ஆண்டனி விமர்சனம்

ஆண்டனி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்ற பெருமையுடன் வந்துள்ள படம் ஆண்டனி.

இந்த படத்தில் நிஷாந்த், வைஷாலி, லால், ரேகா, சம்பத்ராஜ், வெப்பம் ராஜா, சேரன் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

குட்டி குமார் என்பவர் இயக்கியுள்ளார்.

ஆர்.பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, இளம் பெண் இசையமைப்பாளர் ஷிவாத்மிகா இசை அமைத்துள்ளார்.

கதைக்களம்…

கதாநாயகன் ஆண்டனி (நிஷாந்த்), கொடைக்கானலில் சப் இன்ஸ்பெக்டராக பணி புரிகிறார். இவரது நேர்மையால் இவருக்கு பல எதிரிகள் இருக்கிறார்கள்.

ஆண்டனியின் காதலி மகா (வைஷாலி) லேடிஸ் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பெண் இளம்.

ஆண்டனியின் தந்தை ஜார்ஜும் (மலையாள நடிகர் லால்) ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி ஆவார். தாய் மேரி (ரேகா) விபத்தில் கால்களை இழந்தவர்.

படத்தின் முதல் காட்சியை இருட்டில் துவங்குகிறது. ஹீரோ ஆண்டனி ஒரு காருக்குள் போதை நிலையில் இருக்கிறார். போதை தெளிந்தவுடன் தான் எங்கே இருக்கிறோம் என தெரியாமல் குழம்புகிறார்.

அப்போதுதான் தான் மண்ணுக்குள் அதுவும் ஒரு காருக்குள் புதைந்து கிடக்கிறோம் என தெரிய வருகிறது.

இவரிடம் போன் வேற இல்லை. இதனால் யாரையும தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்.

காருக்குள் இருக்கும் லைட் வெளிச்சத்தை வைத்து தன்னால் முயன்ற முயற்சிகளை செய்து வெளியே வர நினைக்கிறார்.

காரை உடைத்து வெளியே வர நினைத்தாலும் மண் சரிந்துக் கொண்டே இருக்கிறது.

இதனிடையில் ஆண்டனி வராததால், அவரது தந்தை ஜார்ஜ் தன் நண்பர்களுடன் தேடுகிறார்.

அவனது எதிரிகளின் மீது சந்தேகம் கொண்டு அவர்களை தேடி செல்கிறார்.

மண்ணுக்குள் புதைந்துகிடக்கும் ஆண்டனி வெளியே வந்தாரா? எப்படி வந்தார்? அவரது தந்தை கண்டு பிடித்தாரா? அவரை மண்ணுக்குள் புதைத்தது யார்? உயிருடன் மீண்டு காதலியை கரம் பிடித்தாரா? என்ற கேள்விகளுக்கு இறுதியில் விடையை சொல்வான் இந்த ஆண்டனி

கேரக்டர்கள்…

பெரும்பாலும் ஹீரோக்களுக்கு முதல் படத்தில் அழுத்தமான கேரக்டர்கள் கிடைக்காது. ஆனால் ஹீரோ நிஷாந்துக்கு அசத்தலான அறிமுகத்தை கொடுத்துள்ளது இந்த ஆண்டனி.

ரொமான்ஸ் அவ்வளவாக ஒர்க் அவுட் ஆகவில்லை என்றாலும் ஆக்சன் கை கொடுக்கும் எனத் தெரிகிறது.

ஹீரோயின் வைஷாலிக்கு சின்ன வேடம்தான். ஆனால் கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்ய முயற்சித்துள்ளார்.

அம்மாவாக வரும் ரேகாவுக்கு கெஸ்ட் ரோல் போல. மகனை பிரிந்துள்ள தாய்க்கு நிறைய காட்சிகளை கொடுத்திருக்கலாம்.

மலையாளத்தில் அசத்தும் லால் நடிகருக்கு தமிழ் சினிமாவில் பெரும்பாலும் வில்லன் வேடம்தான் கொடுத்திருக்கிறார்கள். தான் ஒரு நல்ல குணசித்திர நடிகனும் என்பதை நிருபித்துள்ளார்.

வில்லனாக அறிமுகமாகியுள்ளார் இப்பட தயாரிப்பாளர் வெப்பம் ராஜா. இவருக்கு டெரர் பேஸ் இல்லையென்றாலும் நடிப்பில் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

எக்ஸ்ட்ரா லைட்டிங் எதுவும் இல்லாமல் காருக்குள் இருக்கும் லைட்டை வைத்தே மண்ணுக்குள் படமாக்கியிருக்கும் டைரக்டரையும் ஒளிப்பதிவாளரையும் பாராட்டியே ஆக வேண்டும்.

ஷிவாத்மிகாவின் பின்னணி இசை மிரட்டல். அடங்காமாமலை, மற்றும் காற்றின் மொழி பாடல்கள் ரிப்பீட் மோட். ஆனால் ஓயாமல் பாடல்கள் வந்துக் கொண்டே இருப்பது சலிப்பை தட்டுகிறது.

முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை என்பது வருத்தம்தான். ஆனால் க்ளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம்.

ஆண்டனி… வித்தியாச முயற்சி! வீரியம் குறைவு!

காலக்கூத்து விமர்சனம்

காலக்கூத்து விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : பிரசன்னா, கலையரசன், தன்ஷிகா, ஸ்ருஷ்ட்டி டாங்கே மற்றும் பலர்
இயக்கம் – எம் நாகராஜன்
ஒளிப்பதிவு – பி.வி. சங்கர்
இசை – ஜஸ்டின் பிரபாகரன்
எடிட்டிங் – செல்வா
பி.ஆர்.ஓ. : நிகில்
தயாரிப்பு : மதுரை ஸ்ரீ கள்ளழகர் கம்பெனி

கதைக்களம்…

பிரசன்னாவும் கலையரசனும் பால்ய நண்பர்கள். வேலைக்கு செல்லாத கலையரசன் கல்லூரியில் படிக்கும் தன்ஷிகாவை காதலிக்கிறார்.

தன்ஷிகாவும் வீட்டை விட்டு வந்து கல்யாணம் செய்துக் கொள்ளும் அளவுக்கு வெறித்தனமாக காதலிக்கிறார்.

பிரசன்னாவை துரத்தி துரத்தி லவ் செய்கிறார் சிருஷ்டி டாங்கே. முதலில் மறுக்கும் பிரசன்னா பின்னர் காதலை ஏற்கிறார்.

இதனிடையில் சிருஷ்டி டாங்கேவுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் நடக்கிறது.

அதன்பின்னர் காதல் தோல்வியும் இருக்கும் பிரசன்னா, தன் நண்பனின் காதலை சேர்த்து வைக்க முயல்கிறார்.
இறுதியில் என்ன ஆனது? என்பதே இதன் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

அமைதியான முகம் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் பிரசன்னா பிரகாசிக்கிறார்.

துறுதுறு கேரக்டரில் கலையரசன். வேலைக்கு செல்லாமல் தன்ஷிகா பின்னாடி சுற்றுவதும் காதலியை கரம் பிடிப்பதிலும் கலக்கல்.

மதுரை மாவட்ட மொழியில் தன்ஷிகா தேர்ச்சி பெறுகிறார். க்ளைமாக்ஸில் அப்ளாஸ் அள்ளுவார்.

அப்பாவுக்கு பயந்த பெண்ணாக ஸ்ருஷ்டி டாங்கே சூப்பர். காதலனை கழட்டிவிட்டு கல்யாணமும் செய்துக் கொள்கிறார்.

இவர்களுடன் நண்பனாக வருபவரும், கவுன்சிலர் தம்பிகளும் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ரசிக்கலாம். கண்ண கட்டி பாடல் முணுமுணுக்க வைக்கும்.

சங்கரின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் அழகு. படத்தொகுப்பாளர் செல்வா நிறைய காட்சிகளை கத்திரி போட்டிருக்கலாம்.

காதலிச்சவனை கழட்டிவிட்டால் லைப்பில் நன்றாக இருக்கலாம் என்று இயக்குனர் சொல்ல வருகிறாரா?

காதலித்து கல்யாணம் செய்தால் குடும்பத்திற்கு அசிங்கம். காதலர்களுக்கு மரணம் என்கிறாரா? என்று புரியவில்லை.

காதலிக்கும் நண்பனுக்கு உதவினால் உனக்கு சங்குதான் என்று சொல்கிறாரா? இதுபோல் பல கேள்விகள் நிச்சயம் எழுகிறது.

ஆனால் இறுதியில் வறட்டு கௌரவத்தை தவிர்த்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்கிறார்.
மதுரையை மையமாக வைத்து கதைக்களத்தை நகர்த்தியுள்ளார் அறிமுக இயக்குனர் நாகராஜன்.

மிகவும் பழக்கப்பட்ட கதை வேறு. அதை இன்னும் பொறுமையாக கொண்டு சென்று சோதித்து விடுகிறார்.

படம் எடுக்கப்பட்ட விதம் அருமையாக இருந்தாலும் இதற்கு இவ்வளவு நேரம் தேவையா? என்பதுதான் கேள்வி

டிவிஸ்ட் வைத்து காட்சிகளை நகர்த்தியிருக்கலாம். அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்கும் படி இருப்பதுதான் திரைக்கதையின் பலவீனம்.

காலக்கூத்து… இந்த காலத்துக்கு இந்த கூத்து ஒர்க்அவுட் ஆகுமா.?

அபியும் அனுவும் விமர்சனம்

அபியும் அனுவும் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : டோவினோ தாமஸ், பியா பாஜ்பாய், பிரபு, சுஹாசினி, ரோகினி, மனோபாலா, கலைராணி, உதயபானு மகேஷ்வரன், தீபா ராமனுஜம் மற்றும் பலர்
இயக்கம் – பி.ஆர். விஜயலட்சுமி
ஒளிப்பதிவு – அகிலன்
இசை – தரண்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு – விக்ரம் மெஹ்ரா, பி.ஆர். விஜயலட்சுமி

கதைக்களம்…

இதுவரை தமிழ் சினிமா பாத்திராத கேட்காத ஒரு புதிய கதைக்களம். இந்த சிக்கலான புதிய அரிய முயற்சிக்காகவே டைரக்டரை பாராட்டலாம்.

ஐடி கம்பெனியின் வேலை பார்க்கிறார் நாயகன் டோவினோ தாமஸ்.

நாயகி பியா ஊட்டியில் தன் அம்மா ரோகினியுடன் வசிக்கிறார்.

சமூக சேவையில் அதிக ஆர்வம் கொண்ட பியா, தான் செய்யும் நல்ல செயல்களை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் போடுவதை வாடிக்கையாக கொண்டவர்.

அதை பார்க்கும் டோவினோ தாமஸ் அவருடன் காதல் கொள்ள, சில தினங்களில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துக் கொள்கின்றனர்.

அதன்பின்னர் பெற்றோருக்கு தெரியப்படுத்துகின்றனர்.

திருமணத்திற்குப் பிறகு பியா கர்ப்பமாகிறார். அப்போது பியா அம்மா சென்னைக்கு வர, அங்கே அவருக்கு முன்பே தெரிந்த வேலைக்காரி வருகிறார்.

அவரை சந்தித்தபின் தான் அவருக்கு ஒரு உண்மை தெரிகிறது. தன் மகளின் கணவனும் தன் வயிற்றில்தான் பிறந்தார் என்று.

அதன்பின்னர் என்ன ஆனது? மகன் எப்படி மருமகன் ஆனார்? அப்படியென்றால் அந்த குழந்தை..? ஆகிய கேள்விகளுக்கு விடையே இந்த படத்தின் க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

அபி கேரக்டரில் டோவினோ தாமஸும், அனு கேரக்டரில் பியாவும் காதல் ஜோடிகளாக வாழ்ந்திருக்கிறார்கள்.

லிப் லாக் காட்சிகளில் நிஜ காதலர்களையே மிஞ்சிவிடுவார்கள் போல. ரசிகர்களை அப்படி லாக் செய்துவிடுகிறார்கள்.

தங்கள் திருமணம் செல்லாது என்று தெரிந்த பின் இவர்கள் படும் வேதனை படத்தின் ஹைலைட். முடிவு என்னாகுமோ? என்ற பதைக்க வைக்கிறது.

காதல், கல்யாணம் எல்லாம் சட்டென்று முடிகிறதே, என்று பார்த்தால், இடைவேளைக்கு பிறகுதான் கதை சூடு பிடிக்கிறது.

இவர்களுடன் பிரபு, சுஹாசினி, ரோகினி, தீபா ஆகியோர் நடிப்பு படத்தின் தரத்தை உயர்த்தும் வகையில் உள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

தரண் குமார் இசையில் பாடல்கள் ஓகே. படத்தின் அனைத்தும் காட்சிகளையும் பளிச்சென கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அகிலன். அதுவே படத்தின் ஸ்லோவான காட்சிகளை கண் சிமிட்டாமல் ரசிக்க வைக்கிறது.

சுனில் ஸ்ரீநாயரின் படத்தொகுப்பும் கச்சிதம்.

ஒரு வித்தியாசமான கதையை வித்தியாசமாக கையாண்டுள்ளார் இயக்குனர் விஜயலட்சுமி.

கணவன் மனைவி, அண்ணன் தங்கை என்பது போல காட்டி கடைசியில் க்ளைமாக்ஸில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

ஆனால் எல்லார் தரப்பிலும் க்ளைமாக்ஸை ஏற்றுக் கொள்வார்களா? என்பது மக்களுக்கே வெளிச்சம்.

அபியும் அனுவும்… வித்தியாசமான கரு

Abhiyum Anuvum movie review and rating

செம விமர்சனம்

செம விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஜீ.வி.பிரகாஷ்குமார், அர்த்தனாபினு, காயத்ரி, யோகி பாபு, ஜனா, கோவை சரளா, மன்சூர் அலிகான், பசங்க சுஜாதா மற்றும் பலர்
இயக்கம் – வள்ளிகாந்த்
ஒளிப்பதிவு – எம்.சி. விவேகானந்தன்
இசை – ஜிவி. பிரகாஷ்
எடிட்டிங் – பிரதீப். ஈ.ராகவ்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு – பாண்டிராஜ் மற்றும் லிங்கா பைரவி ரவிச்சந்திரன்

கதைக்களம்…

நம்ம ஹீரோவுக்கு 3 மாதத்தில் கல்யாணம் நடக்கலேன்னா 6 வருசத்துக்கு கல்யாணம் நடக்காது என்கிறார் ஜோசியர்.

எனவே ஜிவி. பிரகாஷின் அம்மா சுஜாதா தினம் தினம் பெண் தேடும் படலத்தை நடத்துகிறார். கூடவே ஜிவியின் நண்பர் ஓமகுண்டமாக வருகிறார் யோகிபாபு.

தெரு தெருவாக காய்கறி விற்பது இவர்களது தொழில் என்பதால் அதை மறைத்து மொத்த விலை காய்கறிகள் விற்பனை செய்கிறோம் என்கிறார்கள்.

ஏற்கெனவே பண கஷ்டத்தில் இருக்கும் கேட்டரிங் மன்சூர் அலிகான், ஜிவி. பிரகாஷை தன் மாப்பிளையாக்கி கொண்டால் சமையலுக்கும் தன் செலவுக்கும் பணம் கிடைக்கும் என்பதால் ஓகே சொல்லுகிறார்.

இதனிடையில் மன்சூர் அலிகானின் மகள் அர்த்தனா மீது எம்எல்ஏ மகன் ஆசைப்படுவதால், ஜிவி. பிரகாஷின் நிச்சயத்தை ரத்து செய்ய உத்தரவிடுகிறார் மன்சூர்.

அதன்பின்னர் ஜிவி. பிரகாஷ் என்ன செய்தார்..? அர்த்தனாவை கரம் பிடித்தாரா? மன்சூர் அலிகான் வில்லன் ஆனாரா? என்பதே இந்த செம.

கேரக்டர்கள்…

நாச்சியார் படத்தில் பார்த்த சிறந்த நடிகர் ஜிவி. பிரகாஷை இந்த படத்தில் எதிர்பார்த்து செல்லாதீர்கள். வழக்கமான ஒரு பையனாக வந்து செல்கிறார்.

சில சில காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். ஜோசியர் இவர் கேரக்டர் பற்றி கொடுக்கும் பில்டப்புகள் ரசிக்கலாம்.

இப்போது எல்லாம் யோகிபாபு இல்லாத படங்களே இல்லை. அதுபோல்தான் இதுவும். அவர் இல்லேன்னா இந்த படம்..?

ஒரு பெண் இவரிடம் காய்கறி வாங்க வரும்போது.. வா ராஞ்சிதா நித்யானந்தா எப்படி இருக்காரு ?”, “ஆண்டவன் நல்லவங்களை தான் சோதிப்பான்…. ஆனா மச்சி உன்ன ஏன் சோதிக்கிறான்னு தெரியல… என பன்ச் பேசி நம்மை செமயாய் ஈர்க்கிறார்.

சில நேரங்களில் இவர் டயலாக் பேசும்போது மற்றவர்களும் பேசுவதால் ஓவர் லேப் ஆகிறது. (முக்கியமாக பஸ் மற்றும் கேர்ள் பிரண்ட் காட்சிகள்)

அழகு பெண்ணாக வருகிறார் அர்த்தனா பினு. நடிப்பில் பாஸ் மார்க் கொடுக்கலாம்.

காயத்ரி சில காட்சிகளில் வந்தாலும் நடிப்பில் கெட்டிதான்.

இரண்டாம் பாதி முழுவதும் கோவை சரளா ரவுண்ட் கட்டி அடிக்கிறார்.

மன்சூர் அலிகான் அட்டாக் பாலுவாக வந்து அசத்திவிடுகிறார். அந்த அட்டாக் பெயர் டெரர் அட்டாக் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஊருக்குள் புரளி பேசும் அந்த கருப்பு கலர் பொம்பள நடிப்பில் கலக்கல்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

எம்.சி. விவேகானந்தன் ஒளிப்பதில் காட்சிகள் அழகு. எல்லா கேரக்டர்களையும் அழகாக காட்டியிருக்கிறார்.
பிரதீப். ஈ.ராகவ் படத்தொகுப்பில் சில காட்சிகளை வெட்டியிருக்கலாம்.

ஜீவி பிரகாஷ் குமார் இசையில் “ஏய் உருட்டு கண்ணால… “, “சண்டாளி…” பாடல்கள் ரிபீட்டு மோட்.

படத்தின் தயாரிப்பாளர் (இயக்குனர்) பாண்டிராஜ் தான் இப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளார்.

பெங்களுர் தக்காளி இருக்கா?ன்னு ஒருவர் கேட்கும்போது “தண்ணி தராத ஊருல இருந்துல்லாம் தக்காளி வாங்கறதுல்ல…. ” என்கிற டயலாக்கும் “எம்எல்ஏ இருக்காரா ? அவரு கூவத்தூரு போயிருக்காருண்ணே….” என்கிற டயலாக்குகள் அரசியல் நெடி செம.

ஆனால் இதில் கொடுத்த கவனத்தை செம டைட்டிலுக்கு கொடுத்திருக்கலாம்.

வழக்கமான கதைக்களமாக இருந்தாலும் அதை வலுவாக கொடுத்திருக்கலாம் வள்ளிகாந்த்.

செம… ஆமா எதுக்கு இந்த டைட்டில்..?

Sema movie review rating

ஒரு குப்பைக் கதை விமர்சனம்

ஒரு குப்பைக் கதை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : டான்ஸ் மாஸ்டர் தினேஷ், மனீஷா யாதவ், யோகி பாபு மற்றும் பலர்
இயக்கம் – காளி ரங்கசாமி
ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி
இசை – ஜோஷ்வா ஸ்ரீதர்
பி.ஆர்.ஓ. : ஜான்
தயாரிப்பு – இயக்குனர் அஸ்லம்
வெளியீடு : உதயநிதி ஸ்டாரின்

கதைக்களம்…

தினம் தினம் நாம் படிக்கும் கள்ளக் காதல் கதைதான் இப்படத்தின் ஒன்லைன்..

படத்தின் ஆரம்ப காட்சியில் போலீசிடம் ஒரு அட்ரஸ் கேட்கிறார் ஹீரோ தினேஷ் மாஸ்டர். அதன்பின்னர் அந்த அட்ரசில் சென்று திரும்பிய பின் ஒரு கொலை செய்துவிட்டதாக போலீசில் சரணடைகிறார்.

அதன்பின்னர்தான் ப்ளாஷ்பேக்…

சென்னையின் கூவம் ஓரம் உள்ள ஒரு குப்பத்தில் தன் அம்மாவுடன் வசிக்கிறார் நாயகன். சென்னை மாநகராட்சியில் குப்பை அள்ளும் தொழிலாளி இவர்.

சென்னையை சிங்கார சென்னையாக்குவோம் என அரசியல்வாதிகள் சொன்னாலும் அதை செய்வது நாங்கள்தான் என கௌரமாக சொல்பவர் தினேஷ். இவருடைய சக தொழிலாளி நண்பன் யோகிபாபு.

நாகரீகமாக வாழும் மனிஷாவை உண்மையை மறைத்து திருமணம் செய்துக கொள்கிறார்.

அதன்பின்னர் இவருடைய வேலை மனீஷாவுக்கு தெரிய வருவதால் அங்கு வாழ மறுக்கிறார். எனவே தன் மனைவி மற்றும் பச்சிளங்குழந்தைக்காக ஒரு அப்பார்ட்மெண்ட்டில் வாடகைக்கு குடியேறுகிறார்.

அங்கு உள்ள ஒரு ஐடி வாலிபருடன் மனீஷாவுக்கு கள்ளத் தொடர்ப்பு ஏற்பட இருவரும் ஊரை விட்டு எஸ்கேப் ஆகிறார்கள்.

அதன்பின்னர் தினேஷ் மாஸ்டர் என்ன செய்தார்? மனைவி கிடைத்தாளா? இப்படி பல கேள்விகளுக்கு விடைதான் இதன் க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

வெகுநாட்களுக்கு பிறகு சினிமாத்தனம் இல்லாத படம்.

தினேஷ் மாஸ்டர் ஒரு டான்சர் என்றாலும், அதற்காக ஓவராக டான்ஸ்க்கு இடம் கொடுக்காமல் கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இந்த படத்திலும் தன் நடிப்பால் கேரக்டரை பேச வைத்திருக்கிறார் மனீஷா.

பிடிக்காத வாழ்க்கை, பிறகு பிடித்த வாழ்க்கை, துயரம், சந்தோஷம் என ஒவ்வொரு சீனையும் ரசிக்க வைக்கிறார். மனீஷாவின் பூங்கொடி கேரக்டருக்கு ஒரு பூங்கொத்து பார்சல்.

படத்தின் முதல் பாதி யோகிபாபுவின் ராஜ்ஜியம்தான். இவரைப் பார்த்தாலே சிரிப்பு வந்துடும். சரக்கு விலை உயர்வுக்கும் சம்பளத்திற்கும் யோகிபாபு கொடுக்கும் விளக்கம் செம.

இவருடன் அந்த ஐடி ஜார்ஜ், ஆதிரா, கோவை பானு, செந்தில், லலிதா, சுஜோ மாத்யூஸ், கிரன் ஆர்யன் என அனைவரும் கதையை தாங்கி நிற்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில் பாடல்கள் இனிமை. நாயகன் மற்றும் நாயகியின் வலியை நா. முத்துகுமாரின் பாடலின் வரிகள் உணர்த்துகின்றன.

பின்னணி இசையில் தீபன் சக்ரவர்த்தி நிற்கிறார்.

மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு கச்சிதம்.

தேவையான இடத்தில் கத்திரி போட்டு படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா சபாஷ் போட வைக்கிறார்.

இயக்கம் பற்றிய அலசல்…

குப்பை போடுபவரே இங்கு கௌரவமாக பார்க்கப்படுகிறார். இந்த படம் பார்த்தால் குப்பை அள்ளுபவர்கள் மீது நமக்கு மதிப்பு ஏற்படும்.

சென்னை குப்பத்து ஏரியா அவர்களின் பழக்க வழக்கங்கள், வால்பாறை மக்கள் பேசும் பாஷை என அனைத்தையும் ரசிக்கும் படி கொடுத்திருப்பது காளி ரங்கசாமியின் ரகசியம்.

இந்த படம் பார்த்தால் நம் மனக் குப்பையை களைந்து விட்டு வரலாம்.

ஒரு குப்பைக் கதை… மனக் குப்பையை களைய ஒரு கதை

Oru Kuppai Kathai review and rating

செயல் விமர்சனம்

செயல் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ராஜன் தேஜேஸ்வர் (கார்த்திக்), தருஷி (ஆர்த்தி), ரேணுகா (லக்ஷ்மி), முனீஸ்காந்த் (சிங்கம்), சூப்பர்குட் சுப்பிரமணியம் (புலி), வினோதினி (சாந்தி), தீப்பெட்டி கணேசன் (அறடம்ளர்), ஆடுகளம்ஜெயபாலன் (திமிங்கலம்), வில்லனாக சமக் சந்திரா (தண்டபாணி) மற்றும் பலர்
ஒளிப்பதிவு – V.இளையராஜா
இசை – சித்தார்த்விபின்
எடிட்டிங் – R.நிர்மல்
பாடல்கள் – லலிதானந்த், ஜீவன் மயில்
ஸ்டன்ட் – கன்னல் கண்ணன்
நடனம் – பாபா பாஸ்கர், ஜானி
கலை – ஜான் பிரிட்டோ
தயாரிப்பு நிர்வாகம் – A.P.ரவி
தயாரிப்பு – C.R.ராஜன்
பி.ஆர்.ஓ. : மௌனம் ரவி

கதைக்களம்…

தந்தை இல்லாத நாயகன் ராஜன் தேஜஸ்வர் அம்மா கண்காணிப்பில் வளர்கிறார்.

பொறுப்பான இளைஞராக வளரும் இவர் மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர்.

யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்கும் குணம் கொண்டவர் இவர். ஒரு முறை மிகப்பெரிய மார்கெட் ஒன்றின் இலவச கழிப்பிடத்தில் சிறுநீர் கழிக்கிறார்.

அங்கும் கட்டணம் கேட்கும் வில்லனை அடித்து நொறுக்குகிறார்.

அவர்தான் அந்த ஏரியாவின் பெரிய தாதா என்பது அவருக்கு அப்போது தெரியாது.

தாதா ஏரியாவில் அடி வாங்கியதால் அவரை அங்கு மாமூல் கொடுப்பவர்கள் கூட மதிப்பதில்லை.

இதனால் கடுப்பாகும் வில்லன், ஹீரோவை அந்த மக்கள் முன்னிலையில் அடிக்க நினைக்கிறார்.

ஆனால் ஹீரோவோ கேரளாவுக்கு வேலைக்கு சென்றுவிடுகிறார். மேலும் வில்லன் மனைவி மற்றும் பிள்ளையின் படிப்புக்கும் உதவுகிறார்.

இந்நிலையில் தன் பிள்ளையின் படிப்பை வைத்தே ஹீரோவை அந்த இடத்திற்கு வர வைக்கிறார் வில்லன்.

அதன்பின்னர் என்ன வில்லன் – ஹீரோ மோதல் என்ன ஆனது? வில்லன் மகனின் படிப்பு என்ன ஆனது? யார் ஜெயித்தார்கள்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

அறிமுக நாயகன் ராஜன் தேஜேஸ்வர். இவரின் அப்பாதான் இந்த படத்தின் புரொடியூசர் என்பது கூடுதல் தகவல்.
நாயகனும் கிடைத்த கேப்பில் ரொமான்ஸ், ஆக்சன் என மிரட்டியிருக்கிறார்.

ஆனால் இவர் டப்பிங் பேசாமல் வேறு யாரையாவது வைத்து பேசியிருக்கலாம். சில நேரங்களில் வார்த்தைகள் வட சென்னை பாஷையில் வர மறுக்கிறது.

மற்றபடி முதல் படம் என்பதால் குறைகளை மறக்கலாம். நாயகி தருஷி சில காட்சிகளில் நடிக்க முயற்சித்திருக்கிறார்.

படத்தின் ப்ளஸ் பாய்ண்டே அந்த வில்லனும் தன் கெத்தை விட்ட பின் வரும் காட்சிகள்தான். வீட்டிற்கு கரண்ட் பில் கட்டாதது முதல் மனைவியின் தாலியை அடமானம் வைப்பது முதல் ரசிக்க வைக்கிறார்.

இவரின் அடியாட்கள்… அண்ணே அண்ணிக்கு ஒரு தாலிதான் கட்டுனீங்களா? என கேட்பது நச். இவரின் மனைவியாக வரும் வினோதினியும் நடிப்பில் கச்சிதம்.

இவர்களுடன் முனீஸ்காந்த் (சிங்கம்), சூப்பர்குட் சுப்பிரமணியம் (புலி), தீப்பெட்டி கணேசன் (அரை டம்ளர்), ஆடுகளம்ஜெயபாலன் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சித்தார்த் விபியின் இசையில் நீயா உயிரே பாடல் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் குத்து ரகம்தான்.
வி. இளையராஜாவின் ஒளிப்பதிவில் ஆக்சன் மற்றும் பாடல் காட்சிகள் அருமை.

விஜய்யின் ஷாஜகான் படத்தை இயக்கி ரவி தான் இப்படத்தின் டைரக்டர். ஒரு அறிமுக நாயகன் என்றாலும் டாப் ஹீரோக்களுக்கு கொடுக்கும் அளவுக்கு அதிரடி ஆக்சனை தெறிக்கவிட்டுள்ளார்.

பெரிய தாதா வில்லன் ஹீரோவிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதே ரொம்ப ஓவர். அதை குறைத்திருக்கலாம்.

மொத்தத்தில் செயல்… குறைவில்லை.

More Articles
Follows