தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : பிரஜின், அஷ்மிதா, ரிச்சர்ட், கானா பாலா, நிஷாந்த், கருணாஸ், பாடகர் வேல்முருகன், காஜல், கூல் சுரேஷ், ஜெயசூர்யா, ஜெயராஜ் மற்றும் பலர்.
இயக்கம் : மோகன்.ஜி
இசை : ஜூபின்
ஒளிப்பதிவாளர் : பாருக்
பி.ஆர்.ஓ.: மௌனம் ரவி
தயாரிப்பாளர் : கிருஷ்ணா டாக்கீஸ்
கதைக்களம்…
பிரஜின் இன்ஜினியரிங் காலேஜ் மாணவன். இவருடைய காதலி அஷ்மிதா.
பிரஜின் ஜாலியாக தன் ஐந்து நண்பர்களுடன் சுற்றுவதை வாடிக்கையாக வைத்திருப்பவர்.
இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில், இவர்கள் இருக்கும் வண்ணாரப்பேட்டையில் ஒரு கொலை சம்பவம் நடக்கிறது.
சந்தேகத்தின் பேரில் பிரஜின் நண்பர்களில் ஒருவரை குற்றவாளியாக சிறையில் வைக்கிறது போலீஸ்.
இதனால் பிரஜீன், ஒரிஜினல் குற்றவாளியை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.
இதே சமயத்தில் நேர்மையான கமிஷ்னர் ரிச்சர்ட்டும் நிஜமான குற்றவாளியை தேடுகிறார்.
குற்றவாளியை முதலில் நெருங்கியது யார்? சிறையில் உள்ள நண்பர் என்ன ஆனார்? இடைத்தேர்தல் அமைதியாக நடந்ததா? என்பதே மீதிக் கதை.
கதாபாத்திரங்கள்…
மிகவும் யதார்த்த வண்ணாரப்பேட்டை பையனாக வருகிறார் பிரஜின். இவர்களுடன் இருக்கும் நண்பர்களும் கச்சிதம்.
ரிச்சர்ட் கம்பீரமாகவும் நேர்மையாகவும் நடித்திருக்கிறார்.
நிஷாந்த் இதில் நிறையவே ஸ்கோர் செய்கிறார்.
ஆனால் அஷ்மிதா இப்படத்தில் தேவைதானா? எனத் தெரியவில்லை. நாயகியே இல்லாமல் கதையை நகர்த்தியிருக்கலாம்.
பாடகர் வேல்முருகன், காஜல், கூல் சுரேஷ், கருணாஸ், கானாபாலா, ரோபோ சங்கர் ஏதோ வந்து போகிறார்கள். இவர்களை நன்றாக பயன்படுத்தியிருக்கலாம்.
படத்தின் ப்ளஸ்…
- பட்டறை குமார் கேரக்டரை கடைசி வரை தெரியாமல் ஆடியன்சுக்கு தெரியாமல் கொண்டு சென்றது ரசிக்க வைக்கிறது
- திரைக்கதை மற்றும் படமாக்கப்பட்டவிதம்
- பாடல்கள் மற்றும் பின்னணி இசை
படத்தின் மைனஸ்
- பார்ட் 2 எடுக்க வேண்டும் என்பதற்காக நிறைய கேரக்டர்களில் முடிவே இல்லை.
- ஹீரோ படிக்கும் மாணவன். அப்பா அம்மா இல்லை. அவர் நண்பர்களுக்கு செலவு செய்வது எப்படி?
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஜூபின் அவர்களின் பின்னணி இசை பாராட்டும்படி இருந்தாலும் சில இடங்களில் இரைச்சல் அள்ளுகிறது.
எல்லாம் பாட்டும் குத்து பாடலாய் இருப்பதால் காதல் பாடலை மெலோடியாக கொடுத்திருக்கலாம்.
ஃபாருக்கின் ஒளிப்பதிவை கொஞ்சம் ப்ரைட்டாக தந்திருக்கலாம்.
கொலைக் காரணத்தை தேடி, இருவர் பயணிப்பது பழகிய கதை என்றாலும் படமாக்கப்பட்ட விதத்தில் ரசிக்க வைக்கிறார் மோகன். வாழ்த்துக்கள்.
உயர்அதிகாரிகளின் கெடுபிடிகளால் அப்பாவிகள் குற்றவாளிகளாக ஆக்கப்படுவதை அசலாக காட்டியிருப்பது டைரக்டர் டச்.
பழைய வண்ணாரப்பேட்டையில் இன்னும் வண்ணம் சேர்த்திருக்கலாம்.