‘தசாவதாரம் 2’ எப்போ? – கே.எஸ். ரவிக்குமார்.; நான் நடிக்க ஆசைப்பட்டப்ப பெற்றோரே கிண்டலடிச்சாங்க – தர்ஷன்.; ‘கூகுள் குட்டப்பா’ விழா சுவாரஸ்யங்கள்

‘தசாவதாரம் 2’ எப்போ? – கே.எஸ். ரவிக்குமார்.; நான் நடிக்க ஆசைப்பட்டப்ப பெற்றோரே கிண்டலடிச்சாங்க – தர்ஷன்.; ‘கூகுள் குட்டப்பா’ விழா சுவாரஸ்யங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வேற லெவல் ஹிட்டப்பா என்று ஆகியிருக்கிற ‘கூகுள் குட்டப்பா’படத்தின் தயாரிப்பாளரும் அதன் முன்னணி கதாபத்திரத்தில் ஜொலித்தவருமான கே.எஸ்.ரவிக்குமார், அப்படத்தின் நாயகன் தர்ஷன் நாயகி லாஸ்லியா ஆகியோருடன் சென்னை, திருப்போரூரில் உள்ள எஸ்.எஸ்.என். கல்லூரியின் கலை நிகழ்ச்சி ஒன்றில் நேற்று காலை கலந்துகொண்டார்.

‘கூகுள் குட்டப்பா’ மிக விரைவில் ஆஹா ஓ.டி.டி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ள நிலையில் கல்லூரி நிர்வாகத்துடன் சேர்ந்து ஆஹா ஓ.டி.டி தளம் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் உற்சாகமாக விசிலடித்து ஆர்ப்பாட்டமாக இக்குழுவினரை வரவேற்ற நிலையில் அந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்…

“ உங்கள் ஆரவாரத்தைப் பார்க்கும்போது எனக்கு என் கல்லூரி காலங்கள்தான் நினைவுக்கு வருகின்றன. அப்போதெல்லாம் என் கல்லூரியின் அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு திரு.பாலையா உட்பட பல நடிகர்களின் குரலில் மிமிக்ரி செய்வேன். சிதம்பரம் ஜெயராமன் குரலில் பாடுவேன்.

கூகுள் குட்டப்பா விமர்சனம் 3.25/5..; நீ GOOD அப்பா…

ஆனால் உங்களைப் போல் இவ்வளவு சத்தமாக விசில் அடிக்க கற்றுக்கொள்ளவில்லை. எனக்கு விசில் அடிக்கும்போது வெறும் சத்தம் மட்டும்தான் வரும். ஆனால் நடிகை குஷ்பூ எங்களோடு இங்கு வந்திருந்தால் உங்களை விட சிறப்பாக விசில் அடிப்பார்.

படத்தில் நான் விசில் அடிக்கும்படியாக காட்சி வந்தால் நான் வெறுமனே வாயை மட்டும் அசைக்க எனக்காக அவர்தான் விசில் அடிப்பார்.

உங்களை இவ்வளவு உற்சாகமாகப் பார்க்கும்போது எனக்கும் புது எனர்ஜி தொற்றிக்கொண்டுவிட்ட வகையில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்த நேரத்தில் உங்களை அட்வைஸ் என்று எதுவும் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. அப்படி சொன்னா மட்டும் கேக்குற வயசா இது. ஆனால் இது வாழ்வின் முக்கியமான பருவம். வாழ்க்கையை நல்லா எஞ்சாய் பண்ணுங்க. ஆனா ஜஸ்ட் பாஸ் ஆகுற அளவுக்காவது படிக்கவேண்டியதும் ரொம்ப முக்கியம்”

அடுத்து மாணவ,மாணவியர் கேட்ட சில கேள்விகளுக்கு பதிலளித்த அவர், கமலுடன் ‘தசாவதாரம்’ படத்தில் நடந்த சில அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். “ கமல் எப்போதும் கடினமான உழைப்பை நம்பக்கூடியவர். NO PAIN NO GAIN என்பது அவரது பாலிசி. தசாவதாரம் படத்துக்கும் அப்படித்தான் உழைத்தார். சில தினங்களுக்கு முன் தசாவாதாரம் ரிலீஸாகி 12 வருஷம் ஆச்சா? என்று ஆச்சரியத்துடன் 2 மணி நேரம் பேசினார். சில வருடங்களாகவே கமலையும் என்னையும் பார்த்து ‘தசாவதாரம் 2’ எப்போது என்று கேட்கிறார்கள். ஆனால் எங்கள் இருவருக்கும் எத்தனை கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் தசாவதாரம் போன்ற இன்னொரு படத்தை உருவாக்கவே முடியாது. எனவே தசாவதாரம் 2’க்கு வாய்ப்பே இல்லை.

ஓ.டி.டி. தளங்களால் சினிமாவுக்குப் பாதிப்பா இல்லையா என்பது குறித்தெல்லாம் விவாதிக்கவேண்டியதில்லை. தொலைக்காட்சி வந்தபோதும் இப்படித்தான் சினிமாவே அழிந்துவிடும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். சினிமாவை திரையரங்கில் பார்க்கும் அனுபவத்துக்கு எதுவும் ஈடாகாது.

கமல் தயாரிப்பாளராக்கினார்… ரஜினி உதவினார்..; ‘கூகுள் குட்டப்பா’ விழாவில் KSR பேச்சு

அதே சமயம் ஓ.டி.டி என்பது இன்னொரு விஞ்ஞான வளர்ச்சி என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அண்மையில் வெளியான எங்கள் ‘கூகுள் குட்டப்பா’வை திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள். அப்படிப் பார்க்காதவர்கள் விரைவில் வெளியிடப்படவிருக்கும் ஆஹா ஓ.டி.டி. தளத்தில் பாருங்கள்’ என்றார்.

அடுத்து பேசிய நடிகர் தர்ஷன்,….

‘நான் ஒரு நடிகனா உங்க முன்னாடி நிக்குறதுக்கு 7 வருஷ கடுமையான உழைப்பு தேவைப்பட்டிருக்கு. 300க்கும் மேற்பட்ட ஆடிஷன்கள் அட்டெண்ட் பண்ணியிருக்கேன். அதுல பல சமயங்கள் இவ்வளவு கேவலமா நடிச்சிருக்கோம் நாம எப்படி செலக்ட் ஆவோம்னு எனக்கே தோணியிருக்கு.

கல்லூரி காலத்துல நாம முக்கியமா சம்பாதிக்கவேண்டியது நல்ல நண்பர்களை. படிப்பு கூட அடுத்ததுதான். ஏன்னா இங்க கிடைக்கிறது மட்டும் தான் நம்ம தகுதி என்னன்னு பாக்காம கிடைக்கிற தூய்மையான நட்பு. அடுத்து கிடைக்கிறதெல்லாம் நம்ம அந்தஸ்தைப் பாத்து கிடைக்குற நட்புதான்.

நான் நடிகனாக ஆசைப்பட்டப்ப எங்க அம்மாவும் அப்பாவும் கூட கிண்டலடிச்சாங்க. தமிழ்நாட்டுல கோடிக்கணக்கான ஆட்கள் இருக்குறப்போ இலங்கைக்காரனான உனக்குத்தான் சான்ஸை அப்படியே தூக்கித் தரப்போறாங்களான்னு கேட்டாங்க. ஆனா என்னோட நண்பர்கள் தான் என்னை மோடிவேட் பண்னிக்கிட்டேயிருந்தாங்க. அவங்க கொடுத்த உற்சாகத்தாலதான் ‘கூகுள் குட்டப்பா’ படம் மூலமா உங்க முன்னாடி நிக்குறேன். அதனாலதான் சொல்றேன் கல்லூரி காலத்துல நல்ல நண்பர்களை சம்பாதிச்சுக்கோங்க” என்றார்.

அடுத்து பேசிய நடிகை லாஸ்லியா கையாலேயே ஹார்ட்டின் சிம்பள் காட்டி மாணவர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார், “ நானும் உங்களை மாதிரியே கல்லூரி காலங்கள்ல இப்படி விசிலடிச்சிக் கொண்டாடினவதான். உங்களை இவ்வளவு எனர்ஜியோட பாக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாழ்க்கையில நீங்க என்னவா ஆக நனைக்கிறோங்களோ அதை விடா முயற்சியால சாதிக்க முடியும்/ நாங்க நடிச்ச ‘கூகுள் குட்டப்பா’ படத்தை தியேட்டர்ல பாக்காதவங்க ஆஹா ஓ.டி.டி தளத்துல பாருங்க” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

தமிழ் பார்வையாளர்களை புத்தம் புது நிகழ்ச்சிகளால் அசத்தி வரும் ஆஹா டிஜிட்டல் தளத்தில், ‘செல்ஃபி’, ‘மன்மத லீலை’ போன்ற திரைப்படங்கள் வெளியானது. ஆஹா ஒரிஜினல் படைப்பான‘பயணிகள் கவனிக்கவும்’ என்ற திரைப்படமும் வெளியானது.

இதற்கு பார்வையாளர்களிடையே பெருகி வரும் பேராதரவால் விரைவில் திரையரங்கில் வெளியாகியிருக்கிற ஜீ வி பிரகாஷ்குமாரின் ‘ஐங்கரன்’ திரைப்படத்தையும் ‘ஆஹா டிஜிட்டல் தளம் விரைவில் வெளியிடயிருக்கிறது.

Koogle Kuttapa team interactes with the students of SSN College

கமல் பட இசை விழாவில் ரஜினி விஜய் சூர்யா விக்ரம் பங்கேற்பு..; அஜித் மட்டும்.?

கமல் பட இசை விழாவில் ரஜினி விஜய் சூர்யா விக்ரம் பங்கேற்பு..; அஜித் மட்டும்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

கமல்ஹாசனே இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இதில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ், ஷிவானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கமலின் ‘விக்ரம்’ பட இசை வெளியீடு

கேங்ஸ்டர் கதையுடன் சிறை கைதிகளை மையப்படுத்தி அதிரடி ஆக்ஷன் கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது.

இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் பணிகள் நடக்கின்றன.

ஜூன் 3ல் படம் தியேட்டர்களில் வர உள்ளது. இதன் வெளியீட்டு உரிமையை சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி பெற்றுள்ளார்.

மே 11 மாலை 7 மணிக்கு (சொன்ன நேரத்தில் ரிலீசாகல) ‘விக்ரம்’ படத்தில் கமல் பாடிய ‘பத்தல…. பத்தல… ‘ என்ற பாடலின் சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டனர்.

இந்த பாடல் வரிகள் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பத்தல பாட்டு வைத்த வேட்டு..; ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல.; கமலை எச்சரிக்கும் RTI ஆர்வலர்

இந்த நிலையில் வருகிற மே 15ல் இசை மற்றும் டிரைலர் வெளியாக உள்ளது.

இந்த விழாவில் ரஜினி விஜய் சூர்யா விக்ரம் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

நடிகர் அஜித் அழைத்தாலும் எதிலும் கலந்துக் கொள்ள மாட்டார் என்பதால் அவரை அழைக்க வாய்ப்பில்லை.

4 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் படத்தின் இசை வெளியீடு நடைபெற இருப்பதால் விக்ரம் படத்தின் பாடல்கள் & படம் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Kollywood top celebrities to attend Vikram audio launch function

ஜீன் 10ல் தியேட்டர்களில் ரிலீசாகும் சிலம்பரசனின் அடுத்த படம்

ஜீன் 10ல் தியேட்டர்களில் ரிலீசாகும் சிலம்பரசனின் அடுத்த படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை ஹன்சிகா நடிப்பில் 50வது படமாக உருவான திரைப்படம் ‘மஹா’. இந்த படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்க யு.ஆர்.ஜலீல் என்கிற உபைத் ரஹ்மான் ஜமீல் என்பவர் இயக்கினார்.

இதில் சிம்பு முதலில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக் கொண்டார். பின்னர் அவருக்கான காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டது.

இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

நீண்ட ஆண்டுகளாக இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது ஒருவழியாக வருகிற ஜீன் மாதம் 10ஆம் தேதி தியேட்டர்களில் மஹா திரைப்படம் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

இந்த முறையாவது தள்ளிப் போகாமல் ரிலீஸ் ஆனால் சந்தோஷமே.

கூடுதல் தகவல்…

கடந்தாண்டு 2021ல் இந்த படம் தொடர்பாக இயக்குனர் யு.ஆர்.ஜலீல் சார்பில் வழக்கு போடப்பட்டது.

தனக்கு தெரியாமல் படத்தை முடித்து, ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சிப்பதாகக்கூறி, படத்தை வெளியிட தடைகோரி இயக்குனர் ஜமீல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரின் மனுவில், “ நான் இயக்கிய மஹா திரைப்படத்தின் கதைப்படி விமான பணிப்பெண்ணாக இருக்கும் நாயகி ஹன்சிகா, பைலட் ஜமீலாக வரும் சிம்புவை காதலிக்கிறார்.

இவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தை கொல்லப்படுகிறது. அதை கதாநாயகி கண்டுபிடிப்பது தான் கதை. இந்த கதைக்கு தேவையான காட்சிகளை எடுக்காமல் எனது உதவி இயக்குனரை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

படத்தை இயக்க 24 லட்சம் ரூபாய் சம்பளம் தருவதாக படத்தயாரிப்பு கூறியது. ஆனால் தற்போது வரை 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே தந்துள்ளது.

ஆகையால் மீதமுள்ள 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் என் கதைக்கருவை வேறு சிலரை வைத்து படத்தை முடித்ததற்காக எனக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.என மனுவில் கோரியிருந்தார். அந்த வழக்கும் விசாரணைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Mahaa

Silambarasan’s next film to be released in theaters in June 10

இளையராஜா பிறந்தநாளில் மக்கள் முன்னிலையில் இசை விருந்து

இளையராஜா பிறந்தநாளில் மக்கள் முன்னிலையில் இசை விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசைஞானி இளையராஜா இசைக்கு மயங்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? கடந்த 45 வருடங்களுக்கு மேலாக இந்திய மக்களை தன் இசையால் தாலாட்டி வருபவர்.

தற்போது பல இளம் இசையமைப்பாளர்கள் உருவாகி வந்தாலும் இன்றும் எல்லோர் இல்லங்களிலும் இரவில் ஒலிக்கும் இசை இளையராஜாவின் இசையாகத்தான் இருக்கும்.

எனவே இளையராஜாவும் தன் ரசிகர்களுக்காக இசை நிகழ்ச்சிகளை அவ்வப்போது பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறார்.

அண்மையில் துபாய் நாட்டில் தன் இசை கச்சேரியை நடத்தினார். அதன்பின்னர் அங்குள்ள ஏஆர். ரஹ்மான் ஸ்டூடியோவுக்கும் சென்று வந்தார்.

இதன்பின்னர் தமிழக சுற்றலாத்துறை சார்பில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினார் இசைஞானி.

இந்த நிலையில் அடுத்ததாக கோவை மாநகரில் தன் இசை விருந்தை தன் பிறந்தநாளான ஜூன் 2ம் தேதியில் வழங்கவுள்ளார்.

கோவையில் உள்ள கொடீசியா வளாகத்தில் இந்த இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Music concert in the presence of the people on Ilayaraja’s birthday

மக்கள் நலனுக்காக ஆம்புலன்ஸ் வழங்கிய சிவகார்த்திகேயன்

மக்கள் நலனுக்காக ஆம்புலன்ஸ் வழங்கிய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்கள் பட்டியலில் இணைந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

தற்போது பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை வளர்த்து மக்களின் மனம் கவர்ந்த நடிகரானார்.

மேலும் பேரிடர் காலங்களில் மக்கள் பிரச்சினைக்காக நன்கொடைகளை வழங்கி வருகிறார்.

இத்துடன் தன் சொந்த செலவில் சில ஏழை மாணவ மாணவிகளை படிக்க வைத்தும் வருகிறார்.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்ட மக்களின் சேவைக்காக புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார்.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் நடந்த விழாவில் இந்த ஆம்புலன்ஸ் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இது சுமார் 20 லட்சம் மதிப்புள்ள நவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan provided the ambulance for the benefit of the Sivaganga people

‘குற்றப்பரம்பரை’-யில் சசிகுமாருடன் இணையும் விஜயகாந்த் மகன்

‘குற்றப்பரம்பரை’-யில் சசிகுமாருடன் இணையும் விஜயகாந்த் மகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விளையாட்டு போட்டிகளில் கேப்டன் என்ற வார்த்தை கேட்டு பார்த்திருப்போம். ஆனால் தமிழ் சினிமாவில் கேப்டனாக வாழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த்.

பின்னர் தன் கவனத்தை அரசியல் பக்கம் திருப்பியதால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

இவரது இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். 2015ம் ஆண்டில் சகாப்தம் படத்தில் நடித்தார். இதில் விஜயகாந்தும் நடித்திருத்தார்.

இதன்பிறகு மதுர வீரன் என்ற படத்தில் நடித்தார் சண்முக பாண்டியன். தற்போது ஓரிரு படங்களில் கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை சண்முக பாண்டியனுக்கு சொல்லிக் கொள்கிற அளவுக்கு பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது முதன்முறையாக வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவிருக்கிறாராம் சண்முக பாண்டியன்.

இதை சசிகுமார் இயக்க ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்கிறார்.

இந்த தொடர் எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை என்ற நாவலைத் தழுவி உருவாகவுள்து.

சில ஆண்டுகளுக்கு முன் இதே குற்றப்பரம்பரை பட கதையை பாரதிராஜா இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அது வெறும் பேச்சுடன் நிறைவானது.

ஏற்கனவே சுப்ரமணியபுரம், ஈசன் போன்ற படங்களை இயக்கியவர் சசிகுமார். அதன்பின்னர் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்க முடிவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijaykanth’s son joins Sasikumar in ‘Kuttrapparamparai’

More Articles
Follows