பாரீனிலும் பட்டைய கிளப்பும் ‘பாகுபலி 2’

பாரீனிலும் பட்டைய கிளப்பும் ‘பாகுபலி 2’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prabhas rana bahubaliஇந்திய சினிமாவையே தன் படைப்புகளால் பிரமிக்க வைத்தவர் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி.

இவரது இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி படம் கடந்த ஆண்டு வெளியானது.

இப்படம் உலகளவில் ரூ. 600 கோடிக்கு வசூல் செய்து, உலக சினிமாவேயே திரும்பி பார்க்க வைத்தது.

தற்போது பாகுபலி இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

அடுத்த ஆண்டு 2017 ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

தற்போதை இதன் வியாபாரம் பட்டைய கிளப்ப தொடங்கிவிட்டது.

இதன் வட அமெரிக்க தியேட்டர் உரிமை மட்டும் ரூ.44 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம்.

வட அமெரிக்காவில் உள்ள கிரேட் இந்தியா பிலிம்ஸ் நிறுவனம் பாகுபலி 2 படத்தை 1000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

டீசரை வாபஸ் வாங்கிய விஜய் ஆண்டனி; நாளை அடுத்த சைத்தான்

டீசரை வாபஸ் வாங்கிய விஜய் ஆண்டனி; நாளை அடுத்த சைத்தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

saithan teaserவிஜய் ஆண்டனி, அருந்ததி நாயர், மீரா கிருஷ்ணன், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைத்தான்’.

இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது.

வரவேற்பை போலவே, எதிர்ப்பும் கிளம்பியது.

எனவே தற்போது பேஸ்புக், யூடியூப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இந்த டீசரை திடீரென நீக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது…

‘சைத்தான்’ டீசரில் மறைந்த பாடலாசிரியர் அண்ணாமலையின் வரிகள் இடம் பெற்று இருந்தது.

இது சமஸ்கிருத மந்திரம் ஒன்றின் சாயலை ஒட்டி இருப்பதால் சிலர் மனவருத்தம் அடைந்துள்ளனர் என்பதை அறிந்தேன்.

எனவே, புதிய வரிகளுடன் நாளை அக்டோபர் 5ஆம் தேதி மாலை 7 மணிக்கு சைத்தான் புதிய டீசரை வெளியிட உள்ளேன்” என்றார்.

எவருக்கும் கிடைக்காத பெருமையை பெற்ற விஜய்சேதுபதி

எவருக்கும் கிடைக்காத பெருமையை பெற்ற விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijay sethupathi imagesநம்ம ஹீரோ நடிச்ச படம் இந்த வருஷமாச்சும் வரும்? வராதா? என பல நடிகர்களின் ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.

ஆனால் விஜய் சேதுபதி நடிப்பில் மாதத்திற்கு ஒரு படம், போய் மாதத்திற்கு இரண்டு படம் வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 19ஆம் தேதி இவரது நடிப்பில் தர்மதுரை படம் வெளியானது.

இதனை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பிறகு (செப். 23) ஆண்டவன் கட்டளை வெளியானது.

இவை இரண்டும் இன்றும் வெற்றிகரமாக சத்யம் சினிமாஸில் ஓடிக்கொண்டிருக்கிறது.

தற்போது இரண்டு வார இடைவெளியில் அக்டோபர் 7ஆம் தேதி றெக்க வெளியாக உள்ளது.

இந்த படமும் சத்யம் சினிமாஸ் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

எனவே ஒரே நடிகரின் 3 படங்களும் ஒரு திரையரங்க வளாகத்தில் திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இது எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமையாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

றெக்க இயக்குனரின் அடுத்த பட ஹீரோ.. விஷால்? ஜெயம் ரவியா?

றெக்க இயக்குனரின் அடுத்த பட ஹீரோ.. விஷால்? ஜெயம் ரவியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal jayam raviவா டீல் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த றெக்க படத்தை இயக்கினார் ரத்தினசிவா.

இப்படத்தின் ட்ரைலருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தனது அடுத்த படத்தை இயக்க ரெடியாகிவிட்டார் ரத்தினசிவா.

இப்படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார்.

இதன் சூட்டிங்கை ஜனவரியில் தொடங்கவுள்ளனர்.

இதில் விஷால் அல்லது ஜெயம் ரவி நாயகனாக நடிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘பைரவா’ அப்டேட்ஸ்: ‘கத்தி’யுடன் கனெக்ஷன் ஆகிறதா?

‘பைரவா’ அப்டேட்ஸ்: ‘கத்தி’யுடன் கனெக்ஷன் ஆகிறதா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijayபரதன் இயக்கத்தில் ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதன் சூட்டிங் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

சென்னை அருகேயுள்ள பின்னி மில்லில் கோயில் மற்றும் கோபுரம் போன்ற பிரம்மாண்ட அரங்குகளை அமைத்து, ஒரு பாடல் காட்சியை இன்று படமாக்கவிருக்கிறார்கள்.

கோயில் திருவிழா பின்னணியில் படமாக்கப்படும் இப்பாடலில் விஜய்- கீர்த்தியுடன் பல்வேறு நடன கலைஞர்களும் பங்கு பெறுகிறார்கள்.

மேலும் இப்படத்தில் உள்ள சண்டைக் காட்சி கத்தி படத்தில் பிரபலமான காயின் சண்டை போன்று இடம்பெறுவதாக தகவல்கள் வந்துள்ளன.

இன்னும் சில தினங்களில் படக்குழுவினர் வெளிநாடு பறந்து ஒரு பாடலை படமாக்கவிருக்கிறார்களாம்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

செல்வராகவனை பெருமைப்பட வைத்த தனுஷ்

செல்வராகவனை பெருமைப்பட வைத்த தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush selvaraghavanதனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா மற்றும் அண்ணன் செல்வராகவன் இருவரும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களாக உள்ளனர்.

ஆனால் இவர்களின் வழியில் வந்த தனுஷோ இதுநாள் வரை நடிப்பு, பாடல் ஆசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பு என இருந்தார்.

தற்போது பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக மாறி விட்டார்.

ராஜ்கிரண் நடித்துவரும் இதன் படப்பிடிப்பை படுவேகமாக படமாக்கி வருகிறாராம் தனுஷ்.

இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை செல்வராகவன் பார்த்து இருக்கிறார்.

“எல்லாம் கலந்து, காமெடியாகவும் மிகவும் உணர்வுபூர்வமாகவும் படம் உள்ளது. தனுஷ் உன்னை நினைத்து பெருமைப் படுகிறேன்.

ராஜ்கிரண் சார் சூப்பர் பெர்மான்ஸ்” என தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

More Articles
Follows