புற்றுநோய் பாதிப்பில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ பட நடிகர்; பஞ்சத்தில் அடிபட்ட நடிகரின் குடும்பம்

புற்றுநோய் பாதிப்பில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ பட நடிகர்; பஞ்சத்தில் அடிபட்ட நடிகரின் குடும்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எம்ஜிஆர், சிவாஜி, , கமல்ஹாசன் ஆகியோர் நடித்த திரைப்படங்களில் சண்டைக் காட்சிகள் அமைப்பதில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சோமு.

இவர் எம்ஜிஆரின் குருவாகவும் இருந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

இவர் கப்பலோட்டிய தமிழன், அபூர்வ சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தும் உள்ளார்.

அவரது மனைவியும், நடிகையுமான எஸ்.சுப்புலட்சுமி தம்பதியினரின் மகன் சண்முகராஜன் என்ற ராஜ முஸ்தபா.

சண்முகராஜனும் கடந்த காலங்களில் சாவி, ஊமை விழிகள் மற்றும் கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் வாழ்நாள் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

சண்முகராஜன் சில திரைப்படங்களில் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

இவருக்கு நகினா ராஜ் என்ற மனைவியும், மஸ்தான் என்ற மகனும் உள்ளனர்.

இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குறைந்ததை தொடர்ந்து, குடும்பம் மிகவும் நலிவுற்ற நிலையில் சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் சாலையில் உள்ள தனியார் வாடகை குடியிருப்பில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது வாய் புற்றுநோய் (கேன்சர் நோய்) காரணமாக சண்முகராஜன் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

மகன் மஸ்தான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கி 2 கால்களும் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருகிறார்.

இதனால் மருத்துவ செலவிற்கு கூட வழியில்லாமல் சிகிச்சை பெற முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்.

கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வு இழந்து தவிக்கும் தங்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், நடிகர் சங்கமும் கருணையோடு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று நகினா ராஜ் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ayirathil oruvan movie actor shanmugarajan suffering from cancer

உதயநிதியின் கடைசி படம் ‘மாமன்னன்’ பட பாடல்கள் & ரிலீஸ் தேதி அப்டேட்

உதயநிதியின் கடைசி படம் ‘மாமன்னன்’ பட பாடல்கள் & ரிலீஸ் தேதி அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி நடிக்கும் கடைசி படம் ‘மாமன்னன்’. இந்த படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் அதிகரித்தது.

அதற்கு முக்கிய காரணம் இதுவரை அமையாத கூட்டணி இந்த படத்தில் அமைந்திருந்தது தான்.

ரஹ்மான் இசையில் மாரி செல்வராஜ் இயக்கிய வரும் இந்த படத்தில் உதயநிதி நாயகனாக நடிக்க அவருடன் பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்ற தகவல் வந்தபோது இது புதுவிதமான கூட்டணி என ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

இப்படத்தில் வடிவேலு பாடிய ராசா கண்ணு என்ற பாடலும் ஏ ஆர் ரகுமான் பாடிய சிக்கு சிக்கு ரயிலு என்ற பாடலும் வெளியாகிவிட்டன.

இந்த இரு பாடல்களும் இணையத்தை கலக்கி வரும் வேளையில் ‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி நடைபெறும் என சொல்லப்படுகிறது.

மேலும் அன்றைய தினத்தில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

இது உதயநிதி நடிப்பில் உருவாகும் கடைசி படம் என அவரே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Udhayanidhi Stalin’s last movie Maamannan song and movie release updates

டேய் புருசா அப்படி செய்யாதே.. இதுக்கு இல்லையா எண்டு.? ரவீந்தர் குறித்து மகாலட்சுமி பதிவு

டேய் புருசா அப்படி செய்யாதே.. இதுக்கு இல்லையா எண்டு.? ரவீந்தர் குறித்து மகாலட்சுமி பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிவியில் பிரபலமான நடிகை மகாலட்சுமி சினிமா தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

குண்டாக உயரமாக இருக்கும் ரவீந்தரை உயரம் குறைவாக இருக்கும் மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டதால் பலரும் பலவிதமான கமெண்ட்களை அள்ளி வீசினர். மேலும் இது இவர்களுக்கு முதல் திருமணம் அல்ல என்பதாலும் கூடுதல் கமெண்ட்களை அள்ளி வீசினர்.

இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் எனவும் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இவர்களுக்கு திருமணம் ஆகி சில மாதங்களே ஆன நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டதாகவும் இருவரும் விவகாரத்து செய்ய உள்ளதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

நம் தளத்தில் அப்படி ஏதும் செய்தி வெளியாகவில்லை. இந்த நிலையில் மகாலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த விவகாரத்து விவகாரம் குறித்து தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில்… “டேய்.. புருசா.. தனியாக இருக்கும் உன் புகைப்படத்தை பதிவிட வேண்டாம் என பலமுறை சொல்லி இருக்கிறேன்.

அதனால் தற்போது சமூக வலைத் தளங்களில் தவறான செய்தியை போடுகின்றனர்.

இதுபோன்ற தனியாக இருக்கும் போட்டோக்களை நீங்கள் பதிவிட்டால் இனி மூன்று வேளையும் உங்களுக்கு சேமியா உப்புமா தான் சமைத்து போடுவேன் எனவும் எச்சரித்துள்ளார் மகாலட்சுமி.

மேலும் யூடியூப் ஊடகங்களுக்கு.. இன்னுமாடா நாங்க ட்ரெண்டு.. இதுக்கு இல்லையா ஒரு எண்டு? எனவும் கலாய்த்து பதிவிட்டுள்ளார் மகாலட்சுமி்.

Mahalakshmi Ravinder instagram post viral on social media

ICU-வில் அனுமதிக்கப்பட்ட நடிகை நவ்யா நாயர்

ICU-வில் அனுமதிக்கப்பட்ட நடிகை நவ்யா நாயர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நவ்யா நாயர்.

இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘இஷ்டம்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையடுத்து, 2004 இல் வெளியான ‘அழகிய தீயே’ திரைப்படத்தில் நடிகர் பிரச்சன்னாவுடன் இணைந்து தமிழ் சினிமாவிலும் அறிமுகாமானார்.

‘பாசக்கிளிகள்‘, ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி‘, ‘மாயக்கண்ணாடி‘, ‘அமிர்தம்‘, ‘சில நேரங்களில்‘, ‘ஆடும் கூத்து‘, ‘ரசிக்கும் சீமானே‘, ‘ராம் தேடிய சீதை‘ போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2010 இல் சந்தோஷ் மேனன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

நவ்யா நாயர் திருமணத்திற்குப் பிறகு ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

கடந்த 13 ஆண்டுகளில் 5 படங்களில் சிறிய வேடங்களில் மட்டுமே நவ்யா நாயர் நடித்திருந்தார்.

மீண்டும் சினிமாவிற்கு எண்ட்ரி கொடுக்க நினைத்த நவ்யா நாயர் ‘ஜானகி ஜானே’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் கடந்த மே 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நடிகை நவ்யா நாயர் உணவு ஒவ்வாமை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தகவல் வெளியாகி இருக்கிறது.

‘ஜானகி ஜானே’ திரைப்படத்தின் புரமோஷனுக்காக அவர் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்ததாகவும் அப்போது உணவு ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், நடிகை நவ்யா நாயர் விரைவில் உடல் நலம் தேறி வர வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

actress navya nair admitted to hospital

150 வயது வரை உயிரோடு இருக்கும் வித்தையை அரியணை ஏற்றினால் சொல்வேன் – சரத்குமார்

150 வயது வரை உயிரோடு இருக்கும் வித்தையை அரியணை ஏற்றினால் சொல்வேன் – சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று மே 28 மதுரையில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவருமான நடிகருமான சரத்குமார் பங்கேற்றார்.

அப்போது தொண்டர்கள் மத்தியில் சரத்குமார் பேசியதாவது…

“2026 தேர்தலில் உங்கள் நாட்டாமை (சரத்) அரியணை ஏறவேண்டும் என்று சமக பொதுக்குழு தீர்மானத்தில் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அது சாத்தியமா என்பது சட்டமன்ற தேர்தலில்தான் தெரியவரும்.

அதனை சாத்தியமாக்க முயற்சி, நேர்மை, உடலுடன் மனவலிமை வேண்டும்.

நான் தற்போது 70 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இப்போதும் 25 வயது இளைஞனாக இருக்கிறேன்.

என்னால் 150 வயது வரை உயிருடன் இருக்க முடியும். 150 வயது வரை உயிருடன் இருப்பேன். அதற்கான வித்தையை நான் கற்று வைத்திருக்கிறேன்.

அந்த வித்தையை 2026 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நீங்கள் என்னை அரியணையில் ஏற்றும்போது அந்த வித்தையை சொல்வேன்.” என சரத்குமார் பேசினார்.

Sarath Kumar said he is going to live 150 years

2 வருட பிரேக் ஏன்.? ‘மின்னல் முரளி’ & ‘வீரன்’ என்ன சம்பந்தம் – ஹிப் ஹாப் ஆதி

2 வருட பிரேக் ஏன்.? ‘மின்னல் முரளி’ & ‘வீரன்’ என்ன சம்பந்தம் – ஹிப் ஹாப் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ‘மரகத நாணயம்’ பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள படம் ‘வீரன்’.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று மே 29ல் நடைபெற்றது.

இதில் பங்கேற்று நடிகர் ஆதி பேசும்போது…

“நான் 2 வருடங்கள் படிப்பதற்காக ப்ரேக் எடுத்துக் கொண்டேன். தற்போது பிஹெச்டி படித்து முடித்துவிட்டு வந்துள்ளேன்.

ஜூன் 2- தேதி ‘வீரன்’ படம் வெளியாகிறது. பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துச் சென்று பார்க்கலாம். எந்தவிதமான முகச் சுழிப்பு காட்சிகளும் இருக்காது.

இது நம் தமிழ் மண் சார்ந்த சூப்பர் ஹீரோ படம். ‘மின்னல் முரளி’ படத்திற்கும் ‘வீரன்’ படத்திற்கும் சம்மந்தம் இல்லை. இருக்காது.

விரைவில் வரலாறு தொடர்பான படத்தில் நடிக்க இருக்கிறேன்.

நான் நடிக்கும் படங்களாக இருந்தாலும், சரி, இயக்கும் படங்களாக இருந்தாலும் சரி, புது முகங்கள் இருப்பதில் கவனமாக இருக்கிறேன்.

‘வீரன்’ படத்திலும் நிறைய யூடியூபர்கள் நடித்துள்ளனர். நான் படம் தயாரித்தாலும் அதிலும் புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன்” என்றார்.

‘Is Veeran, Minnal Murali Copy?’ – Hiphop Tamizha Adhi

More Articles
Follows