறது.

ஒரு படம் எடுக்கும்போது கிராபிக்ஸ்க்கு செலவு செய்யும் காட்சிகளை கொஞ்சம் காட்சியமைப்பிலும் காட்டி இருந்தால் ரசிக்க தோன்றும் அல்லவா?

கிரிக்கெட் மட்டுமல்ல எந்த துறையாக இருந்தாலும் சாதிக்க வயது ஒரு தடை இல்லை என கபில் ரிட்டன்ஸ் மெசேஜ் சொல்லுகிறது.

Kapil Returns movie review and rating in tamil

பெண்ணுக்கு கிடைக்குமா GUN.?..; லைசென்ஸ் விமர்சனம்

பெண்ணுக்கு கிடைக்குமா GUN.?..; லைசென்ஸ் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாட்டுப்புறப் பாடகி ராஜலட்சுமி ‘லைசென்ஸ்’ என்ற படத்தின் மூலம் கதையின் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

கதைக்களம்..

சிறு வயதிலேயே தன் உடன் பிறவா சகோதரியை பாலியல் தொந்தரவால் இழக்கிறார். தன் தந்தை ராதாரவி ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தும் அவரால் உதவ முடியவில்லை என்பதால் அவருடன் பேசாமல் வாழ்ந்து வருகிறார்.

தன்னுடைய லட்சிய கனவான போலீஸ் பணியை இதனால் வெறுக்கும் ராஜலட்சுமி ஒரு கட்டத்தில் ஆசிரியராக பணிபுரிகிறார்.

அப்போதும் பள்ளி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளைக் கண்டு ஆவேசம் அடைகிறார். இதனால் குற்றவாளிகளை போட்டுத் தள்ள துப்பாக்கி லைசென்ஸ் கேட்கிறார். போலீஸ் மறுக்கவே இதற்காக கோர்ட்டு வரை செல்கிறார் ராஜலட்சுமி.

இறுதியில் என்ன ஆனது? அவருக்கு லைசென்ஸ் கிடைத்ததா? காவல்துறை என்ன செய்தது? நீதித்துறை என்ன செய்தது? நினைத்ததை சாதித்தாரா பாரதி ( ராஜலக்ஷ்மி) என்பதுதான் மீதிக்கதை.

நடிகர்கள்…

Rajalakshmi Senthil, Radhravi, N.Jeevanandam, Abi Nakshatra, Vaiyapuri, Namo Narayanan, Geetha Kailasam, Pazha Karuppaiah

முதல் படம் என்றாலும் பாரதி என்ற கேரக்டர் பாரத்தை தன் தோளில் சுமந்து போராடி இருக்கிறார் ராஜலட்சுமி. தன்னால் முடிந்தவரை நடிப்புக்கும் முயற்சித்துள்ளார்.. நேரில் இவரை பார்த்ததை விட முதிர்ச்சியான தோற்றத்தை ஏற்று வலு சேர்த்து உள்ளார்.

இளம் வயது பாரதியாக அபி நட்சத்திரா நடித்துள்ளார். சிறு வயது முதலே போலீசாக வேண்டும் என எண்ணும் அபி ஒரு கட்டத்தில் அதனை வெறுத்து தன் தந்தை ராதாரவியுடன் சண்டை போடும் போது அடடா அருமையான நடிப்பு என்று கைதட்ட வைக்கிறார்.

என்.ஜீவானந்தம், நீதிபதியாக நடித்திருக்கும் கீதா கைலாசம், பழ கருப்பையா, வையாபுரி, நமோ நாராயணன், தன்யா அனன்யா உள்ளிட்டரும் தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

ராஜலட்சுமிக்காக வாதாடும் வக்கீலும் அழுத்தமான வசனங்களை பேசி நம்மை கவனிக்க வைக்கிறார். மேலும் போலீஸ் யூனிபார்ம் எதற்கு ? என அபி நட்சத்திர ராதாரவி இடம் சண்டை போடும்போது வசனங்கள் கைதட்ட வைக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

Directed By : Ganapathy Balamurugan

Music By : Baiju Jacob

Produced By : JRG Productions – N Jeevanandam

காசி விஸ்வநாதனின் ஒளிப்பதிவு & இசையமைப்பாளர் பைஜூ ஜேக்கப்பின் பின்னணி இசையும் பாடல்களும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

இடைவேளைக்குப் பிறகு வரும் கோர்ட்டு காட்சிகள் பரபரப்பை உண்டாக்குகிறது.

பெண்களை பாதுகாக்க துப்பாக்கி லைசென்ஸ் கொடுக்கலாம்.. ஆனால் குற்றவாளிகளை தண்டிப்பதற்கு நீங்கள் யார்? அதற்கு காவல்துறை இருக்கிறது என போலீஸ் அதிகாரிகள் செல்லும் போது வருத்தம் அடையும் ராஜலக்ஷ்மி, இறுதியாக எடுக்க முடியும் வித்தியாசமான ஒன்று.

அதேசமயம் பாலியல் வன்முறை செய்யும் சிலருக்கு இயக்குனர் கொடுத்த தண்டனையும் எதிர்பாராத திருப்புமுனை.

காலங்காலமாக குற்றவாளிகளை தண்டிக்க காவல்துறை இருந்தாலும் தவறுகள் தொடர்ந்து கொண்டே இருப்பது வேதனையான ஒன்று. இதனை தடுக்க கடுமையான சட்டங்களும் தேவை என்பதை வலியுறுத்தி இருக்கிறார் இயக்குனர் கணபதி பாலமுருகன்..

Licence movie review and rating in tamil

கேவலம்.. இதுல அய்யய்யோ வேற.; ரா ரா சரசுக்கு ரா ரா விமர்சனம் 1/5

கேவலம்.. இதுல அய்யய்யோ வேற.; ரா ரா சரசுக்கு ரா ரா விமர்சனம் 1/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற ‘ரா ரா சரசுக்கு ரா ரா..’ என்ற பாடல் 18 வருடங்களை கடந்தாலும் இன்ற அளவிலும் அனைவராலும் முணுமுணுக்க வைக்கும் பாடல் ஆகும்.

வித்யாசாகர் இசையமைத்திருந்த இந்தப் பாடல் தெலுங்கு பாடல் என்றாலும் தமிழ் ரசிகர்களால் பிடித்த பாடலாக அமைந்தது.

தற்போது இதுவே ஒரு படத்தின் தலைப்பு ஆகியுள்ளது. ரா ரா சரசுக்கு ராரா என்ற படத்தை கேசவ் தேபுர் என்பவர் இயக்கியிருக்கிறார். கேஷவ் தெபுர் தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 350 படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியவர்.

ஜி.கே.வி இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஆர்.ரமேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதில் கார்த்திக், காயத்ரி பட்டேல் , கே.பி.ஒய் பாலா, மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா,ரவிவர்மா, அபிஷேக், பெஞ்சமின் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில்ஏ.ஜெயலட்சுமி தயாரித்துள்ளார்.

இந்தப் படம் நவம்பர் 3 நேற்று வெளியானது படம் படத்தில் எந்த ஒரு விஷயமும் சுவாரசியமாக இல்லை என்பது வருத்தம்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஐந்து தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது இந்த படத்திற்கு சென்சாரில் அனுமதி இல்லை. ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல கௌதமி சொன்னார். படத்தில் 60 கட்டுகள் இருந்தன என இயக்குனர் கேசவ் ஆதங்கத்துடன் பேசியிருந்தார்.

நான் ஒரு தீவிரமான ரஜினி ரசிகன்.. எனவே ரஜினி படத்தில் உள்ள பாடலை எனது படத்திற்கு தலைப்பாக வைத்தேன். என்றெல்லாம் பேசி இருந்தார்.

அந்த காலத்து சென்சார் நிபந்தனைகளை இன்னும் வைத்துக் கொண்டிருப்பது ஏன்? சென்சார் விதிகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என கடுமையாக பேசியிருந்தார்.

இப்படி ஆதங்கமாக பேசி இருக்கிறாரே?! ஒருவேளை நல்ல படைப்பை கொடுத்துள்ளாரோ? என்ற எண்ணத்தில் இந்த படத்திற்கு சென்றோம். இந்த படம் எல்லாம் தேவையா? இந்த கதை எல்லாம் தேவையா என்பதுதான் நமக்கு ஏற்பட்ட எண்ணம்.

இந்த படத்திற்கு சென்சார் கொடுத்தது கூட தேவையில்லாத ஒன்றாகும். இதுபோல நிறைய பிட்டு படங்கள் வந்திருந்தாலும் ஒரு காட்சி அமைப்போ ஒரு வசனமோ அல்லது பாடலோ இப்படி ஏதாவது ஒரு சுவாரசியம் இருக்கும்.

ஆனால் ‘ரா ரா சரசுக்கு ரா ரா’ என்ற படத்தில் ஒன்றும் இல்லை என்பதால் இதையே ஒரு விமர்சனமாக இங்கே பதிவிடுகிறோம்.

ஒரு லேடிஸ் ஹாஸ்டலில் உள்ள பெண்கள்.. அங்கே நடக்கும் விஷயங்கள்தான் படத்தின் கதை. ஒரு ஆண் விபச்சாரனை உள்ளே அழைத்து உடலுறவு கொள்ள நினைப்பதும்.. வேறொரு பெண் குளித்துவிட்டு தன் காதலனுடன் கிஸ் அடிப்பதும்.. இப்படியாக சில காட்சிகள் சென்றாலும் கூட எந்த இடத்திலும் சுவாரஸ்யம் இல்லை என்பது தான் வருத்தம்.

இதுல அய்யய்யோ வேற அம்மம்மா வேற கேசவ் தெபூர் என்ன நினைத்து பேசினாரோ தெரியவில்லை.???!!!

RARA SARASUKKU RARA movie review and rating in tamil

ரூல் நம்பர் 4 விமர்சனம்..; காட்டுக்கள் ஒரு கஜானா

ரூல் நம்பர் 4 விமர்சனம்..; காட்டுக்கள் ஒரு கஜானா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்கதை…

YSIMY புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படம் ‘ரூல் நம்பர் 4.’ பாஸர் (Director Bosser) இயக்கியுள்ளார்.

நவம்பர் 3 முதல் தமிழகமெங்கும் படம் வெளிவருகிறது. ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஸ் (An Action Reaction JENISH Distribution ) படத்தை வெளியிடுகிறார்

ஒன்லைன்…

ஒரு வங்கி.. வங்கி ஏடிஎம்.. அது தொடர்பாக பணிபுரியும் ஆபிசர், செக்யூரிட்டி, டிரைவர் உள்ளிட்டோர்.. 5 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடும் வடஇந்திய கொள்ளையர்கள்.. அவர்களை வேட்டையாடும் போலீஸ்.. பணத்தை கொள்ளை அடிக்க திட்டமிடும் போலீஸ் இவர்களைச் சுற்றிய கதைதான்.

கதைக்களம்…

நாயகன் ஏகே பிரதீப் கிருஷ்ணா ஏடிஎம் வேன் டிரைவராக பணிபுரிகிறான். இவர் ஏடிஎம் வேனில் துப்பாக்கி ஏந்திய செக்யூரிட்டியின் மகளை காதலிக்கிறார். இவர்தான் கதை நாயகி.

ஒரு சூழ்நிலையில் அதிகாரி செக்யூரிட்டி & அவரது மகள் அக்கவுண்டன்ட் மற்றும் டிரைவர் ஆகிய ஐவரும் அந்த வேனில் பயணிக்கின்றனர்.

ரூ. 5 கோடி பணத்தை ஒரு காட்டுப்பகுதி வழியாக வேனில் கொண்டு செல்லும்போது வட இந்திய கொள்ளையர்கள் அந்தப் பணத்தை கொள்ளை அடிக்க திட்டமிடுகின்றனர்.

வனப்பகுதியில் நடக்கும் இந்த சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க வனத்துறையினரும் காவல்துறையினரும் தேடுதல் வேட்டையில் இறங்குகின்றனர்.

அது ஒரு அரசியல்வாதியின் கருப்பு பணம் என்பதால் அதனை கொள்ளை அடிக்க ஒரு போலீஸ் திட்டமிட்டு தன்னுடைய ஆட்களை ஏவி விடுகிறார்.

இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நாயகன் ஏகே பிரதீப் கிருஷ்ணா. டிரைவர் கேரக்டருக்கு அப்படியே பொருந்தி போகிறார்.. நாயகியை கண்டதும் தேடி தேடி உருகுவதும் அவளை வேனில் ஏற்றிக்கொள்ள திட்டம் போடுவதும் என காதலர்களின் குறும்புத்தனத்தை நினைவுபடுத்துகிறார்.

ஆனால் கொள்ளையடிக்கும் போது பெரும்பாலும் இவர் வேனில் இருப்பது ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.. அதற்கு எல்லாம் ஈடு கட்டும் வகையில் கிளைமாக்ஸ் காட்சியில் கொஞ்சம் இறங்கி அடித்திருக்கிறார் பிரதீப் கிருஷ்ணா.

நாயகி ஸ்ரீகோபிகா.. கேரளத்து வரவு போல.. மாறாத புன்சிரிப்பு.. அழகான கண்களை காட்டி ரசிகர்களை வசியம் செய்கிறார்.. கிளைமாக்ஸ் காட்சியில் ஸ்ரீ கோபிகா அடடா இவர் வழக்கமான ஹீரோயின் இல்லப்பா என்று சொல்ல வைக்கிறது..

நாயகியின் அப்பாவாக செக்யூரிட்டி மோகன் வைத்யா. கொள்ளையடிக்கும் காட்சியில் இவரது நடிப்புதான் முழுவதுமாக கவனிக்க வைக்கிறது.. பதட்டம் ஒரு பக்கம்.. மகள் மீது பாசம் ஒரு பக்கம்.. வேலை போய்விடுமோ என்ற பயம் ஒரு பக்கம் என அனைத்தையும் திறமையாக கையாண்டு உள்ளார்.

இப்படி ஒரு ஜாலியான பேங்க் ஆபீஸர் இருப்பாரா என்று கேட்க வைக்கிறார் ஜீவா ரவி. இப்படி இருந்தால் நிச்சயம் அந்த பேங்க் கலகலப்பாக இருக்கும் என நம்பலாம்.. இவரின் முடிவு பரிதாபமான ஒன்று.

அக்கவுண்டண்டாக வரும் கர்ப்பிணி பெண் கண்களால் நடிப்பாலும் நம்மை கவர்கிறார்.

காட்டிலாக்கா துறை அதிகாரி பிர்லா போஸின் வில்லத்தனம் கெத்து. காவல்துறைக்குள் கருப்பு ஆடு இவரே.

டெக்னீசியன்கள்…

பேங்க் காட்சிகள் கொஞ்சம் என்றாலும் அடர்ந்த காட்டுப் பகுதிக்கு கேமராவை கொண்டு சென்று படம் பிடித்து இருப்பது பாராட்டுக்குரியது.. வேனை துரத்தும் காட்சி இருட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள் என அனைத்தையும் பதைபதைக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் டேவிட் ஜான்.

‘என்ன கொன்னுபுட்டியே வெச்சு செஞ்சுபுட்டியே’, ‘சஸ்பென்ஸு ஓப்பன் ஆனதே’ பாடல்களில் தீரஜ் சுகுமாறன் நம்மை ரசிக்க வைக்கிறார்..

பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி த்ரில்லருக்கு உண்டான எனர்ஜியை கொடுத்திருக்கலாம்.

வித்தியாசமான கதையை எடுத்திருக்கும் இயக்குனர் அதை சின்ன சின்ன லாஜிக் ஓட்டைகளால் கோட்டை விட்டுள்ளார்.

முக்கியமாக கொள்ளையர்கள் துப்பாக்கி எடுத்துக் கொண்டு மிரட்டும் போது 5 கோடியை கொண்டு செல்லும் செக்யூரிட்டி கையில் துப்பாக்கி இருந்தும் அதை பயன்படுத்தாதது ஏன்?

வேனை சுற்றி தீப்பிடித்து எரியும்போது உள்ளே இருப்பவர்களின் நடிப்பு போதுமானதாக இல்லை.. அதுபோல எடிட்டீங்களிலும்… வெளியே தீப்பிடித்து எறியும்போது அந்த கண்ணாடிக்குள் நெருப்பு கொஞ்சம் கூட காட்டாதது ஏன்?

கொள்ளையர்கள் ஏடிஎம் வேனை 1 மணி நேரமாக தாக்கிக் கொண்டேயிருப்பது ஓவரோ ஓவர்.

சின்ன சின்ன குறைகளை தவிர்த்தால் இந்த ரோல் நம்பர் நான்கை பார்க்கலாம். முக்கியமாக ரூல் நம்பரை நான்கு என்பது என்ன என்பதை நாயகி மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாஸ்கர்.

Rule Number 4 movie review and rating in tamil

மார்கழி திங்கள் விமர்சனம்..; பாரதிராஜாவை மிஞ்சுவாரா மனோஜ்.?

மார்கழி திங்கள் விமர்சனம்..; பாரதிராஜாவை மிஞ்சுவாரா மனோஜ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தாஜ்மஹால்’ படத்தில் தன்மகன் மனோஜை நடிகராக அறிமுகப்படுத்தினார் இயக்குனர் பாரதிராஜா. ஆனால் தன் ஆசை நடிப்பு மீது இல்லை. படம் இயக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை என்றார்.

அதன்படி இந்த மார்கழி திங்கள் படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார் மனோஜ்.

என் இனிய தமிழ் மக்களே.. எனக்கு ஆதரவளித்தது போல தன் மகனுக்கும் ஆதரவளிக்க வேண்டும் என்ற பாரதிராஜாவின் குரலுடன் படம் தொடங்குகிறது.

இயக்குனர் சுசீந்திரன், கதை திரைக்கதை அமைத்து தயாரித்துள்ளார்.

கதைக்களம்…

நாயகன் வினோத் மற்றும் நாயகி கவிதா இருவரும் ஒரே வகுப்பில் படிக்கின்றனர். ஒரு கட்டத்தில் இவர்களுக்குள் காதல் மலர்கிறது.

இதனையறிந்த கவிதாவின் தாத்தா பாரதிராஜா ஒரு நிபந்தனை விதிக்கிறார். படிப்பு தான் வாழ்க்கை மாற்றும். கல்லூரி படிப்பையும் முழுவதுமாக முடியுங்கள். அதன் பிறகு திருமணம் செய்து வைக்கிறேன் என்கிறார். படிப்பை முடிக்கும் வரை நீங்கள் இருவரும் எந்த தொடர்பிலும் இருக்கக் கூடாது என்கிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது.? காதலர்கள் நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டார்களா? படிப்புக்கு பின்னர் இணைந்தார்களா.? தாத்தா பாரதிராஜா சொன்னதை நிறைவேற்றினாரா? அல்லது வேறு ஏதேனும் திட்டம் போட்டாரா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கவிதாவாக ரக்ச்ஷனா… வினோத் ஆக ஷ்யாம் செல்வன்… இருவரும் கிராமத்து இளம்காதலை யதார்த்தமாக வெளிப்படுத்தினர். ஆனால் நாயகனின் நடிப்பில் இன்னும் மெனக்கடல் தேவை. நாயகி கவிதா நாயகனை விட அதிகமாகவே காதல் செய்து நம்மை கவர்கிறார்.

நாயகியின் தாய்மாமனாக இயக்குநர் சுசீந்திரன். கிராமத்து நபராகவே தன் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார்

குரங்கு பொம்மை, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் கவர்ந்த பாரதிராஜா இதில் நம்மை கொஞ்சம் ஏமாற்றி விட்டுள்ளார் என்றே சொல்லலாம்.. ஒருவேளை வயது ஒரு காரணமாக கூட இருக்கலாம்.. தன் தந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வில் கொஞ்சம் கோட்டை விட்டுள்ளார்

இவர்களுடன் அப்புகுட்டி & ஜார்ஜ் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

டெக்னீசியன்கள்…

கிராமத்தை இசையை மண் மணம் மாறாமல் கொடுப்பவர் இளையராஜா. இந்த படத்திற்காக பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பாரதிராஜா உடன் இணைந்துள்ளார் இளையராஜா.

இது ஒரு காதல் படம் என்பதை அவரது இசை தான் அடிக்கடி நினைவூட்டுகிறது. 1980களில் இசைஞானி போட்ட மெட்டுக்களின் உணர்வை இதில் கேட்க முடிகிறது.. பின்னணி இசையும் சிறப்பு.

வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவில் கிராம சுற்றுலா சென்ற உணர்வு கிடைக்கிறது. திண்டுக்கல் மாவட்ட அழகை திகட்ட திகட்ட கொடுத்துள்ளார். படத்தின் நீளத்தை குறைத்து இருப்பதால் நிச்சயமாக எடிட்டரை கை குலுக்கி பாராட்டலாம்.

பள்ளி காதல்.. கல்லூரி காதல் என்ற காதலில் ஆணவப்படுகொலையை கொடுத்து கொஞ்சம் வித்தியாசத்தையும் காட்ட முயற்சித்துள்ளார்.

ஆனால் திரைக்கதை செல்லும் விதத்தை முன்பே யூகிக்க முடிவதால் பெரிய சுவாரஸ்யம் ஏற்படவில்லை. புதுப்புது இயக்குனர்களே வித்தியாசமாக யோசிக்கும் போது கலை குடும்பத்தில் வந்த மனோஜ் இன்னும் கூட யோசித்து இருக்கலாம்.

தொழில்நுட்பங்கள் நம் வாழ்க்கையை மாற்றினாலும் இன்னும் ஜாதி உள்ளிட்ட தொல்லைகள் தொடர்ந்து கொண்டே இருப்பதை தோலுரித்து காட்டியிருக்கிறார் மனோஜ்.

அதேசமயம் காதலர்களுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கு பாடம் எடுத்துள்ளனர் தயாரிப்பாளர் சுசீந்திரன் மற்றும் இயக்குனர் மனோஜ்.

Margazhi Thingal movie review and rating in tamil

More Articles
Follows