தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : நாக சௌரியா, சாய் பல்லவி, பேபி வெரோனிகா, சந்தான பாரதி, நிழல்கள் ரவி, ரேகா மற்றும் பலர்
இயக்கம் : விஜய்
இசை : சாம் சி.எஸ்
ஒளிப்பதிவு: நீரவ் ஷா
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு: லைகா நிறுவனம்
கதைக்களம்…
பருவ வயதை அடைந்து காதலிக்கும் நாயகி சாய் பல்லவியும் (துளசி) நாக சௌரியாவும் திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர்.
இதன்காரணமாக சாய்பல்லவி கர்ப்பமாகிறார்.
கர்ப்பம் ஆனது மெடிக்கல் படிப்புக்கு தடையாக இருக்கும் என்பதால் படிப்பை முடித்துவிட்டு கல்யாணம் செய்துக் கொள்ளலாம். தற்போது இந்த குழந்தை வேண்டாம் என பெரியவர்கள் பேசி முடிவு எடுத்து விடுகின்றனர்.
அதற்கு நாயகனும் சம்மதிக்கிறார். நாயகியின் சம்மதம் இல்லாமல் கருவையும் கலைத்து விடுகின்றனர்.
படிப்பு முடிந்ததும் திருமணமும் செய்து வைக்கப்படுகிறது.
தன் கரு இப்போது எப்படி இருப்பாள்? என்று ஒவ்வொரு வருடமும் குழந்தையின் படத்தை வரைந்து வருகிறார் சாய் பல்லவி.
கலைந்த கரு 5 ஆண்டுகளுக்கு பிறகு பேயாகி, கலைக்க காரணமாக இருந்தவர்களை பழிவாங்க வருகிறது.
கடைசியில் சாய்பல்லவியின் கணவர் நாக சௌரியாவையும் பழி வாங்க முயற்சி செய்கிறது.
அதை சாய் பல்லவி எப்படி தடுக்கின்றார் என்பதுதான் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
மலர் டீச்சராக கலக்கிய சாய் பல்லவி இதில் துளசியாக மணக்கிறார். தாயாகவும் சரி மனைவியாகவும் சரி நடிப்பில் ஓகே.
முகத்தை எப்போதுமே சோகமாக வைத்திருக்கிறார். அதுபோல் இவரது குழந்தையும்.
தியாவாக நடித்துள்ள வெரோனிகா அழகு செல்லம். ஆனால் பேச்சு குறைவு செயல் அதிகம்.
அதிக சத்தமில்லாமல் பேய் ஓய் என்று கத்தாமல் ஒவ்வொருவரையும் பழி வாங்கும் விதம் ரசிக்க வைக்கிறது.
நாக சௌரியா கேரக்டரில் அவ்வளவு அழுத்தமில்லை.
இவர்களைத் தவிர நிழல்கள் ரவி, ரேகா, சந்தான பாரதி ஆகியோரும் உண்டு.
தொழில்நுட்ப கலைஞர்கள்..
கேமரா மேன் நீரவ்ஷா படத்தின் பலம். தேவையான லைட்டிங்கை நீட்டாக கொடுத்து காட்சிகளை ரசிக்க வைத்து விடுகிறார்.
விக்ரம் வேதா படத்திற்கு பிறகு சாம் சிஎஸ் பாடல்களை ரசிக்கும் படி கொடுத்து வருகிறார். அதை இதிலும் மெய்ண்டென்ட் செய்துள்ளார்.
டைட்டில் சாங் மற்றும் பேய் தீம் மியூசிக் கலக்கல்.
இயக்கம் பற்றிய அலசல்…
அந்த தியா குழந்தை தன் மரணத்திற்கு காரணமான எல்லாரையும் பழி வாங்குகிறது. ஆனால் தன் அம்மா சாய்பல்லவியை (துளசி) மட்டும் பழி வாங்கவில்லை.
திருமணத்திற்கு முன் அவரது அம்மா சாய் பல்லவியும்தானே தவறு செய்திருக்கிறார். அவரை ஏன் கொல்லவில்லை டைரக்டர் சார்.?
படத்தின் இறுதியில் கருவிலே கலைக்கப்படும் குழந்தைகளில், இந்திரா காந்தியோ, சச்சின் டெண்டுல்கரோ போன்ற சாதனையாளர்கள் உருவாகலாம் என்கிறார் டைரக்டர். அது இருக்கட்டும். அதற்காக திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் ஆகலாமா..?
முறையற்ற உறவால் உருவாகும் கரு சில நேரங்களில் கலைக்கப்படுவது கூட சரியே. காரணம் தவறான முறையில் பிறந்து, குப்பைத் தொட்டியிலும், சாக்கடைகளிலும் வீசப்படும் எத்தனையோ குழந்தைகளை பார்க்கிறோம்.
அந்த குழந்தை அம்மா அம்மா என்று மட்டுமே அடிக்கடி சொல்கிறார். வருகிறாள். உட்காருகிறாள். பழி வாங்குகிறாள். இதுவே அடிக்கடி வருவதால் அதுவே ஒருவிதமான சலிப்பை தட்டுகிறது.
தியா… திடமான கரு திசைமாறிய உறவு