தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
20 வருடங்களுக்கு முன்பு 2002 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் வெளியான திரைப்படம் ‘பாபா’.
ரஜினிகாந்த் கதை திரைக்கதை எழுதி தயாரித்து நடித்திருந்தார்.
அண்ணாமலை – வீரா – பாட்ஷா ஆகிய ஹாட்ரிக் வெற்றிக்கு பிறகு ‘பாபா’ படத்தை இயக்கியிருந்தார் சுரேஷ் கிருஷ்ணா.
அந்த நாட்களில் இதுபோல ஒரு பரபரப்பை எவரும் கண்டதில்லை என்ற அளவிற்கு ‘பாபா’ பரபரப்பாக பேசப்பட்டது.
இதுதான் 2Kவில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் ரஜினி படமாகும்.
இந்த நிலையில் ‘பாபா’ படத்தை விரைவில் ரீ-ரீலீஸ் செய்ய உள்ளதாக வந்த தகவல்கள் தகவல்களை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.
இந்த ஐடியாவை கொடுத்ததே ரஜினி தான் என சுரேஷ் கிருஷ்ணா சமீபத்திய ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் ‘காந்தாரா’ படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதுவும் ஒரு பேண்டஸி படம்தான். மேலும் தமிழில் ஃபேன்டசி படங்கள் வந்து வருட கணக்கில் ஆகிவிட்டது.
எனவே ‘பாபா’ படத்தை ரீ-ரீலீஸ் செய்ய வேண்டும் என ரஜினி விருப்பப்பட்டாராம்.
இந்த நிலையில் ‘பாபா’ படத்தை தனது தியேட்டரில் அதிகாலை 4 மணி காட்சிக்கு திரையிட உள்ளதாக சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதுப்படங்கள் மட்டுமே அதிகாலை நள்ளிரவு 1 மணி காட்சி 4 மணி காட்சி என திரையிடப்படும்.
தற்போது 20 வருடங்களுக்குப் பிறகு பாபா ரிலீஸ் என்றாலும் அதற்கு அதிகாலை 4Am காட்சி என்பது திரையுலகை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் உலக சினிமா சரித்திரத்தில் ரீ-ரீலிஸில் முதல் படம் எனலாம்.
மேலும் ‘பாபா’ படத்தின் உரிமை ரஜினியிடம் மட்டுமே உள்ளதால் பெரும்பாலும் எந்த YouTube தளத்திலும் இந்த படம் இல்லை.
எனவே பாபா படத்தின் மூலம் மீண்டும் ஒரு பரபரப்பு உருவாகும்.. இந்த படம் டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Special FDFS arranged for Baba Re Release