தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அன்னக்கிளி படத்தில் இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர் பஞ்சு அருணாச்சலம்.
மேலும் பல படங்களுக்கு கதை எழுதியும் உள்ளார்.
இவையில்லாமல் பட படங்களை இயக்கியும் தயாரித்தும் இருக்கிறார்.
முரட்டுக் காளை, சகலகலா வல்லவன், அபூர்வ சகோதரர்கள் போன்ற சூப்பர் ஹிட் படங்களுக்கு இவர் கதை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு தற்போது 75 வயதாகிறது.
இந்நிலையில் இன்று திடீரென வயது மூதிர்வு காரணமாக மரணமடைந்தார்.
அவரது உடல் தி.நகரில் உள்ள அவரது வீட்டில் பிரபலங்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பஞ்சு அருணாச்சலத்தின் மகன் தற்போது அமெரிக்காவில் இருப்பதால், அவர் வரும் வரை உடலை மருத்துவமனையில் வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.