விஜய்யின் ‘லியோ’ படத்திற்காக கடவுளிடம் கோரிக்கை வைத்த ரஜினிகாந்த்

விஜய்யின் ‘லியோ’ படத்திற்காக கடவுளிடம் கோரிக்கை வைத்த ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் தற்போது ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார்.

ஞானவேல் இயக்கி வரும் இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், பகத்பாசில், ராணா, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் பங்கேற்கும் சூட்டிங் தளத்தின் வீடியோ காட்சிகள் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

கேரளாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் அதன் பிறகு திருநெல்வேலி பகுதி படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தற்போது தூத்துக்குடி சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்..

ரஜினிகாந்த்

“45 வருடங்களுக்கு முன்பு புவனா ஒரு கேள்விக்குறி என்ற படத்தின் படப்பிடிப்புக்காக இங்கு வந்தேன். தற்போது இங்கு மீண்டும் வந்துள்ளேன்.

இங்குள்ள மக்கள் அன்பானவர்கள். அனைவரிடமும் போட்டோ எடுக்க முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது.

பிறகு விஜயின் லியோ படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது.. “லியோ படம் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்” என தெரிவித்தார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த்

Rajinikanth prayers of Vijays Leo success

திருநங்கையாக கலக்கும் பிரபல யூடியுபர் நடிகர் ஜி பி முத்து

திருநங்கையாக கலக்கும் பிரபல யூடியுபர் நடிகர் ஜி பி முத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிக்டாக், யூடியுப் மூலம் பிரபலம் அடைந்தவர் ஜி.பி.முத்து.

தனியார் நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள், சின்னத்திரை நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலங்களில் ஒருவராக வலம் வர தொடங்கினார்.

இதையொட்டி புகழின் உச்சிக்கு சென்ற ஜி.பி.முத்து சினிமாவில் அறிமுகமாகி நடிக்க தொடங்கினார்.

இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவரது புகழ் மேலும் அதிகரித்து சினிமா வாய்ப்புகள் வரிசையாக வரத்தொடங்கின.

இந்நிலையில், ஜி.பி.முத்து தற்போது ‘ஆர்வன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஜி.பி.முத்து திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த போஸ்டரை ஜி.பி.முத்து தனது வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆர்வன்

gp muthu playing Transgender roll

24 Carat Gold iPhone-ஐ தவறவிட்ட நடிகை வைத்த கோரிக்கை

24 Carat Gold iPhone-ஐ தவறவிட்ட நடிகை வைத்த கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சிங் சாப் தி கிரேட்’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா.

அதன்பின்னர் பெங்காலி, இந்தி, கன்னட மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

தமிழில் லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்து ஊர்வசி ரவுத்தேலா தமிழும் பிரபலமடைந்தார்.

தற்போது பல இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

ஊர்வசி ரவுத்தேலா அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை கூறி ட்ரோல்களில் மாட்டிக் கொள்வார்.

அகமதாபாத், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இரு தினங்களுக்கு முன்பு இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண திரைப்பிரபலங்கள் பலர் வந்தனர்.

இதில் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவும் பார்வையாளராக வந்திருந்தார்.

அப்போது ஊர்வசி ரவுத்தேலா தனது 24 கேரட் கோல்டு ஐ போனை (i phone) தவறவிட்டுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக ஊர்வசி, அகமதாபாத் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இந்த புகார் மனுவை ஊர்வசி ரவுத்தேலா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், யாராவது தனது ஐபோனை (i phone) பார்த்தால் தன்னை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊர்வசி ரவுத்தேலா

urvashi Rautela lost her 24 carat real gold iPhone in India vs Pakistan match

வால்மீகி ராமாயணத்தில் சீதையாக சாய் பல்லவி.; ராமர் யார் தெரியுமா.?

வால்மீகி ராமாயணத்தில் சீதையாக சாய் பல்லவி.; ராமர் யார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராமாயணம் கதையை மையமாக வைத்து ஏற்கனவே ‘ஸ்ரீ ராமராஜ்ஜியம்’, ‘ஆதிபுருஷ்’ உள்ளிட்ட பல படங்கள் வந்துள்ளன.

தற்போது இன்னொரு ராமாயண கதை உள்ள படம் தயாராக உள்ளது.

இந்தப்படத்தை நித்திஷ் திவாரி இயக்குகிறார்.

இந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய்பல்லவியும் நடிக்கின்றனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகஉள்ளது.

இந்நிலையில், சீதையாக நடிப்பது குறித்து சாய்பல்லவி நெகிழ்ச்சியோடு கூறும்போது, “இயக்குனர் நித்திஷ் திவாரி எனக்குள் சீதையை எப்படி பார்த்தார் என்ற உணர்வு மகிழ்ச்சியை தருகிறது. இது நிஜமாகவே அரிதாகக் கிடைக்கும் அதிர்ஷ்டம். படப்பிடிப்புக்கு எப்போது அழைப்பார்கள் என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

இது ஒரு சவாலான வேடம். புகழ்பெற்ற நடிகைகள் நடித்த கதாபாத்திரம் இது. அவர்கள் நடித்ததில் 10 சதவீதம் நடித்தாலும் நன்றாக செய்த மாதிரிதான். விரைவில் கதையை கேட்க மும்பை செல்கிறேன். ஏற்கனவே இந்திய சினிமாவில் பல ராமாயண படங்கள் வந்துள்ளன. ஆனால் வால்மீகி ராமாயணத்தை யாரும் பரிபூரணமாக காட்டவில்லை. இந்தப்படம் அந்த குறையை தீர்க்கும்”என்றார்.

 ரன்பீர் கபூர்

ranbir kapoor and Sai Pallavi playing in Ramayana

பிஆர்ஓ யூனியன் தேர்தல் : விஜயமுரளி – ஜான் – யுவராஜ் உள்ளிட்டோர் வெற்றி

பிஆர்ஓ யூனியன் தேர்தல் : விஜயமுரளி – ஜான் – யுவராஜ் உள்ளிட்டோர் வெற்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்ச் சினிமாவில் ‘பி.ஆர்.ஓ.க்கள்’ என்றழைக்கப்படும் பத்திரிகை தொடர்பாளர்களின் சங்கமான ‘தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்க’த்திற்கு 2023-2025-ம் வருடங்களுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

2 வருடங்களுக்கு ஒரு முறை இந்தச் சங்கத்திற்குத் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததால், புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க புதிய தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்கள், இணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் தலைவர் பதவிக்கு விஜய முரளியும், செயலாளர் பதவிக்கு ஜானும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மற்றைய பதவிகளுக்குப் போட்டி இருந்ததால் அதற்கான வாக்குப் பதிவு இன்று காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரையிலும் சாலிகிராமம் பிரசாத் 70 எம்.எம். தியேட்டரில் நடைபெற்றது.

தேர்தல் அதிகாரியாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.சங்கர் பணியாற்றினார்.

இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 82 வாக்காளர்களில், 80 பேர் தங்களது வாக்கினைப் பதிவு செய்தார்கள்.

2 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடைந்ததும் வாக்குப் பெட்டி பூட்டி சீல் வைக்கப்பட்டது. பின்பு மதிய உணவு இடைவேளைக்குப் பின்பு 3 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

முதலில் பொருளாளருக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட யுவராஜ், 54 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட குமரேசன் 26 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

பிஆர்ஓ யூனியன் தேர்தல்

துணைத் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிட்ட கோவிந்தராஜ் 45 வாக்குகளையும், வி.கே.சுந்தர் 44 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றனர். எம்.பி.ஆனந்த் 34 வாக்குகளையும், புவன் 28 வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்தனர்.

இணைச் செயலாளர்கள் பதவிக்குப் போட்டியிட்டவர்களில் கே.எஸ்.கே.செல்வக்குமார் 41 வாக்குகளையும், வெங்கட் 40 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றனர். ஆர்.ராமானுஜம் 25 வாக்குகளையும், என்.தர்மதுரை 23 வாக்குகளையும், என்.கணேஷ்குமார் 23 வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்தனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்டவர்களில், கிளாமர் சத்யா 72 வாக்குகளையும், ஜி.பாலன் 66 வாக்குகளையும், என்.சரவணன் 64 வாக்குகளையும், ஜெ.சுரேஷ்குமார் 62 வாக்குகளையும், மதுரை செல்வம் 61 வாக்குகளையும், வி.பி.மணி 58 வாக்குகளையும், எஸ்.செல்வரகு 56 வாக்குகளையும், வி.எம்.ஆறுமுகம் 53 வாக்குகளையும், முத்துராமலிங்கன் 49 வாக்குகளையும், பெற்று வெற்றி பெற்றுள்ளனர். டி.நித்திஷ் ராம் 48 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார்.

Tamil Cinema Pro Union Election Result 2023 – 2025

—-

(சினிமா பி.ஆர்.ஓ. யூனியன்) தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியனின் 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான தேர்தல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இதில் என். விஜயமுரளி தலைவராகவும், ஆ.. ஜான் செயலாளராகவும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.

பொருளாளராக பி.யுவராஜ் துணைத்தலைவர்களாக கோவிந்தராஜ், வி.கே.சுந்தரும் இணைச்செயலாளர்களாக கே.செல்வகுமார், வெங்கட் இருவரும் வெற்றிபெற்றுள்ளனர். செயற்குழு உறுப்பினர்களாக ஆறுமுகம், பாலன், கிளாமர் சத்யா, வி. பி. மணி, மதுரை ஆர். செல்வம், முத்துராமலிங்கம், சரவணன், செல்வரகு, சுரேஷ்குமார் ஆகிய ஒன்பது பேர் தேர்வாகி உள்ளனர்.

தேர்தல் அதிகாரியாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். சங்கர் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவித்தார்.

பிஆர்ஓ யூனியன் தேர்தல்

அன்புச்செழியன் தயாரிப்பில் சந்தானம் படத்தின் டைட்டில் அப்டேட்

அன்புச்செழியன் தயாரிப்பில் சந்தானம் படத்தின் டைட்டில் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

G.N. அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், ‘வெள்ளைக்கார துரை’, ‘தங்கமகன்’ ‘மருது’, ‘ஆண்டவன் கட்டளை’, உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.

அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது.

மேலும், சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர்.

இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சந்தானம்

பல வெற்றி படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

D. இமானின் இசையில் மூன்று பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர்.

ஒளிப்பதிவு – ஓம் நாராயண் எடிட்டிங் – எம். தியாகராஜன்
கலை – எம். சக்தி வெங்கட்ராஜ் ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல்.

பிரம்மாண்டமான பாடல் காட்சிகளுக்கு நடனம் அமைத்து இயக்கியுள்ளனர் பிருந்தா – பாபா பாஸ்கர்.

சென்னை மற்றும் சுற்றுப் புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

முழுவீச்சில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வெளியிடும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

கதையம் சத்தோடு நகைச்சுவை கலந்த கமர்ஷியல் பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் இப்படத்தை ஆனந்த் நாராயண் இயக்குகிறார்.

தயாரிப்பு : கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன்

சந்தானம்

Anbuchezhian Production No 5 starring Santhanam

More Articles
Follows