தன் பெயரையே குழந்தைக்கு சூட்டிய விஷால்

தன் பெயரையே குழந்தைக்கு சூட்டிய விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal kidநாளை ஆகஸ்ட் 29ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் விஷால்.

இதனை முன்னிட்டு இவரது கத்தி சண்டை படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாவது குறித்து நாம் முன்பே பார்த்தோம்.

இந்நிலையில் இன்று திருவல்லிக்கேணி அரிமா சங்கம் மற்றும் M.P.S.பாலி கிளினிக் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச குழந்தைகள் நலச் சிறப்பு மருத்துவ முகாமை விஷால் துவக்கி வைத்தார்.

அப்போது அந்த மருத்துவ முகாமில் ஒரு குழந்தைக்கு பெயரிட வேண்டினர் ஒரு பெற்றோர்.

அக்குழந்தைக்கு விஷால் தேவி என பெயரிட்டார் விஷால்.

தேவி, விஷாலின் தாயார் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்-விஜய்க்கு 40…. சிவகார்த்திகேயனுக்கு 10

அஜித்-விஜய்க்கு 40…. சிவகார்த்திகேயனுக்கு 10

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan stillsதல-தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அஜித், விஜய் இருவரும் தற்போதைய தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரங்கள்.

இதனால் இவரது படங்களுக்கு நல்ல மார்கெட் வேல்யூ உள்ளது.

இந்நிலையில் வளர்ந்து வரும் முன்னணி ஹீரோவான சிவகார்த்தியேனின் படத்திற்கும் நல்ல மார்கெட் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

விரைவில் வெளியாக உள்ள ரெமோ படம் இதுவரை ரூ. 35 கோடி வரை விற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

அஜித்,விஜய் ஆகியவர்களின் படங்கள் இந்த வியாபாரத்தை தொட 40 படங்கள் வரை தேவைப்பட்டது.

ஆனால் குறுகிய காலத்தில் சிவகார்த்திகேயன் இந்த வியாபாரத்தை எட்டியிருக்கிறார்.

ரெமோ படம் சிவகார்த்திகேயனின் 10வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் சியின் பிரம்மாண்ட படத்திற்கு ஹீரோ சிக்கிட்டாரு

சுந்தர் சியின் பிரம்மாண்ட படத்திற்கு ஹீரோ சிக்கிட்டாரு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sundhar cஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தன் 100வது படத்தை ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளது.

இப்படத்தை சுந்தர் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

‘சங்கமித்ரா’ என்ற பெயரிடப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், கலை இயக்குனராக சாபுசிரில், கிராபிக்ஸ் இயக்குனராக கமலக்கண்ணன், ஒளிப்பதிவாளராக சுதீப் சட்டர்ஜி ஆகியோரும் இணைந்துள்ளனர்.

இவர்களைத் தவிர்த்து, மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் வரை முடிவாகி விட்டாலும் இப்படத்திற்கு ஹீரோ சிக்காமல் இருந்தார்.

விஜய், சூர்யா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது.

ஆனால் ஹீரோவுக்கான தேடல் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் உள்ள இப்படத்தில் ஒரு ஹீரோவாக நடிக்க தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

மற்றொரு ஹீரோ யார்? அவரும் டோலிவுட் நாயகனா? அல்லது கோலிவுட் நாயகனா? என்பது விரைவில் தெரிய வரும்.

பிறந்தநாளை முடித்துவிட்டு விஷாலின் அடுத்த திட்டம்

பிறந்தநாளை முடித்துவிட்டு விஷாலின் அடுத்த திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishalநாளை மறுநாள் ஆகஸ்ட் 29ம் தேதி விஷால் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

எனவே, அன்று சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கத்தி சண்டை படத்தின் சிங்கிள் டராக்கை வெளியிடுகின்றனர்.

”நான் கொஞ்சம் கருப்பு தான்” என்று இப்பாடலுக்கு இசை ஹிப்ஹாப் ஆதி.

இதனையடுத்து, செப்டம்பர் 12ம் தேதி முதல் மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

சிவகார்த்திக் இயக்கத்தில் ஹீரோவாக ஆதித்யா டிவி அஸார்

சிவகார்த்திக் இயக்கத்தில் ஹீரோவாக ஆதித்யா டிவி அஸார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

adithya tv azharமதுரையில இருக்கற பையனுக்கு மத்த பசங்க மாதிரி ஒரு பொண்ணுங்க கூட கடலை போட ஆசை.

சென்னை போனா தன்னோட ஆசை நிறைவேறிடும்னு கிளம்புறான். சென்னை அவனோட ஆசை சென்னையில் ஒர்க் அவுட் ஆச்சா என்ற முடிவுவோடு தயாராகியுள்ள படம் ‘கடலை போட பொண்ணு வேணும்’.

’ரீங்காரம்’ என்ற படத்தை முடித்துவிட்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சிவகார்த்திக்.

இவர் சமுத்திரகனி, சிஜே.பாஸ்கர், சுரேஷ், மூர்த்தி ஆகிய இயக்குனர்களிடம் பணிபுரிந்தவராம்.

ரீங்காரம் படத்தை தயாரித்த ஆர்ஜி மீடியா-  ராபின்சன் இப்படத்தையும் தயாரித்திருக்கிறார்.

ஆதித்யா டிவி தொகுப்பாளர் அஸார் ஹீரோவாக நடிக்க மனீஷா ஹீரோயினாக நடிக்கிறார்.

இவர்களுடன் படவா கோபி, லொள்ளுசபா சுவாமிநாதன், லொள்ளுசபா மனோகர், ஃபைட்டர் தினா ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவை இஎன்ஜே ஹரீஷ் கவனிக்க, இசையமைக்கிறார் சுதர்சன்.

இதனையடுத்து பலசாலி என்ற படத்தை இயக்க ஆரம்பித்து விட்டார் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் விலகிய கேப்பில் கிடா(ரி) வெட்டும் சசிகுமார்

விக்ரம் விலகிய கேப்பில் கிடா(ரி) வெட்டும் சசிகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sasikumarஆனந்த சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த இருமுகன் படம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகும் என முதலில் கூறப்பட்டது.

அதன்பின்னர் செப்டம்பர் 8ஆம் தேதிக்கு இப்பட ரிலீஸ் தள்ளிப்போனது.

மேலும் செப்டம்பர் முதல் வாரத்திற்கு பெரிய படங்கள் எதுவும் இல்லாததால், கிடைத்த கேப்பில் தன் கிடாரியை விட முடிவு செய்துள்ளார் சசிகுமார்.

இப்படத்திற்கு UA சர்டிபிகேட் கிடைத்துள்ள நிலையில் செப்டம்பர் 2ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவித்துள்ளனர்.

பிரசாந்த் முருகேசன் இயக்கியுள்ள இப்படத்தில் நிகிலாவிமல், நெப்போலியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நடிகர் தர்புகா சிவா இப்படம் மூலம் இசையமைப்பாளர் ஆகிறார்.

சசிகுமாரின் கம்பெனி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது.

More Articles
Follows