தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தன் தந்தை ஒரு தயாரிப்பாளராக இருந்தாலும் ஒரு டைரக்டர் ஆக வேண்டும் என சினிமா துறைக்கு வந்தவர் விஷால்.
எனவேதான் நடிகர் அர்ஜீனிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்.
ஆனால் அர்ஜீன் சிபாரிசின் பேரில் நடிகராக மாறினார்.
பின்னர் நடிப்பு, தயாரிப்பாளர் என பயணிக்க ஆரம்பித்த இவரின் 25வது படம் சண்டக்கோழி2.
தற்போது தெலுங்கு டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்கான அயோக்யா என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால்.
இதனையடுத்து 25 படங்களை நடிகராக முடித்துவிட்டு முதன்முறையாக ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.
இதில் த்ரிஷாவை நாயகியாக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படம் முழுக்க விலங்குகளை மையப்படுத்தை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சமர் என்ற படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்தவர் த்ரிஷா. தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.