நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்.; திரையுலகினர் – ரசிகர்கள் இரங்கல்

நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்.; திரையுலகினர் – ரசிகர்கள் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி நடிகர் நடிகர்களில் ஒருவர் டி எஸ் பாலையா. இவர் மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இவரது மகன் ரகு பாலையாவும் சினிமாவில் நடித்து வருகிறார்.

தனது இயற்பெயரை ஜூனியர் பாலையா என்று மாற்றிக்கொண்டு பல படங்களின் நடித்து வந்தார்.

1975-ல் ‘மேல்நாட்டு மருமகள்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வந்தார். முக்கியமாக பாக்யராஜ் படங்களில் இவரது காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.

மேலும் சுந்தரகாண்டம், கோபுர வாசலிலே, வின்னர், கும்கி ஆகிய படங்களிலும் இவரது நடிப்பு பேசப்பட்டது.

‘சாட்டை’ படத்தில் பள்ளி தலைமை ஆசிரியராக நடித்திருந்தார்.்இந்த கேரக்டரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

சினிமா மட்டுமல்லாமல் ‘சித்தி’ மற்றும் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்து வந்தார்.

இறுதியாக ‘என்னங்க சார் உங்க சட்டம்?’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு நடிப்புக்கு ஓய்வு கொடுத்து வந்திருந்த நிலையில் இன்று நவம்பர் 2ஆம் தேதி காலமானார் ஜூனியர் பாலையா. சென்னை வளசரவாக்கத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

ஜூனியர் பாலையாவின் மறைவு திரையுலகினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகினர் ஜூனியர் பாலையா மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Comedy Actor Junior Balaiya passes away

ரஜினியின் அடுத்த குட்டி ஸ்டோரி.; காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஐஸ்வர்யா-வின் மெகா ட்ரீட்

ரஜினியின் அடுத்த குட்டி ஸ்டோரி.; காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஐஸ்வர்யா-வின் மெகா ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமலுக்கு ரஜினி போட்டி… அஜித்துக்கு விஜய் போட்டி என்ற நிலை மாறி தற்போது ரஜினிக்கு போட்டி விஜய் என்ற அளவில் சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் ரஜினிக்கு எதிராக கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

விஜய்யே இதை பற்றி கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில் ரஜினி பேசும் மேடைப் பேச்சும் விஜய் பேசும் மேடைப் பேச்சையும் ஒன்றோடு ஒன்றாக ஒப்பீடு செய்து சமூக வலைத்தளங்களில் மோதிக் கொள்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ‘ஜெயிலர்’ பட இசை வெளியீட்டு விழாவில் கழுகு – காக்கா கதை குறித்து பேசி இருந்தார் ரஜினிகாந்த். இது விஜய்யை குறிப்பிடுவதாக ரசிகர்கள் சர்ச்சையான கமெண்ட்டுகளை பதிவிட்டு வந்தனர்.

நேற்று நடந்த ‘லியோ’ படத்தின் வெற்றி விழாவில் யானை கதையை பேசியிருந்தார் விஜய்.

இந்த நிலையில் ரஜினியின் அடுத்த மேடைப்பேச்சு என்னவாக இருக்கும்? என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘லால் சலாம்’ படம் அடுத்த 2024 பொங்கல் தினத்தில் வெளியாகிறது. ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர்.

மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார் ரஜினி. மேலும் முக்கிய வேடத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் நடித்துள்ளார்.

ரகுமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இந்த நிலையில் ‘லால் சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 2 அல்லது 3ம் வாரத்தில் சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் என தகவல்கள் வந்துள்ளன.

நிச்சயம் இதில் தன் மகள் ஐஸ்வர்யாவுக்காக ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு மேடையேறி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஞானவேல் இயக்கும் ‘தலைவர் 170’ படத்தில் ரஜினிகாந்த் தற்போது பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinis next stage speech at Lal Salaam Audio launch

உயரப் பறந்தாலும் கழுகு கீழே வந்துதான் ஆகனும்.. – ரத்னகுமார்.; பதிலடி கொடுக்கும் ரஜினி ரசிகர்கள்

உயரப் பறந்தாலும் கழுகு கீழே வந்துதான் ஆகனும்.. – ரத்னகுமார்.; பதிலடி கொடுக்கும் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கழுகு – காக்கா கதை குறித்து பேசி இருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.

கழுகு – காக்கா எப்போது தொந்தரவு செய்து கொண்டே இருக்கும்.்ஆனால் கழுகு மேலே உயர பறந்து பறந்து கொண்டே இருக்கும் என்று பேசி இருந்தார். ரஜினி தன்னை கழுகாகவும் அவர் வேறு ஒரு நடிகரை காக்கா என சொன்னதாகவும் சிலர் தகவல்களை பரப்பி வந்தனர்.

விஜய் ரசிகர்கள் தாங்களாகவே தங்கள் நடிகரைப் பற்றி எடுத்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் ‘லியோ’ படத்தின் வெற்றி விழா மேடையில் ரத்தினகுமார் பேசியதாவது…

“என்னதான் கழுகு உயரே பறந்து கொண்டு இருந்தாலும் பசிக்காக கீழே வந்து தான் ஆக வேண்டும்” என பேசினார்.

இதனையடுத்து ரஜினியை அவர் தாக்கி விட்டார் என விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் இதற்கும் சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.. கழுகு வேட்டையாட தான் கீழே வரும்” என கழுகு புகைப்படங்களை பதிவிட்டு விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Eagle and Crow story Rajini Vijay fans fights goes viral

தல ஒருத்தர் தான்.; சூப்பர் ஸ்டார் யார்.? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்

தல ஒருத்தர் தான்.; சூப்பர் ஸ்டார் யார்.? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை நேரு ஸ்டேடியத்தில் விஜய் நடித்த ‘லியோ’ படத்தின் வெற்றி விழா ரசிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.

சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் பட்ட த்திற்கு விஜய் போட்டி இடுகிறார் என பரவலாக பேசப்பட்டது. மேலும் ‘வாரிசு’ பட தயாரிப்பாளர், நடிகர் சரத்குமார் ஆகியோர் விஜய்யை சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு பேசி இருந்தனர்.

இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் மன உளைச்சலை உண்டாக்கியது. மேலும் விஜய் ரசிகர்களும் இதனை ட்ரெண்ட் செய்து ரஜினி ரசிகர்களை வெறுப்பேற்றி வந்தனர்.

ஆனால் விஜய் ஏதும் மறுப்பு தெரிவிக்காத நிலையில் நேற்று லியோ வெற்றி விழாவில் சூப்பர் ஸ்டார் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய்.

அவர் பேசும்போது…

புரட்சி தலைவர் ஒருத்தர்தான்.. நடிகர் திலகம் ஒருத்தர்.., புரட்சி கலைஞர் கேப்டன் ஒருத்தர் தான், உலக நாயகன் ஒருத்தர்தான், சூப்பர் ஸ்டார் ஒருத்தர்தான், தல ஒருத்தர்தான்…தளபதி க்கு அர்த்தம் தெரியுமா… நீங்க மன்னர்கள் நீங்க ஆணையிடுற விஷயங்களை நான் செய்யற நான் தளபதி” என்றார்.

Vijay end game for Superstar controversy

நேற்று ‘லியோ’ மேடையில் பேச்சு.; இன்று சோசியல் மீடியாவை விட்டு விலகிய ரத்னகுமார்

நேற்று ‘லியோ’ மேடையில் பேச்சு.; இன்று சோசியல் மீடியாவை விட்டு விலகிய ரத்னகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2017-ஆம் ஆண்டு வைபவ்- பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மேயாத மான்’.

இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரத்னகுமார்.

இதைத்தொடர்ந்து அமலாபால் நடிப்பில் ‘ஆடை’ படமும், சந்தானத்தின் ‘குலுகுலு’ படத்தையும் இயக்கி இருந்தார். இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

ரத்னகுமார் படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் உள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றி இருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

இதைத்தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விஜய்யின் ‘லியோ’ படத்திலும் பணியாற்றியுள்ளார்.

இந்த படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது.

இந்நிலையில், இயக்குனர் ரத்னகுமார் தனது X-ட்விட்டர் வலைதளத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எழுதுவதற்காக ஆஃப் லை செல்கிறேன். என் அடுத்த பட அறிவிப்பு வரை சமூக வலைதளத்தில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

நேற்று விஜய்யின் ‘லியோ’ படத்தின் வெற்றி விழாவில்..

கழுகு உயரே பறந்தாலும் பசிக்காக கீழே வந்து தான் ஆக வேண்டும்” என ரத்னகுமார் பேசியிருந்தார்.. அவரது பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததும் இங்கே கவனிக்கத்தக்கது.

Rathna Kumar on taking a break from social media

பிசினஸ்மேன் டூ டைரக்டர்.; ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் ‘ஈ-மெயில்’

பிசினஸ்மேன் டூ டைரக்டர்.; ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் ‘ஈ-மெயில்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘ஈமெயில்’.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையும் சமீபகாலமாக தமிழ், தெலுங்கில் கவனம் பெற்றுள்ளவருமான ராகினி திவேதி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக முருகா அசோக்குமார் நடித்துள்ளார்.

2வது நாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார்.

மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர்.

காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக இந்த படம் தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் உருவாகி உள்ளது.

அவினாஷ் கவாஸ்கர் இப்படத்திற்கு இசையமைக்க திரௌபதி புகழ் ஜுபின் பின்னணி இசை மேற்கொண்டு இருக்கிறார்.

கன்னட சினிமாவில் கிட்டத்தட்ட 20 படங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்ட செல்வம் மாதப்பன் இப்படத்தின் ஒளிப்பதிவைக் கவனித்துள்ளார்.

வேலையில்லா பட்டதாரி, நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராஜேஷ் குமார் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

நாயகிக்கு திடீரென ஒரு ஈமெயில் வருகிறது. அதில் குறிப்பிட்ட லிங்க்கை கிளிக் செய்து விளையாடினால் மிகப்பெரிய பரிசு காத்திருப்பதாக சொல்லப்பட, அந்த விளையாட்டிற்குள் இறங்கிய கதாநாயகி எதிர்பாராத விதமாக ஒரு மாஃபியா கேங்கில் சிக்கிக் கொள்கிறார்.

ஈமெயில்

இதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதை. சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டுக்களில் நடக்கும் மோசடிகளையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் மையப்படுத்தி இந்த படத்தின் கதையை உருவாக்கி உள்ளார்கள்.

இந்த படம் குறித்தும் படப்பிடிப்பு அனுபவங்கள் மற்றும் ரிலீஸ் குறித்தும் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான எஸ்.ஆர் ராஜன் கூறும்போது,

“ஒரு பிசினஸ்மேனாக இருந்துக் கொண்டு படம் தயாரிக்கும் ஆர்வத்தில் சினிமாவிற்கு வந்தேன். ஆனால் இங்குள்ள சூழ்நிலை என்னை ஒரு இயக்குநராகவே மாற்றி விட்டது. என்னாலும் முடியும் என்கிற வெறியுடன் கதை மீதுள்ள நம்பிக்கையில் இந்த படத்தை இயக்கியுள்ளேன்.

ஆரம்பத்தில் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் நான் புதியவன் என்பதால் கொஞ்சம் சிரமங்களைக் கொடுத்தனர்.

அதேசமயம் படப்பிடிப்பில் நான் இந்த படத்தை உருவாக்குவதைப் பார்த்து போகப்போக அவர்களே எனக்கு ஒத்துழைப்பு கொடுக்கத் தொடங்கினர்.

கதாநாயகியை மையப்படுத்திய இந்த படத்தின் கதையை பல முன்னணி நடிகைகளிடம் கூறினேன். ஆனால் அவர்கள் யாருமே கதை கேட்க கூட முன்வரவில்லை. அதே சமயம் நடிகை ராகினி திவேதி மிகப்பெரிய மனதுடன் கதை கேட்க ஒப்புக்கொண்டார்.

கதையைக் கேட்டு முடித்ததும் சில நாட்கள் கழித்து அழைத்து நீங்கள் கூறிய கதையை அப்படியே படமாக எடுப்பீர்களா என்று மட்டும் கேட்டார். அவர் எதிர்பார்த்தபடியே அவரிடம் சொன்ன கதையை அப்படியே படமாக்கி இருக்கிறேன்.

இடையில் படப்பிடிப்பு சமயத்தில் வெவ்வேறு விதமான பிரச்சனைகளும் இடைஞ்சல்களும் ஏற்பட்டன.

இந்த படத்தின் படப்பிடிப்பை தமிழ்நாடு, பாண்டிச்சேரி, மைசூர், கேரளா, கோவா மற்றும் மும்பை என பல இடங்களில் நடத்தினோம்.

மொத்தம் 56 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பில் பாண்டிச்சேரியில் 3 நாட்களும் கோவாவில் 7 நாட்களும் மிகப்பெரிய மழை பெய்து எங்களை ஷூட் செய்யவிடாமல் தடுத்தது.

ஈமெயில்

இதனால் கால்ஷீட் மாற்றங்கள் ஏற்பட்டாலும் அந்த சமயத்தில் கிக், போலோ சங்கர் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வந்த ராகினி திவேதி எங்கள் மீது உள்ள நம்பிக்கையால் மீண்டும் எங்களுக்கு தேவைப்பட்ட கால்ஷீட்டை கொடுத்து உதவி நடித்தார்.

ஒரு சண்டைக் காட்சியின் போது பாம் பிளாஸ்ட் நடைபெற்று நாயகியின் காலில் ஆறு தையல் போட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் கன்னட திரை உலகினர் சிலர் திரண்டு வந்து பிரச்சனை உருவாவது போன்ற சூழலில் நடிகை ராகினி திவேதி தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டு படப்பிடிப்பில் தொடர்ந்து நடித்து ஒத்துழைப்பு கொடுத்தார்.

அதேபோல முருகா அசோக் குமாரும் காதில் அடிபட்டு ரத்தம் வழிந்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தையல் போட்டு அப்படியே படப்பிடிப்புக்கு திரும்பி மூன்று நாட்கள் இடைவிடாமல் நடித்துக் கொடுத்துவிட்டுத் தான் கிளம்பிச் சென்றார்.

இந்த படத்தில் மனோபாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கான இரண்டே காட்சிகள் மட்டும் படப்பிடிப்பு நடக்க வேண்டிய நிலையில் தான் உடல்நிலை சரியில்லை எனக் கூறி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

அதன்பிறகு அவர் உடல் நிலை உடல்நலக் குறைவு காரணமாக எதிர்பாராத விதமாக காலம் ஆகிவிட்டார்.

ஆனால் அதற்கு முன்பாகவே அவர் நடித்த காட்சிகளுக்கு அவரையே டப்பிங் பேச வைத்து நிறைவு செய்து விட்டேன்.

தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்து சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் கன்னடம் என இரண்டு மொழிகளிலும் இந்தப்படம் ரிலீஸுக்கு தயார் நிலையில் படம் இருக்கிறது.

இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘இனி உத்திரம்’ என்கிற படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குகிறார் இயக்குநர் எஸ்.ஆர் ராஜன்.

இதில் நடிக்க முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தையில் உள்ளோம்., வரும் ஜனவரியில் இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது என தனது அடுத்த படத்திற்கான முக்கிய தகவல்களையும் அறிவித்துள்ளார் இயக்குநர் எஸ்.ஆர். ராஜன்.

ஈமெயில்

Email movie speaks about Online Games

More Articles
Follows