BREAKING ரஜினி கமல் பட நாயகியும் பாஜக எம்.பி.யுமான ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் ஜெயில்

BREAKING ரஜினி கமல் பட நாயகியும் பாஜக எம்.பி.யுமான ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் ஜெயில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1970 1980 1990 ஆகிய ஆண்டுகளில் இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் ஜெயப்பிரதா.

‘நினைத்தாலே இனிக்கும்’ என்ற படத்தில் கமல் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார்.

மேலும் ‘சலங்கை ஒலி’ படத்தில் கமல்ஹாசனுடன் நடித்திருந்தார்.

தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளில் இவர் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.

2008 ஆம் ஆண்டு வெளியான ‘தசாவதாரம்’ படத்திலும் 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கேணி’ என்ற படத்திலும் ஜெயப்பிரதா நடித்திருந்தார்.

சினிமா புகழின் உச்சத்தில் இருந்த போதே 1990களில் திடீரென ஆந்திர அரசியலில் களம் இறங்கினார். அதன் பின்னர் தேசிய அரசியலிலும் பங்கேற்றார்.

தற்போது பாஜகவின் எம்பி யாக பதவி வகித்து வருகிறார் ஜெயப்பிரதா. அவருக்கு தற்போது 60 வயதாகிறது.

இந்த நிலையில் பிரபல நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயப்பிரதா நடத்தி வந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான ESI தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என தொழிலாளர்கள் புகார் அளித்து இருந்தனர்.

எனவே அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பை கொடுத்துள்ளது எழும்பூர் நீதிமன்றம்.

ஜெயப்பிரதா

HighCourt Sentences Actress JayaPrada to 6 Months in ESI Case

JAILER Box Office இந்தியளவில் ரூ 54 கோடி.; தமிழகம் கேரளா கர்நாடகா ஆந்திராவில் எவ்வளவு.?

JAILER Box Office இந்தியளவில் ரூ 54 கோடி.; தமிழகம் கேரளா கர்நாடகா ஆந்திராவில் எவ்வளவு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ படம் நேற்று ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிசரஃப், சுனில், தமன்னா உள்ளிட்ட பல இந்திய பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் இந்த படத்திற்கு இந்திய அளவிலும் உலக அளவிலும் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

மேலும் நேற்று வெளியான நாள் முதலே படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்துள்ளன.

நெல்சா நீ ஜெயிச்சிட்ட.. தலைவர் நிரந்தரம்.. என்ற கோஷங்களை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களிலும் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பாசிட்டிவான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்ற தகவல்கள் தற்போது வந்துள்ளன.

இந்திய அளவில் ரூ 54 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. தமிழக அளவில் 23 கோடியும் கேரளாவில் 5 கோடியும் கர்நாடகாவில் 10 கோடியும் ஆந்திரா & தெலுங்கானாவில் 12 கோடியும் மற்றும் வட மாநிலங்களில் 4 கோடியும் கிடைத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இனி இந்த வாரம் வெள்ளி சனி ஞாயிறு கிழமைகளில் ஒரு நாளைக்கு 40 கோடி வரை வசூலிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அடுத்த வாரம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் வருவதால் விடுமுறை தினத்தை முன்னிட்டு மேலும் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

ஜெயிலர்

Jailer first day box office collection report

கௌரி ஒரு ஃபெமினிஸ்ட்.. டி போட்டு பேசினா புடிக்காது.. – விக்னேஷ் கார்த்திக்

கௌரி ஒரு ஃபெமினிஸ்ட்.. டி போட்டு பேசினா புடிக்காது.. – விக்னேஷ் கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் & கௌரி இணைந்து நடித்துள்ள படம் ‘அடியே’.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசுகையில்…

‘அடியே எனக்கு மிகவும் ஒரு ஸ்பெஷலான திரைப்படம். ஏற்கனவே நான் இயக்கிய ‘திட்டம் இரண்டு’ என்ற திரைப்படம் திரையரங்க வெளியீட்டிற்காக இயக்கினேன்.

ஆனால் கொரோனா காரணமாக அந்த திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் வெளியானது. அடியே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஜீ. வி பிரகாஷ் அற்புதமான மனிதர். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார். அவரை பார்க்கும் போது சற்று பொறாமை ஏற்படும். அவரை நான் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ சந்தித்திருந்தால்… என்னுடைய ஆக சிறந்த நண்பராக இருந்திருப்பார்.

அவருக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது என்று அறிவிப்பு வெளியான தினத்தன்று தான் இப்படத்தில் ஒரு வசனத்தை படமாக்கினோம். அது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, அதனை எளிதாக எடுத்துக்கொண்டு பயன்படுத்த அனுமதி கொடுத்தார்.

இந்தப் படத்திற்காக நிறைய நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். இறுதியில் கௌரி கிஷன் பொருத்தமாக இருந்ததால்.. அவரை தேர்வு செய்தோம்.

அவருக்குள் ஒரு ஃபெமினிஸ்ட் இருக்கிறார். இந்தப் படத்தில் நாயகன், ‘டி’ போட்டு பேசினால் பிடிக்கும் என்பார். கௌரி என்னிடம் இந்த ‘டி’ என்பது அவசியமா? என கேட்டார். பிறகு அவருக்கு எந்த சூழலில் இந்த வார்த்தை இடம் பெறுகிறது என்று விளக்கம் அளித்த பிறகு ஒப்புக்கொண்டார்.

நல்ல நடிகை. இந்த திரைப்படத்தில் முழு திறமையை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார் வாழ்த்துக்கள்.

இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் கேட்டோம். முதலில் அவர் பிஸியாக இருப்பதாக சொன்னார். பிறகு வேறு ஒரு நடிகரிடம் கதையை சொல்லி நடிக்க சம்மதம் பெற்றோம். இருப்பினும் இறுதியாக அவரிடம் ஒரு முறை கேட்கலாம் என்று கூறி, தொடர்பு கொண்டு கேட்டபோது சம்மதித்தார். அவரை இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தயாரிப்பாளர் படத்தின் பணிகள் தொடங்கியதிலிருந்து இதுவரை எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் தான் இருப்பார். ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.‌

அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அடியே படத்தை உருவாக்கி இருக்கிறோம். திரையரங்கத்திற்கு வந்து பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

அடியே

Gowrikishan is feminist says Director Vignesh Karthik

என் உதாரண புருஷர்களில் ஜிவி. பிரகாஷ் ஒருவர்.. அதான் பயமே.. – ஜஸ்டின் பிரபாகரன்

என் உதாரண புருஷர்களில் ஜிவி. பிரகாஷ் ஒருவர்.. அதான் பயமே.. – ஜஸ்டின் பிரபாகரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் & கௌரி இணைந்து நடித்துள்ள படம் ‘அடியே’.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசுகையில்….

” இந்த படத்தின் மூலம் விக்னேஷ் கார்த்திக் என்ற ஒரு படைப்பாளி நண்பனாக கிடைத்திருக்கிறார். அவர் தன்னுடைய எண்ணங்களை நேரடியாக கூறி விடுவார். இது எனக்கு பெரும் உதவியாக இருந்தது. ஜீ.வி சார் தான் ஹீரோ என்றதும் முதலில் எனக்கு சற்று பயம் இருந்தது.

ஏனெனில் என்னுடைய உதாரண புருஷர்களில் அவரும் ஒருவர். நான் சென்னைக்கு வந்து உதவியாளராக பணியாற்ற வேண்டும் என விரும்பிய இசையமைப்பாளர்களில் அவரும் ஒருவர். அவர் நடிக்கும் படத்தில் இசையமைப்பாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்த போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். பணியாற்றும்போது என்னை நல்ல சௌகரியமான நிலையில் பணிபுரிய அனுமதித்தார். இந்த படத்தில் பகவதி மற்றும் மாதேஷ் ஆகிய பாடலாசிரியருடன் பணியாற்றி இருக்கிறேன். இவர்களுடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பமும் இருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவிற்கு சிறப்பு நன்றி ” என்றார்.

அடியே

Gv Prakash is one of my inspiration says Justin Prabakar

சயின்ஸ் பிக்சனை காதலுடன் கலந்திருப்பது ஆச்சரியம்.. – மிஷ்கின்

சயின்ஸ் பிக்சனை காதலுடன் கலந்திருப்பது ஆச்சரியம்.. – மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் & கௌரி இணைந்து நடித்துள்ள படம் ‘அடியே’.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது இயக்குநர் மிஷ்கின் பேசுகையில்…

”ஜீ. வி. பிரகாஷ் வெரி ஸ்வீட் பாய். மியூசிக்.. பெர்ஃபாமன்ஸ் என இரண்டிலும் கலக்கும் பெக்யூலியரான கேரக்டர். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து இன்று தமிழில் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்திருக்கிறார்.

எல்லோரிடமும்… எல்லா தருணத்திலும். . இனிமையாகவே பேசக் கூடியவர். இன்றைய இளைய தலைமுறை படைப்பாளிகளை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. சயின்ஸ் ஃபிக்சன் படத்தை தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக சொல்ல முடியுமா? என்ற கேள்வி இருக்கிறது.

இதுபோன்ற படங்களில் எல்லாம் ஹாலிவுட்டில் தான் தயாரிப்பார்கள். அவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் தமிழ் சினிமாவில் இது எப்படி சாத்தியம்? அதுவும் சயின்ஸ் பிக்சன் விசயத்தை காதலுடன் கலந்து கொடுப்பது என்பது ஆச்சரியமான ஒன்று.

இந்த முன்னோட்டத்தை பார்க்கும் போது எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. என்னால் இது போன்ற ஒரு கோணத்தில் சிந்திக்க முடியாது. இந்த விசயத்தில் நம்பிக்கையுடன் செயல்பட்ட விக்னேஷ் கார்த்திக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற சயின்ஸ் ஃபிக்சன் கதையை முதலில் கேட்டு, தயாரிக்க ஒப்புக்கொண்ட தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

‘நிழல்கள்’ படத்தின் பாடல்களை நான் முதன் முதலாக கேட்டபோது ஏகாந்தமாக உணர்ந்தேன். அந்த உணர்வு ஜஸ்டின் பிரபாகரன் இசையில் இந்த படத்தின் பாடல்களை கேட்கும் போதும் ஏற்பட்டது” என்றார்.

தயாரிப்பாளர் பிரேம்குமார் பேசுகையில்…

” கொரோனா காலகட்டத்தில் வீட்டில் அமர்ந்து ‘திட்டம் இரண்டு’ எனும் படத்தை பார்த்தேன். வித்தியாசமாக இருந்தது. என் மகனிடம், இந்த படத்தின் இயக்குநர் யார்? என்று கேட்டேன். அவர் விக்னேஷ் கார்த்திக் என்று பதிலளித்தார். அவரை சந்திக்கலாம் என்று என்னுடைய விருப்பத்தை தெரிவித்தேன். சில நாட்களில் வித்தியாசமான கதை ஒன்று இருக்கிறது. தயாரிக்கிறீர்களா? என்று என் நண்பர் கேட்டபோது, சரி என்று சொன்னேன். அப்போது என்னிடம் கதை சொல்ல வந்தவர் விக்னேஷ் கார்த்திக். கதையைக் கேட்டதும் தயாரிக்க சம்மதித்தேன். மௌனமாக இருந்து காய்களை நகர்த்தி இப்படத்தை உருவாக்கினார். அடியே படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் சந்தோஷமாக பணியாற்றினார்கள்.

நாங்கள் இதுவரை 23 தொழில்களில் ஈடுபட்டிருக்கிறோம். அனைத்தும் ஆண்டவன் அருளால் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. ஒரு படம் தயாரித்திருக்கிறேன் என்பதை விட, ஒரு நல்ல படத்தை இந்த சமுதாயத்திற்கு கொடுத்திருக்கிறேன் என்ற மன நிறைவு இருக்கிறது.

இந்தப் படம் சிறப்பாக வந்திருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து சிம்பு தேவன் இயக்கத்தில் ‘போட்’ எனும் திரைப்படமும் தயாராகி இருக்கிறது. திறமையுள்ள இயக்குநர்களை வாய்ப்பளிப்பதற்காக ஆண்டவன் வசதியையும், வழியையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன் ” என்றார்.

அடியே

Sci-fi movie with love is different says Mysskkin

மீண்டும் ஆக்ஷன் கதையில் இறங்கிய கமல் – விக்ரம் பட இயக்குநர்

மீண்டும் ஆக்ஷன் கதையில் இறங்கிய கமல் – விக்ரம் பட இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக நாயகன் கமல்ஹாசனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ராஜேஷ் எம் செல்வா.

இவர் கமல் தயாரித்து நடித்த ‘தூங்காவனம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் படுதோல்வியை தழுவியது.

ஆனாலும் மீண்டும் தன் பட தயாரிப்பில் ராஜேஷுக்கு வாய்ப்பளித்தார் கமல். ‘கடாரம் கொண்டான்’ என்ற பெயரிடப்பட்ட அந்தப் படத்தில் சீயான் விக்ரம் நடித்திருந்தார். இந்த படமும் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் இரண்டு தோல்விகளில் இருந்து மீண்டு வர தனது 3வது படத்தை இயக்க தயாராகி விட்டார் ராஜேஷ் எம் செல்வா.

இந்த படத்தில் அதிதி ராவ் ஹைதாரி, கெட்டிகா சர்மா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.

சைமன் கே கிங் இசையமைக்க, சுனோஜ் வேலாயுதம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தை அல்லு அரவிந்தின் ஆஹா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் துவங்கிய நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படமும் ‘தூங்காவனம்’ மற்றும் ‘கடாரம் கொண்டான்’ ஆகிய படங்களைப் போல ஆக்ஷன் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

ராஜேஷ் எம் செல்வா

Director Rajesh M Selvas 3rd movie updates

More Articles
Follows