தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவை அச்சுறுத்தும் பூதமாக எழுந்துள்ளது திருட்டு விசிடி விவகாரம்.
திருட்டு விசிடி மற்றும் இணையத்தில் வெளியாகும் புதிய படங்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்.
இதில் தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன் ஆகிய இரண்டு இணையங்கள் புதுப்படங்கள் ரிலீஸ் படங்களை வெளியிட்டு தயாரிப்பாளர்களுக்கு சவால் விட்டு வருகிறது.
இந்த இணையத்தள அட்மின்களை கைது செய்துவிட்டோம் என விஷால் அறிவித்தார்.
ஆனால் அதன்பின் அந்த இணையத்தள சம்பந்தப்பட்டவர்கள் அப்படி யாரையும்ம கைது செய்யவில்லை என தெரிவித்தனர்.
மேலும், துப்பறிவாளன் படத்தை ரிலீஸ் அன்றே இணையத்தில் வெளியிடுவோம் என கூறி அதையும் சாதித்து காட்டினர்.
இந்நிலையில் அந்த இணையங்களின் நெறியாளர்கள் புகைப்படத்தை வெளியிட்டு, இவர்களை பற்றிய தகவல்கள் கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
The person who found Tamil Rocker and Tamil Gun admin will be awarded says Vishal