தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தேமுதிக கட்சியைச் சேர்ந்த பிரமுகர் இல்லத்திருமணம் காரைக்குடியில் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினர்.
நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில்…
”சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தோல்வி அடைந்து விட்டதால் சோர்வடைந்து விட்டதாக கூறுகின்றனர்.
விஜயகாந்த் படங்களில் நடிக்கும்போது வில்லனிடம் அடி வாங்கி கீழே விழுவார். பிறகுதான் எழுந்து நின்று திருப்பி அடிப்பார்.
அதுபோல் மீண்டும் எழுந்து வருவார். தேமுதிக வெற்றி பெறும்.
நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான். ஆனால், கைவிட மாட்டார். கெட்டவங்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார். ஆனால் ஒருநாள் கைவிட்டு விடுவார்” என்று பேசினார்.
நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்… என்ற இந்த பன்ச் டயலாக் பாட்ஷா படத்தில் ரஜினி பேசியிருப்பார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.