விஷால் கொடுத்த சோதனைகள்; மீண்டு வருவாரா இரும்புத்திரை மித்ரன்..?

விஷால் கொடுத்த சோதனைகள்; மீண்டு வருவாரா இரும்புத்திரை மித்ரன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal and director mithran‘துப்பறிவாளன்’ படத்தை தொடர்ந்து விஷால் நடித்துள்ள படம் ‘இரும்புத்திரை’.

விஷால் பிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தில் அர்ஜுன் வில்லனாக நடிக்க, நாயகியாக சமந்தா நடித்துள்ளார்.

இப்படத்தை மித்ரன் என்பவர் இயக்கியுள்ளார்.

இதனிடையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட விஷால் முன்வந்தார்.

அவரின் வேட்பு மனு நிராகரிப்பட்டாலும் அது தொடர்பான சர்ச்சை முடிய பல மாதங்கள் ஆகியது. இதனால் படப் பணிகள் பாதிக்கப்பட்டது.

இதன் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிந்து படம் திரைக்கு வர தயாராகிவிட்டது.

ஒருவழியாக பிரஸ் மீட் ஒன்றை நடத்தி டைரக்டர் மித்ரன் முன்னிலையில் விரைவில் படத்தை வெளியிடுவேன் என அறிவித்தார் விஷால்.

இதன் பின்னர் கீ படத்தின் ஆடியோ வெளியீட்டின் போது, அப்பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு உதவிடும் வகையில் தன் இரும்புத்திரை படத்தின் வெளியீட்டை தள்ளி வைப்பேன் என்றார்.

தற்போது சினிமா ஸ்டிரைக் தொடங்கிவிட்டது. இதனால் நிறைய படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்டிரைக் முடிந்தவுடன் ரிலீசுக்கு தயாராக இருந்த படங்களுக்கே முன்னுரிமை என அறிவித்துவிட்டார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.

எனவே இரும்புத்திரை படம் வெளியாவதில் இன்னும் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது.

வருகிற மே அல்லது ஜுன் மாதம் படத்தை வெளியிட விஷால் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

படம் ரிலீசுக்கு தயாராகிவிட்ட போதிலும் ஒரு டைரக்டருக்கு இத்தனை சோதனைகளா?

ஸ்டிரைக்கிலும் சூட்டிங் நடத்திய விஜய் ரசிகர்களுக்காக செய்த காரியம்

ஸ்டிரைக்கிலும் சூட்டிங் நடத்திய விஜய் ரசிகர்களுக்காக செய்த காரியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay in Thalapathy 62ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தளபதி 62’ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

தற்போது தமிழ் திரையுலகில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருவதால், சிறப்பு அனுமதியுடன் இப்பட சூட்டிங்கை சென்னையில் நடத்தி வருகின்றனர்.

விஜய் பட சூட்டிங்க்கு திரையுலகினரே தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த செய்தி வைரலாகியது. இதனால் சூட்டிங் நடக்கும் இடத்தை அறிந்த விஜய் ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே நின்று ஆரவாரம் செய்தார்கள்.

நிறைய ரசிகர்கள் திரண்டதால் விஜய் வெளியே வரமாட்டார் என பலரும் நினைத்தனர்.

ஆனால் தன் ரசிகர்களுக்காக வெளியே வந்த விஜய் ரசிகர்களை பார்த்து கையை ஆட்டி அவர்களை குஷிப்படுத்தினார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் வில்லன் வேடங்களில் நடிக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை இந்தாண்டு 2018 தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

மனிதனுக்கும் நாய்க்கும் உறவை சொல்ல வரும் அட்வென்சர் படம்

மனிதனுக்கும் நாய்க்கும் உறவை சொல்ல வரும் அட்வென்சர் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dog adventure film in tamilஒரு காலத்தில் விலங்குகளை முக்கிய கேரக்டர்களாக வைத்தே பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் உண்டு.

ஆனால் இன்று விலங்குகள் நல வாரியம் முதல் ப்ளுகிராஸ் வரை ஏகப்பட்ட பிரச்சினைகள் இருப்பதால் கிராபிக்ஸ் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதனால் விலங்குகளை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் தயங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் நாயை மையப்படுத்தி ஒரு படம் உருவாக உள்ளது.

இந்த படத்தை உறுமீன் பட இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி எழுதி இயக்க உள்ளார்.

காக்டைல் சினிமாஸ் மற்றும் யுனைடெட் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

நாய்க்கும் மனிதருக்கும் இடையே இருக்கும் உறவையும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் விதத்தையும் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கதையை உருவாக்கியுள்ளனர்.

மேலும் குழந்தைகளைக் கவரும் விதத்தில் ஒரு அட்வென்சர் படமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

dog adventure

தயாரிப்பாளர்களின் பட்ஜெட்டை குறைக்க சூர்யாவின் சூப்பர் ப்ளான்

தயாரிப்பாளர்களின் பட்ஜெட்டை குறைக்க சூர்யாவின் சூப்பர் ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaதமிழ் சினிமாவில் தல தளபதி நடிகர்களிடையே பலத்த போட்டி இருந்தாலும் முன்னணி நடிகர்களில் ஒருவராக தன் இடத்தை தக்க வைத்து வருபவர் சூர்யா.

பொது வாழ்க்கையில் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து தன் அகரம் பவுண்டேசன் மூலம் படிக்க உதவி செய்தும் வருகிறார்.

தன்னைச் சார்ந்த சமூகம் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் சூர்யா, தற்போது தன் பட தயாரிப்பாளர்களின் நலனுக்காக ஒரு நல்ல முடிவொன்றை எடுத்துள்ளார்.

இது குறித்து சூர்யாவின் 2D தயாரிப்பு நிறுவனத்தின் இணை-தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் கூறியதாவது…

தயாரிப்பாளர்களின் நலன் கருதி, தனது உதவியாளர்களின் சம்பளத்தை இனி தானே கொடுப்பதாக சூர்யாஅறிவித்துள்ளார்” என்று கூறினார்.

இதனால் தயாரிப்பாளர்களின் பட்ஜெட் கணிசமாக குறையும் என கூறப்படுகிறது. இதுபோன்று டாப் ஹீரோ, ஹீரோயின்கள் செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தன் காதலனை குறித்து பொது மேடையில் பேசிய நயன்தாரா

தன் காதலனை குறித்து பொது மேடையில் பேசிய நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Nayantharaஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களை செலக்ட் செய்து நடித்து வருகிறார் நயன்தாரா.

அறம் படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் கோலமாவு கோகிலா என்ற படம் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து இமைக்கா நொடிகள் படமும் தயாராகவுள்ளது.

இந்நிலையில் பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று நடத்திய World Of Women 2018 என்ற விருது விழாவில் கலந்து கொண்டார் நயன்.

அவருக்கு சினிமாவில் சாதித்து வரும் பெண் என்ற அடிப்படையில் ஒரு விருது வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய நயன்தாரா, என்னுடைய இந்த முன்னேற்றத்திற்கு காரணமான என் அம்மா, அப்பா, அண்ணன் ஆகியோருக்கு நன்றி என்றார்.

முக்கியமாக தன் காதலனுக்கும் நன்றி என்றார்.

அவரின் காதலன் யார்? என்பதை நாங்கள் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துக் கொள்ள போகிறீர்களா..?

nayanthara world of women

 

ஆதரவற்றோருக்கும் கிடா விருந்தளித்த தொட்ரா படக்குழுவினர்

ஆதரவற்றோருக்கும் கிடா விருந்தளித்த தொட்ரா படக்குழுவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thodraa movie shoot wrap with Kida virundhu

ஜெ எஸ் அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’.

இயக்குநர் மதுராஜ் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

பிருத்வி ராஜன், வீணா, ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா ஆகியோர் நடித்துள்ளனர். உத்தமராஜா இசையில் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளார்.

படப்பிடிப்பு பழனி, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்படாமல் மீதமிருந்தது.

அதற்கான ஐந்து நாட்கள் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வந்தது. பிருத்வி ராஜன், வீணா, எம்.எஸ்.குமார், மைனா சூசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பதினைந்தாம் தேதி நிறைவு பெற்ற படப்பிடிப்பில் கிட்டத்தட்ட நூற்றைம்பது பேர் வரை கலந்துகொண்டனர்.

அவர்கள் அனைவருக்கும் கிடா வெட்டி உணவு வழங்க ஏற்பாடு செய்தார் தயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணக்குமார்.

இரவு விருந்தாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிடாவிருந்து களைகட்டியது. மகிழ்வான இவ்விருந்தோடு படப்பிடிப்பு நிறைவடைந்தது.

அதோடு இருபத்தைந்து பேருக்கான உணவு, பொட்டலமாக்கப்பட்டு சாலையோரம் இருக்கும் முதியோருக்கும் ஆதரவற்றோருக்கும் படக்குழுவினர் வழங்கினர்.

ஏற்கனவே, நடைபெற்ற படப்பிடிப்பின் காட்சிகள் எடிட்டிங், டப்பிங், உட்பட அனைத்து வேலைகளும் முடிந்து தயாராக இருக்கிறது.
இப்போது எடுத்த காட்சிகள் மட்டும் இணைக்கப்பட்டால் படம் வெளியீட்டிற்குத் தயாராகிவிடும்.

“படத்தை வெகு விரைவாக நிறைவு செய்துகொடுத்தார் இயக்குநர் மதுராஜ். அடுத்தடுத்து நல்ல படங்கள் இயக்கும் இயக்குநராக அவர் வருவார்.

அவருக்கும், விரைந்து முடிக்க உதவிய படக்குழுவினருக்கும் எங்களது நன்றிகள்” என்றார் ஜெய் சந்திரா சரவணக்குமாரும், அவரது கணவர் எம்.எஸ்.குமாரும்.

Thodraa movie shoot wrap with Kida virundhu

thodra wap

More Articles
Follows