சிம்புவின் ‘பத்து தல’ ரிலீஸ் தேதி தள்ளி போகிறதா ?

சிம்புவின் ‘பத்து தல’ ரிலீஸ் தேதி தள்ளி போகிறதா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பத்து தல படத்தில் STR, கௌதம் கார்த்திக் ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டிசம்பர் 14 அன்று திரைக்கு வர திட்டமிடப்பட்டது, ஆனால் சமீபத்திய அறிக்கைகள் படி படக்குழு வெளியீட்டு தேதியை மாற்றியமைக்கப் போகிறது என்று கூறுகின்றன. முழு படப்பிடிப்பையும் தயாரிப்பாளர்கள் இன்னும் முடிக்கவில்லை.

ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர், அடுத்தகட்ட ஷெட்யூலை விரைவில் தொடங்க உள்ளனர். இந்நிலையில் பத்து தல படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் இறுதியில் முடிவாகும் என சொல்லப்படுகிறது.

TOP STAR & ROCK STAR.: பிரசாந்துடன் இணைந்த அனிருத் விஜய்சேதுபதி பிரபுதேவா

TOP STAR & ROCK STAR.: பிரசாந்துடன் இணைந்த அனிருத் விஜய்சேதுபதி பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டாப்ஸ்டார் பிரஷாந்த் நடித்துவரும் படம் ‘அந்தகன்’.

இந்த திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் ஏராளமான முன்னணி நடிகர்களுடன், தயாரித்து இயக்கி வருகிறார் நடிகரும், இயக்குனருமான தியாகராஜன்.

இதில் பிரசாந்துடன் சிம்ரன், வனிதா, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, ஆதேஷ்பாலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து வருகிறார்

இப்படம் முழுவதும் முடிந்த நிலையில் இறுதிகட்ட காட்சிக்காக “டோர்ரா புஜ்ஜி” என்ற பாடலை ராக்ஸ்டார் அனிருத் மற்றும் மக்கள் செல்வன் விஜயசேதுபதி இணைந்து பாடியுள்ளனர்.

இந்த பாடலுக்கு நடனம் அமைத்து இயக்க நடனபுயல் பிரபுதேவா இசைந்துள்ளார்.

பிரஷாந்த், அனிருத், சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் 50 நடன கலைஞர்கள் ஆடும் இந்த பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பாடல் காட்சி படமான உடனே ‘அந்தகன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற உள்ளது.

அதை தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ‘அந்தகன்’ படத்தை கலைப்புலி S தாணு அவர்கள் உலகமெங்கும் திரையிட திட்டமிட்டு வருகிறார்.

அந்தகன்

Anirudh VijaySethupathi Prabudeva teams up for Andhagan

‘தலைவர் 170’ படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள்

‘தலைவர் 170’ படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி இரண்டு படங்களுக்கு ஒரு தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்தார் என்றும், தற்காலிகமாக ‘தலைவர் 170’ என்று அழைக்கப்படும் முதல் படத்தை ‘டான்’ சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என்றும் நாங்கள் ஏற்கனவே உங்களுக்கு தெரிவித்திருந்தோம். ​​​​சமீபத்திய அப்டேட் என்னவென்றால் அரவிந்த் சாமி, வடிவேலு ஆகியோர் நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

‘தலைவர் 170’ படத்திற்கான பூஜை நவம்பர் 5ம் தேதி சென்னையில் நடக்கிறது. 1991-இல் வெளியான தளபதி படத்தில் அரவிந்த் சாமி அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வாரிசு’ படப்பிடிப்பில் குழந்தையுடன் இருக்கும் விஜய் – யாருடைய குழந்தை..?

‘வாரிசு’ படப்பிடிப்பில் குழந்தையுடன் இருக்கும் விஜய் – யாருடைய குழந்தை..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார்.

விஜய்யுடன், ரஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த படம் 2023 பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘வாரிசு’ படப்பிடிப்பில் நடிகர் விஜய் ஒரு குழந்தையுடன் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அந்த குழந்தை வேறு யாருடைய குழந்தை இல்லை அது படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவின் குழந்தை தான்.

மேலும், விஜய்யின் ரசிகர்கள் அந்த படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

vijay recent click with a child

கார் விபத்தில் நடிகை ரம்பா & குழந்தைகள்.; பிரார்த்தனை செய்ய வேண்டுகோள்

கார் விபத்தில் நடிகை ரம்பா & குழந்தைகள்.; பிரார்த்தனை செய்ய வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2000ம் ஆண்டுகளில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்பா. தமிழில் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார் ரம்பா.

‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் இவர் ஆட்டம் போட்ட ‘அழகிய லைலா…’ பாடல் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்காத பாடலாக இருக்கிறது.

இவர் கனடா நாட்டின் தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் படங்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பகிர்வார்.

இந்த நிலையில் நேற்று திடீரென ரம்பா தான் சென்ற கார் விபத்துக்கு உள்ளானதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோவுடன் பகிர்ந்துள்ளார்.

இந்த விபத்தில் தானும் தனது குழந்தைகளும் காயத்துடன் உயிர் தப்பியதாகவும் ஆனால் தனது மற்றொரு குழந்தை சாஷா மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

விரைவில் தன் மகள் குணமாக பிரார்த்தனை செய்யுங்கள் என கேட்டு கொண்டுள்ளார் ரம்பா.

வாடகைத்தாயை சில நடிகைகள் முயற்சி செய்ததால் பெரிதாகி விட்டது.. – வரலட்சுமி

வாடகைத்தாயை சில நடிகைகள் முயற்சி செய்ததால் பெரிதாகி விட்டது.. – வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை சமந்தாவின் அடுத்த படமான ‘யசோதா’-வில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஹரி & ஹரீஷ் இந்தப் படத்தை இயக்க, மூத்த தயாரிப்பாளரான சிவலெங்கா கிருஷ்ண பிரசாத், ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்த வருடம் நவம்பர் மாதம் 11ம் தேதி ஐந்து மொழிகளிலும் இந்தத் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.

வரலட்சுமியிடம் சில கேள்விகள்…

*’யசோதா’ கதை கேட்டதும் என்ன நினைத்தீர்கள்?*

முதலில் இதுபோன்ற கதையும் கதாபாத்திரங்களும் எப்படி எழுதினார்கள் என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதைப் பற்றி நான் இயக்குநர்களிடமும் கேட்டேன். ட்ரைய்லரில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் அமைதியாக இருக்கும்.

கதையின் போக்கில் தான் என்னுடைய எதிர்மறைத் தன்மை வெளிப்படும். எனக்கும் சமந்தாவுக்கும் இடையில் இருக்கும் உறவு பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டுவதாக அமையும்.

*படப்பிடிப்பின் போது என்ன மாதிரியான சவால்களை எதிர்கொண்டீர்கள்?*

பெரிய சவால்கள் எதுவும் இல்லை. சமந்தாவை போல பெரிய ஆக்‌ஷன் காட்சிகள் எனக்கு இல்லை. நடிகையாக மிகவும் அமைதியான கதாபாத்திரம் எனக்கு. நல்ல கதாபாத்திரம் கிடைக்கும்போது எனக்கு நானே சவாலாக எடுத்து கொள்வேன்.

*எந்த ஒரு விஷயம் ‘யசோதா’ படத்திற்கு உங்களை சம்மதிக்க வைத்தது?*

என்னுடைய கதாபாத்திரம் சமந்தாவுக்கு இணையாக கதையில் பயணித்துக் கொண்டே இருக்கும். யசோதாவிற்கு யாருடைய உதவியாவது அவளுடைய வாழ்க்கையில் வேண்டும் என்ற நிலையில் இருக்கும் போதுதான் என்னுடைய கதாபாத்திரம் உள்ளே வரும். இந்தக் கதை ஒரு அறிவியல் புனைவு.

*இந்தக் கதையில் நீங்கள் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறீர்களா?*

இல்லை. ட்ரைய்லரில் நீங்கள் பார்த்தது போல வாடகைத் தாய் மையத்தின் தலைவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

என்னுடைய கதாபாத்திரம் வசதியான பணத்தை விரும்பக்கூடிய ஒருவள். என்னுடைய உண்மையான குணாதிசியம் வாழ்க்கை முறை, நான் உடுத்தும் உடை என பலவற்றில் இருந்தும் இந்தக் கதாபாத்திரம் முற்றிலும் வேறானது.

*ஹரி & ஹரிஷூடன் வேலை பார்த்த அனுபவம் எப்படி இருந்தது?*

இரண்டு இயக்குநர்களும் மிகவும் அமைதியானவர்கள். இதுபோன்ற அமைதியான இயக்குநர்களை இதற்கு முன்பு நான் பார்த்தது இல்லை. ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்தும் அவர்கள் வலுவான ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதும் தெரியும். ‘யசோதா’ படத்தில் இருக்கும் பல கதாபாத்திரங்களை பெண்கள் தங்களோடு ஒப்பிட்டுக் கொள்வார்கள்.

*படத்தின் தொழில்நுட்பக் குழு பற்றி சொல்லுங்கள்?*

படத்தின் ஒளிப்பதிவை மிக அழகாக சுகுமார் கையாண்டிருக்கிறார். இந்தப் படத்தில் இசை மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. மணிஷர்மா சார் அதைத் திறமையாக செய்திருக்கிறார். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு படம் நிச்சயம் மதிப்பு மிக்கதாக அமையும்.

திரையில் பார்த்து அனுபவிக்கும் வகையிலான காட்சிகளும் கதையும் இருக்கிறது. எங்கள் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் சார் மிகப்பெரிய அளவிலான பட்ஜெட்டை இந்தப் படத்திற்காகக் கொடுத்திருக்கிறார். படத்தில் அசோக்கின் செட் பார்க்கும் போதே தெரிய வரும்.

*வாடகைத்தாய் குறித்தான நிறைய விவாதங்கள் தற்போது இந்தியாவில் போய்க் கொண்டிருக்கிறது. படம் அதை பற்றியதாக இருக்குமா?*

வாடகைத்தாய் முறை என்பது அத்தனை சிக்கலானது கிடையாது. சில நடிகர்கள் அதை முயற்சி செய்ததால் அது மிகப் பெரிய விஷயமாக மாறி விட்டது.

வாடகைத்தாய் என்பது படத்தில் ஒரு வரிதான். அதன் நன்மை தீமை பற்றி நாங்கள் விவாதிக்கவில்லை. இது கற்பனைக் கதை என்று நினைப்பவர்களுக்கு இது போன்ற சில மனிதர்களும் உண்மையில் இருக்கிறார்கள் என்பதை காண்பித்து இருக்கிறோம்.

*’யசோதா’ படத்தில் உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் எது?*

என்னுடைய கதாபாத்திரத்தின் ஆழம் பிடிக்கும். யசோதா கதாபாத்திரம் மிகவும் வலுவானது. சமந்தா அதற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார். எனக்குப் படத்தில் எல்லாக் கதாபாத்திரங்களும் பிடிக்கும். ஏனென்றால் கதைதான் படத்தின் ஹீரோ.

*சமந்தாவுடன் முதல் முறையாக வேலைப் பார்த்த அனுபவம் எப்படி இருந்தது?*

சமந்தாவை சென்னையில் சந்தித்ததில் இருந்து கடந்த பத்து- பன்னிரெண்டு வருடங்களாகவே எனக்குத் தெரியும். செட்டில் ஜாலியாக இருந்தோம். அவர் ஒரு வலுவான பெண்மணி. இந்தக் கதாபாத்திரத்தில அவர் வாழ்ந்திருக்கிறார்.

*உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?*

‘க்ராக்’ படத்தில் ஜெயாம்மா கதாபாத்திரத்திற்குப் பிறகு எனக்கு நடிப்பதற்குப் பல நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தது. எனக்காக சிறப்பான கதாபாத்திரங்களை எழுதுகிறார்கள் என்பது மகிழ்ச்சியான ஒன்று. தெலுங்கு படங்களுடன் இப்போது நான் நன்றாக ஒன்றி விட்டேன். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பது இல்லை என்பதும் ஆறுதல்.

*உங்களுடைய அடுத்த படங்கள் என்னென்ன?*

‘சபரி’ படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். நந்தமூரி பாலகிருஷ்ணா சாரின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தில் முக்கிய கதாபாத்தில் நடிக்கிறேன் மற்றும் சில படங்கள் கைவசம் இருக்கிறது.

More Articles
Follows