தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எம்ஜிஆர், சிவாஜி, , கமல்ஹாசன் ஆகியோர் நடித்த திரைப்படங்களில் சண்டைக் காட்சிகள் அமைப்பதில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சோமு.
இவர் எம்ஜிஆரின் குருவாகவும் இருந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இவர் கப்பலோட்டிய தமிழன், அபூர்வ சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தும் உள்ளார்.
அவரது மனைவியும், நடிகையுமான எஸ்.சுப்புலட்சுமி தம்பதியினரின் மகன் சண்முகராஜன் என்ற ராஜ முஸ்தபா.
சண்முகராஜனும் கடந்த காலங்களில் சாவி, ஊமை விழிகள் மற்றும் கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் வாழ்நாள் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
சண்முகராஜன் சில திரைப்படங்களில் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
இவருக்கு நகினா ராஜ் என்ற மனைவியும், மஸ்தான் என்ற மகனும் உள்ளனர்.
இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குறைந்ததை தொடர்ந்து, குடும்பம் மிகவும் நலிவுற்ற நிலையில் சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் சாலையில் உள்ள தனியார் வாடகை குடியிருப்பில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது வாய் புற்றுநோய் (கேன்சர் நோய்) காரணமாக சண்முகராஜன் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
மகன் மஸ்தான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கி 2 கால்களும் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருகிறார்.
இதனால் மருத்துவ செலவிற்கு கூட வழியில்லாமல் சிகிச்சை பெற முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்.
கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வு இழந்து தவிக்கும் தங்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், நடிகர் சங்கமும் கருணையோடு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று நகினா ராஜ் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ayirathil oruvan movie actor shanmugarajan suffering from cancer