தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகை பூர்ணா நடித்த ‘கண்ணாமூச்சி’ வெப் தொடர் அறிமுக நிகழ்ச்சியில் சென்னையில் நடைப்பெற்றது.
இதில் இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் கலந்து கொண்டு பேசியதாவது:-
“விஷாலை வைத்து துப்பறிவாளன் படத்தை இயக்கினேன்.
அந்த படம் வெற்றி பெற்றதால் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுத சொன்னார். எழுதினேன்.
அந்த கதை சிறப்பாக வந்துள்ளதாக பாராட்டி நானே படத்தை தயாரிக்கிறேன் என்றார்.
இந்த கதை தயாராக ரூ.35 லட்சம் செலவு செய்ததாக விஷால் தெரிவித்துள்ளார். இதை ஆதாரத்துடன் அவர் நிரூபிக்க தயாரா?
32 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஒரு நாளைக்கு ரூ.15 லட்சம் செலவு செய்தேன் என்று கூறியுள்ளார்.
அதன்படி 32 நாட்களுக்கு ரூ.4 கோடியே 50 லட்சம்தான் ஆகும். ஆனால் ரூ.13 கோடி செலவு என சொல்கிறார்.
விஷால் சொல்வதில் உண்மை இல்லை.
அவரை சகோதரனாக பார்த்தேன். ஆனால் துரோகம் செய்தார்.
தயாரிப்பாளர்கள் எனக்கு படம் கொடுக்கக் கூடாது என கூறியுள்ளார்.
சினிமா இல்லாவிட்டாலும் என்னால் பிழைக்க முடியும். யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டேன்.
ஆனால் விஷாலை சும்மா விடப்போவது இல்லை”
இவ்வாறு மிஷ்கின் பேசினார்.