தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நேற்று மார்ச் 18 ஆம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவிற்காக தமிழகமெங்கும் உள்ள சிலம்பரசன் ரசிகர்கள் சென்னை வந்திருந்தனர்.
விழா மேடையில் உற்சாகமாக பாட்டு பாடி நடனமாடி மாஸாக பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் சிம்பு.
அவர் பேசும்போது.. “எனக்கு பத்து தல படத்தில் ஜோடி இல்லை.. துணை இல்லை.. வாழ்க்கையிலும் எனக்கு துணை இல்லை. ஆனால் அது ஒரு பிரச்சனை இல்லை” என்றார்.
இந்த விழாவிற்கு சிம்புவின் பெற்றோர்களான டி ராஜேந்தர் அவரது மனைவி உஷாவும் கலந்து கொண்டனர்.
அவரது அம்மா உஷாவிடம் சிம்புவின் திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது.. “சிம்புவின் திருமணம் குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்தான் சொல்ல வேண்டும்.” என்று சொன்னார்.
சிம்பு திருமணம் செய்து கொள்வாரா.? அவரது திருமணம் எப்போது.? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
Usha Rajendar talks about her son marriage