தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சத்யராஜ், சூரி, பிந்து மாதவி உள்ளிட்டோர் இணைந்து நடித்த படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’.
இந்த படத்தில் சூரிக்கு அப்பாவாக நடித்தவர் தவசி.
பெரிய தாடி, முறுக்கு மீசை என வலம் வரும் நிறைய படங்களில் நடித்துள்ளார்.
‘கருப்பன் குசும்புக்காரன்’ என்று இவர் அந்த படத்தில் பேசிய வசனம் மிகவும் பாப்புலர் ஆனது.
கிழக்குச் சீமையிலே படத்தில் இவர் சினிமாவில் அறிமுகமானார்.
தற்போது ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்து வருகிறாராம்.
மேலும் ராசாத்தி என்ற சின்னத்திரை தொடரிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரது புதிய புகைப்படம் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மொட்டை தலையுடன் மெலிந்த உடலுடன் காணப்படுகிறார். ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போயிருக்கிறார் தவசி.
அவருக்கு திரையுலகினர் உதவ வேண்டும் என அவரின் குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்போது அவருக்கு இலவசமாக புற்றுநோய் சிகிச்சை அளிப்பதாக தி.மு.க எம்.எல்.ஏ மருத்துவர் சரவணன் உறுதியளித்துள்ளார்.
Tamil actor Thavasi struggles with cancer