தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை, பாட்ஷா, கமல் நடித்த அவ்வை சண்முகி ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் தேவா.
மேலும் அஜித், விஜய் முதல் பிரபலமான நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
கானா பாடல்களை திரையில் கொண்டு வந்தற்கு இவரின் பங்கு முக்கியமானது.
இந்த நிலையில் இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி வருகின்ற டிசம்பர் மாதம் 21ஆம் தேதி பாண்டிச்சேரியில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், ஸ்ரீகாந்த் தேவா, இயக்குநர்கள் பேரரசு, சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடம் இசையமைப்பாளர் தேவா பேசியதாவது…
“வரும் டிசம்பர் 21 ஆம் தேதி பாண்டிச்சேரியில் லைவ் மியூசிக் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதில் என்னுடைய பாட்டுக்கு இசை கருவிகளை இசைத்தவர்கள் இசையமைக்கவுள்ளனர்.
நான் வெளி நாடுகளில் இது போன்ற நிகழ்ச்சிகளை செய்துள்ளேன். இங்கு இது தான் முதல்முறை.. தலைமுறை மாற்றத்திற்கு ஏற்ப இசை சிறப்பாக உள்ளது.
ரஜினி அரசியல் குறித்து நான் சொல்ல எதுவுமில்லை. அது அவர் விருப்பம். என் பாடல்களை அனுமதி பெறுகிறார்களா என்று கேட்கிறார்கள். நான் பாடட்டும் என்று தான் சொல்கிறேன்.” என்றார்.