தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஷால் தயாரித்து நடித்துள்ள படம் இரும்புத்திரை. இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் விஷால், சமந்தா, இயக்குநர் P.S. மித்ரன், இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், தயாரிப்பாளர் 5ஸ்டார் கதிரேசன், இயக்குநர் திரு, ரோபோ சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள அர்ஜுன் பற்றி விஷால் கூறியதாவது…
என்னுடைய குருநாதர் (அர்ஜுன் ) முதலில் படத்திற்கு ஒப்புக்கொண்டு என் அப்பாவிற்கு தொலைபேசியில் இந்த பையன நான் ஹீரோவா ஆக்கினா இவன் என்னைய வில்லனா மாத்திடான் அப்படின்னு சொல்லிட்டார்.
ஏனா அவர் தான் எனக்கு உக்கம் கொடுத்து செல்லமே படத்தில் என்னை ஹீரோவாக உருவாக்கினர். ரொம்ப நன்றி அர்ஜுன் சார்.
எங்க ரெண்டு பேருக்கும் க்ளைமாக்ஸ் சண்டை காட்சி ஒன்று உள்ளது. அதை ரெண்டு பேரும் ரொம்ப ரசித்து எடுத்துள்ளோம்.
படத்தின் கடைசி 30 நிமிட காட்சிகள் மிக சிறப்பாக அமைத்துள்ளது.” என்றார்.