கமலை பெண்ணாக மாற்றி அழகு பார்க்கும் ஷங்கர்.; அடுத்த அவ்வை சண்முகி்.?

கமலை பெண்ணாக மாற்றி அழகு பார்க்கும் ஷங்கர்.; அடுத்த அவ்வை சண்முகி்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர்.

இந்த படத்திற்காக ஏகப்பட்ட காட்சிகள் எடுத்துள்ள நிலையில் ‘இந்தியன் 3’ படமும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. எனவே அந்த படத்தின் காட்சிகளையும் முடித்துவிட்டு தான் ‘இந்தியன் 2’ படத்தை ரிலீஸ் செய்ய ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.

அனிருத் இசையமைத்தவர் இந்த படத்தை லைகா நிறுவனம் மிகப் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

‘இந்தியன் 2’ அடுத்த ஆண்டு 2024 ஜனவரி மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதில் கமலுடன் சித்தார்த், பவானிசாகர் காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் ஒரு சிறிய காட்சிக்காக கமலுக்கு பெண் வேடமிட்டுள்ளாராம் இயக்குனர் ஷங்கர்.

ஏற்கனவே கேஎஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ‘அவ்வை சண்முகி’ படத்திலும் ‘தசாவதாரம்’ படத்தில் கிருஷ்ணவேணி பாட்டியாகவும் கமல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Again Kamal done lady get-up in Indian 2

FDFS-ஐ ரசிகர்களுடன் பார்த்து ரசித்த சாக்‌ஷி தோனி & LGM Team

FDFS-ஐ ரசிகர்களுடன் பார்த்து ரசித்த சாக்‌ஷி தோனி & LGM Team

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM)) என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு மற்றும் ஆர் ஜே விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

LGM

இப்படம் இன்று (ஜூன் 28) திரையரங்குகளில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் வெளியானது.

இந்நிலையில், தயாரிப்பாளரான சாக்ஷி சிங் டோனி ‘எல்.ஜி.எம்’ திரைப்படத்தின் முதல் காட்சியை சென்னை, ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார்.

சாக்ஷி சிங் டோனி உடன் ஹரிஷ் கல்யாண், இவானா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LGM

Sakshi Dhoni & LGM Team enjoying FDFS with fans

ஜிவி பிரகாஷ் இசையில் பான் இந்தியா படம் ‘மட்கா’..; 1960-ன் வைசாக் விண்டேஜ் செட் ரெடி.!

ஜிவி பிரகாஷ் இசையில் பான் இந்தியா படம் ‘மட்கா’..; 1960-ன் வைசாக் விண்டேஜ் செட் ரெடி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரமாண்ட பான் இந்திய திரைப்படம் மட்கா #VT14 பூஜையுடன் இனிதே துவங்கியது

பலாசா திரைப்பட புகழ் கருணா குமார் இயக்கவுள்ள, மெகா பிரின்ஸ் வருண் தேஜின் 14வது படத்தை, வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரின் கீழ், மிகப்பெரும் பட்ஜெட்டில், மோகன் செருக்குறி (CVM) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா ஆகியோர் தயாரிக்கின்றனர்.

வருண் தேஜ் திரை வரலாற்றில் மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் இந்த #VT14 பிரமாண்ட திரைப்படம் ஹைதராபாத்தில் படக்குழுவினர் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது.

இவ்விழாவினில் சுரேஷ் பாபு மற்றும் படத்தின் தயாரிப்பாளர்கள் ஸ்கிரிப்டை இயக்குநரிடம் ஒப்படைத்து பணிகளை தொடங்கினார்கள்.

மட்கா

மெகா தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கிளாப் போர்டு அடிக்க, இயக்குநர் மாருதி கேமரா ஸ்விட்ச் ஆன் செய்து, முதல் ஷாட்டின் படப்பிடிப்பை துவக்கினார். இந்த முதல் ஷாட்டை தில் ராஜு அவர்கள் இயக்கினார். . டைட்டில் போஸ்டரை ஹரிஷ் ஷங்கர் வெளியிட்டார்.

#VT14 க்கு ‘மட்கா’ என சுவாரஸ்யமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது மற்றும் டைட்டில் போஸ்டர் தனித்துவமாகவும் வெகு சுவாரசியமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மட்கா என்பது சூதாட்டத்தின் ஒரு வடிவம். 1958-1982 ஆம் ஆண்டுகளின் காலகட்டத்தில், முழு தேசத்தையும் உலுக்கிய உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, வைசாக் நகரின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது.

மட்கா

24 வருடங்களில் நடக்கும் கதையாக அமைக்கப்பட்டுள்ள திரைக்கதையில், 1958ல் இருந்து 82 ஆம் ஆண்டு காலகட்டம் வரை வருண் தேஜை நான்கு விதமான கெட்-அப்களில் இப்படத்தில் தோன்றவுள்ளார்.

வருண் தேஜ் திரைவாழ்வின் பிரமாண்ட படமாக உருவாகும் இப்படத்திற்காக முழுமையாக தன்னை மாற்றிக்கொண்டு நடிக்கவுள்ளார்.

60களில் வைசாக் நகரை சித்தரிக்கும் பிரமாண்டமான விண்டேஜ் செட் படத்திற்காக அமைக்கப்படவுள்ளது.

60களின் சூழலையும் உணர்வையும் திரையில் கொண்டுவர படக்குழு கூடுதல் அக்கறையுடன் உழைப்பை கொட்டி வருகிறது. ஆஷிஷ் தேஜா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சுரேஷ் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள்.

மட்கா

படத்திற்காக அற்புதமான தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவை தயாரிப்பாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். தென்னிந்திய சினிமாவின் பரபரப்பான இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்க, ப்ரியாசேத் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர் எடிட்டராக பணியாற்றுகிறார்.

மட்கா உலகளாவிய ரசிகர்களை ஈர்க்கும் அம்சங்களை கொண்டுள்ளது, எனவே இது பான் இந்தியா அளவில் பிரமாண்ட படைப்பாக உருவாக்கப்படவுள்ளது. .

இது உண்மையில் வருண் தேஜுன் முதல் பான் இந்தியா திரைப்படமாகும், மேலும் இது தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.

நடிகர்கள்: வருண் தேஜ், நேரா ஃபதேஹி, மீனாட்சி சௌத்ரி, நவீன் சந்திரா, கன்னட கிஷோர், அஜய் கோஷ், மைம் கோபி, ரூபாலட்சுமி, விஜய்ராம ராஜு, ஜெகதீஷ், ராஜ் திரந்தாஸ்

மட்கா

தொழில்நுட்பக் குழு:

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: கருணா குமார்
தயாரிப்பாளர்கள்: மோகன் செருகுரி (CVM) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா
பேனர்: வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ்
இசை: ஜீ.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : பிரியசேத்
எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீனிவாஸ் R
தயாரிப்பு வடிவமைப்பு: ஆஷிஷ் தேஜா
கலை: சுரேஷ்
நிர்வாகத் தயாரிப்பாளர் – RK.ஜனா
மக்கள் தொடர்பு : யுவராஜ்

மட்கா

Varun Tej starrer Matka Launched With Pooja Ceremony

‘ஜெயிலர்’ விழா.: ஆன்லைனில் ப்ரீ டிக்கெட் பெற்று ரஜினி ரசிகர்களுக்கு விற்கும் அவலம்

‘ஜெயிலர்’ விழா.: ஆன்லைனில் ப்ரீ டிக்கெட் பெற்று ரஜினி ரசிகர்களுக்கு விற்கும் அவலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் மோகன்லால் சிவராஜ்குமார் ஜாக்கிசரஃப் சுனில் ரம்யா கிருஷ்ணன் தமன்னா ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் ‘ஜெயிலர்’.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று ஜூலை 28 மாலை 6 மணிக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

பொதுவாக இது போன்ற விழாக்களுக்கு அனைத்து மீடியாக்களையும் தயாரிப்பு நிறுவனம் அழைப்பது வழக்கம்.

ஆனால் சன் டிவி தயாரிக்கும் படங்களின் விழாக்களுக்கு மற்ற மீடியாக்களை அழைப்பதில்லை.

இந்த விழாவை முன்னிட்டு ஆன்லைனில் புக்கிங் செய்யும் ரசிகர்களுக்கு இலவசமாக அனுமதி சீட்டுகளை வழங்கியது சன் நிறுவனம். இது 15 நொடிகளில் விற்றதாகவும் பெருமை பேசிக்கொண்டது.

இந்த நிலையில் இதனை ஆன்லைனில் புக்கிங் செய்து இலவசமாக பெற்ற சிலர் தற்போது அந்த டிக்கெட்டுகளை ரஜினி ரசிகர்களுக்கு கூடுதல் கட்டணமாக விற்று வருகின்றனர்.

ரூ 500 – 1000 வரை டிக்கெட் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Jailer free pass tickets sold out for big price

GUILD கில்ட் பிரச்சினை குறித்து ஜாக்குவார் தங்கம் அறிக்கை.; என்னதான் நடக்குது.?

GUILD கில்ட் பிரச்சினை குறித்து ஜாக்குவார் தங்கம் அறிக்கை.; என்னதான் நடக்குது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் சங்கத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது…

தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக சில பிரச்சினைகள் சென்றுகொண்டு இருக்கிறது.

இதுகுறித்து சந்தா கட்டாத ஒரு சில உறுப்பினர்கள் என்னை பற்றி தவறாக சொல்லி வருகின்றனர். கடந்த 2015ல் நான் கில்ட் செயலாளராக பொறுப்பேற்றேன். அப்போது சங்கத்தில் சில ஆயிரங்கள்தான் இருந்தது. 2018ல் தலைவரான பின்பு இன்று ரூ.6.50 கோடி உள்ளது.

கில்ட் மூலம் நிறைய உதவிகள் செய்து வந்தோம். கில்ட் தற்போது நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. இதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். மேலும் உறுப்பினர்கள் மற்றும் சில நிர்வாகிகள் உதவியுடன் இவ்வளவு தூரம் வளர்ந்துள்ளது.

கடந்த 2018ல் நடந்த தேர்தலில் நான் தலைவராக தேர்வு செய்யப்பட்டேன். எனது அணியில் சிலரும் எதிர் அணியில் சிலரும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் வந்ததும் சங்கத்தை பூட்ட வேண்டும் என்றனர். நான் ஏன் பூட்ட வேண்டும் என்றேன்.

இதில் சில விஷயங்கள் நடக்கிறது பூட்டிவிட்டு மீண்டும் திறக்கலாம் என்றனர்‌. நான் முடியாது என்றேன். அப்போது தனியாக மீட்டிங் நடத்தினர். வங்கியில் உள்ள பணத்தை எடுக்க தங்களுக்கு தான் உரிமை உள்ளது என்றனர்.‌

ஏனென்றால் அவர்களது நோக்கம் பணத்தை எடுப்பது தான். வங்கியில் போலியாக லெட்டர் பேட் தயாரித்து பணத்தை எடுக்க முயற்சித்தனர். மீண்டும் ஒரு மீட்டிங் நடத்தி என்னை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியதாக கூறினார்கள்.

நான் அவர்களை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினேன். இதனால் அவர்கள் நீதிமன்றம் சென்றனர். ஆனால் நீதிமன்றம் அவர்கள் உள்ளே வரக்கூடாது என்று உத்தரவிட்டது. அவர்கள் மீது பல புகார்கள் காவல்நிலையத்தில் உள்ளது.

மேலும் வடபழனியில் ரூ.13 கோடியில் சங்கத்திற்கு இடம் பார்த்தோம். இதன்‌ மூலம் கில்ட் உறுப்பினர்களுக்கு உதவி செய்ய நினைத்தோம். இது எதிரிகளுக்கும் சில சங்கங்களுக்கும் பிடிக்கவில்லை.

இதனால் என் மீது பல குற்றச்சாட்டுக்கள் வைத்தனர். கில்ட் பணத்தை எடுத்து விட்டேன் என்றனர். தற்போது அவர்கள் மீது நான் வழக்கு தொடுத்து எப்ஐஆர் போடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட உள்ளது.

சங்கத்திற்கு தேர்தல் வேண்டும் என்று நான்தான் நீதிமன்றத்தில் கேட்டேன். ஆனால் நான் தேர்தல் நடத்தமாட்டேன் என்கிறேன் என்று சொல்கின்றனர்.

சந்தா கட்டமுடியாத விரல்விட்டு எண்ணக்கூடிய சில உறுப்பினர்கள் தேர்தல் நடத்த விடமாட்டேன் என்கின்றனர். மேலும் கில்ட் சங்கம் போலவே இவர்களும் ஒரு சங்கத்தை தொடங்கி கோடிக்கணக்கில் வசூல் செய்தனர். இதையும் நீதிமன்றம் மூலம் தடுத்தோம்.

நான் இருக்கும் வரை பணத்தை எடுக்க முடியாததால் வேறு நபரை வைத்து எடுக்க பார்க்கிறார்கள். கொரோனாவுக்கு முன்பு என்னை அழைத்து பேரம் பேசினர். தற்போது எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் எல்லாம் தயாரிப்பாளர்கள் கிடையாது மீடியேட்டர்கள்தான்.

நான் 2023 வரை உள்ள உறுப்பினர்களை வைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்கிறேன். ஆனால் அவர்கள் 2013வரை உள்ள உறுப்பினர்களை வைத்து மட்டுமே தேர்தல் நடத்த வேண்டும் என்கின்றனர் இதுதான் தற்போது வரை பிரச்சினயாக உள்ளது.

மூன்று வருடமாக தேர்தல் நடத்த முயற்சித்து வருகிறேன். துரைசாமி என்பவர் மற்றவர் மாதிரி அழகாக போலி கையெழுத்து போடக்கூடியவர்” என்று தெரிவித்துள்ளார்.

ஜாக்குவார் தங்கம்

Stunt Master Jaguvar Thangam reveals Guild issues

மம்முட்டியுடன் இணைய மாட்டோமா.? ஐஸ்வர்யாவின் கனவை நிறைவேற்றிய ‘பஸூகா’

மம்முட்டியுடன் இணைய மாட்டோமா.? ஐஸ்வர்யாவின் கனவை நிறைவேற்றிய ‘பஸூகா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மாதம் ரிலீஸான தெலுங்கு மற்றும் பான் இந்தியா படமான ‘ஸ்பை’ சூப்பர் ஹிட் அடித்த வகையில் ஆந்திராவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகியிருக்கும் ஐஸ்வர்யா மேனன், கார்த்திகேயா, ‘ஸ்பை’ நாயகன் நிகில் சித்தார்த்தா உட்பட தெலுங்கின் முன்னணி ஹீரோக்களுடன் அடுத்தடுத்து பிசியாக வலம் வருகிறார்.

இந்நிலையில் மாபெரும் ஜாக்பாட்டாக மம்முட்டி படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அவரது காம்பினேஷனில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன்.

இதுகுறித்துப் பேசிய அவர்…

“நான் மம்முட்டியின் தீவிர ரசிகை. அவர் படத்தில் ஒரே ஒரு காட்சியிலாவது நடித்துவிட மாட்டோமா என்று கனவு கண்டு காத்திருந்திருக்கிறேன்.

தற்போது அந்தக் கனவு ‘பஸூகா’ படத்தின் மூலம் நனவாகி கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அவருடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறேன்.

இப்படத்தின் இளம் நாயகனுக்கு ஜோடியாக மிக முக்கியமான, கதைக்கு திருப்பம் தரும் ஒரு கேரக்டரில் நடிக்கிறேன்.

அறிமுக இயக்குநர் டீனோ டென்னிஸ் இயக்கும் இப்படத்தை தியேட்டர் ஆஃப் ட்ரீம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மம்முட்டி எத்தனை தேசிய விருதுகள், கேரள அரசின் மாநில விருதுகள் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் மனதை வென்ற மனிதர்… ஆனால் படப்பிடிப்பில் மிக எளிமையாக பாசமாக, அவர் பழகும் விதம் நெகிழச் செய்கிறது.

அவருடன் இணைந்து நடிப்பது வாழ்வின் மறக்க முடியாத அம்சமாக மாறியிருக்கிறது. இப்படம் கமிட் ஆன பிறகு வரிசையாக அடுத்தடுத்த படங்களுக்கும் தொடர்ந்து அழைப்பு வருகிறது” என்று உற்சாகமாகப் பேசுகிறார் ஐஸ்வர்யா மேனன்.

மம்முட்டி

Ishwarya Menon join hands with Mammootty

More Articles
Follows