தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கும்கி படத்தில் அறிமுகமாகி அதிரடி வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் விக்ரம் பிரபு.
தற்போது இவரது நடிப்பில் வீர சிவாஜி மற்றும் வாகா படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.
இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை விக்ரம் பிரபு தொடங்கியுள்ளார்.
பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் என தன் நிறுவனத்திற்கு பெயரிட்டுள்ளார். இதன் முதல் தயாரிப்பாக நெருப்புடா என பெயரிட்டுள்ளார்.
இப்படத்தை, “சந்திரா ஆர்ட்ஸ்” (Chandaraa Arts) மற்றும் “சினி இன்னோவேஷன்ஸ்” (Cine Innovations) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கிறார்.
இதில் தீயணைப்பு வீரராகவும், தீவிர ரஜினி ரசிகராகவும் நடிக்கிறார் விக்ரம் பிரபு.
இவருடன் நிக்கி கல்ராணி, பொன்வண்ணன், “நான் கடவுள்” ராஜேந்திரன், “ஆடுகளம்” நரேன், மதுசூதன் ராவ், நாகிநீடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
அசோக் குமார் இப்படத்தை இயக்க, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ரோக்கேஷ் பாடல்களை எழுதுகிறார். ஆர். டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, கலையை எம் பிரபாகரன் கவனிக்கிறார்.
ரஜினியின் கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா பாடல் டிரெண்ட்டாகி வரும் நிலையில் ஒரு படத்திற்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.