தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மெட்ரோ சிட்டி கதைகளுக்கு உள்ள வரவேற்பை போன்றே கிராமத்து கதைகளுக்கும் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
பெரும்பாலும் கிராமத்து கதைகள் அனைத்து தரப்பினரையும் கவரும்.
எனவே நம்ம ஹீரோக்கள் இரண்டு விதமான கதைகளிலும் மாறி மாறி நடித்து வருகின்றனர்.
விஜய் 62 படத்தில் கிராமம் மற்றும் நகரம் என இரண்டு விதமான கதைகள் இருக்கிறது.
முக்கியமாக விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையை உருவாக்கியிருக்கிறார்களாம்.
அஜித்தின் விஸ்வாசம் படமும் கிராமத்து பின்னணியை கொண்ட படம் என்றே தெரிய வந்துள்ளது.
இவையில்லாமல் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், விஷாலின் சண்டக்கோழி2, சிவகார்த்திகேயனின் சீமராஜா, உதயநிதியின் கண்ணே கலைமானே ஆகிய படங்களும் கிராம கதைகளை குறி வைத்தே உருவாகுகிறது.
மேலும் சமுத்திரக்கனியின் வெள்ளை யானை, அமீர் நடிக்கும் அச்சமில்லை அச்சமில்லை, காக்காமுட்டை மணிகண்டன் இயக்கும் கடைசி விவசாயி உட்பட பல படங்கள் விவசாயம் சார்ந்த கதைகளாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Tamil cinema top heroes concentrate on Village subjects