தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய்ஆண்டனி இரு வேடங்களில் நடித்துள்ள படம் அண்ணாதுரை. இப்படம் இன்று ரிலீஸ் ஆவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் விஜய் ஆண்டனி.
அப்போது தன்னுடைய குழந்தை பருவம் முதல் இளமைப்பருவம் வரை என அனைத்தையும் பகிர்ந்துக் கொண்டார்.
அவர் பேசியதாவது…
ஒரு மிடில்கிளாஸ் குடும்பத்தில் வளர்ந்தவன் நான். மிகவும் கஷ்டப்பட்டுதான் இந்த நிலைக்கு வந்துள்ளேன்.
சினிமா மீது ஆசை இருந்தது. வீட்டில் சொன்னால் விடமாட்டார்கள் என்பதால் சென்னைக்கு வேலைக்கு போகிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
எப்படியோ இசைமையப்பாளர் ஆகிவிட்டேன். அதன்பின்னர் நடிக்க ஆசை ஏற்பட்டது.
அது நிச்சயம் கண்டிப்பாக கிடைத்துவிடும் என தோன்றியது காரணம். ஏற்கெனவே இசையமைப்பாளராக பிரபலமாகிவிட்டேன்.
அதுவும் நடந்துவிட்டது. நான் சத்தியமாக நடிக்கல. நான் சினிமாவிலும் நானாகவே இருக்கிறேன்.
சொல்லப்போனால் கதைக்குள் நாள் ஒளிந்துக் கொள்கிறேன். கதை ஜெயிக்கிறது.
அண்ணாதுரை படத்தில் 2 வேடங்களில் நடித்துள்ளேன். அவ்வளவுதான்.
கமல் சார் நடித்த தசாவதாரம், மைக்கேல் மதன காமராஜன் ஆகிய படங்களை பார்த்தால் அவர் ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒவ்வொரு மாதிரி பேசியிருப்பார்.
அப்போதே ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். அதுபோல் நிச்சயமாக என்னால் முடியாது. கற்றுக் கொண்டு நடிக்க வேண்டியதுதானே என்று கேட்டால் அதுவும் தெரியாது.
நான் இப்படியே இருக்கிறேன். ஆசைப்பட்டதை செய்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்.” என்று பேசினார்.