தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமாவையே தன் படைப்புகளால் பிரமிக்க வைத்தவர் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி.
இவரது இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி படம் கடந்த ஆண்டு வெளியானது.
இப்படம் உலகளவில் ரூ. 600 கோடிக்கு வசூல் செய்து, உலக சினிமாவேயே திரும்பி பார்க்க வைத்தது.
தற்போது பாகுபலி இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
அடுத்த ஆண்டு 2017 ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
தற்போதை இதன் வியாபாரம் பட்டைய கிளப்ப தொடங்கிவிட்டது.
இதன் வட அமெரிக்க தியேட்டர் உரிமை மட்டும் ரூ.44 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம்.
வட அமெரிக்காவில் உள்ள கிரேட் இந்தியா பிலிம்ஸ் நிறுவனம் பாகுபலி 2 படத்தை 1000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.