தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வினோத் இயக்கத்தில் கார்த்தி-ரகுல் பிரித்தி சிங் நடிப்பில் உருவான படம் தீரன் அதிகாரம் ஒன்று.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.
கடந்த நவம்பர் 17ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றும் இன்றும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
எனவே பத்திரிகையாளர்களை சந்தித்து படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
இந்த சந்திப்பில் நடிகர் கார்த்தி பேசும்போது…
நான் எவ்வளவோ படங்களில் நடித்துவிட்டேன். ஆனாலும் என் முதல்படமான பருத்தி வீரன் படம் போன்று மற்ற படங்கள் இல்லையே என பலரும் சொல்கிறார்கள்.
முதல் படமே வெற்றிப் படமாக பலருக்கும் அமையாது. ஆனால் பல வருடங்கள் பலரும் அதையே சொன்னபோது வருத்தமாக இருந்தது.
தற்போது நீங்கள் நடித்த படங்களிலேயே சிறந்த படம் என்றால் அது தீரன் அதிகாரம் ஒன்று படம்தான் என சொல்கின்றனர். இது மகிழ்ச்சியை தந்துள்ளது.
என் அண்ணன் (சூர்யா) அடிக்கடி சொல்வார். பிக்சட் டெப்பாசிட் போல நம் உழைப்பை சேவிங் செய்துக் கொண்டே இருப்போம். அது பிற்காலத்தில் நிச்சயம் நமக்கு கை கொடுக்கும் என்பார். அதையே நான் செய்து வருகிறேன்.
தோல்விகளையும், அவமானங்ககளையும் தாண்டி வரும் போது தான் நாம் ஒரு செயலில் முழுமை அடைகிறோம்.
இதை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். ஒரு செயலில் தோல்வி அடைந்தால் குழந்தைகள் சோர்ந்து போகின்றனர்.
தோல்வி வாழ்வின் ஒரு அங்கம் அதை நீங்கள் சந்தித்தே தீரவேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும் அப்போது தான் அவர்கள் ஒரு செயலில் உறுதியாக இருப்பார்கள்.
வளர வேண்டும் என்றால் தோல்விகளை தாண்டி தான் வரவேண்டும் என்று பெற்றவர்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும். தேர்வு சமயங்களில் பெற்றோர்கள் குழந்தைகள் மீது திணிக்கும் அழுத்தத்தை குறைக்க வேண்டும்.
எங்க அப்பா என்னிடம் மார்க் பற்றி கேட்டதே இல்ல. நீ நல்லா படிச்சா நீ நல்லா இருப்ப அவ்ளோதான் என்று கூறுவார். பயத்துலேயே நானே படிப்பேன்.
எனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதனால் அந்த சிந்தனை அடிகடி எனக்குள் வருகிறது எத்தனையோ குழந்தைகள் வழிகாட்டுதல் இல்லாமல் இருக்கின்றது. சில பெற்றோர்கள் பொறுமை இழந்து குழந்தைகளை அடிகிறார்கள் குழந்தைகளை அடிக்க வேண்டாம்.
சம்பாதிப்பதை விட குழந்தைகளை வளர்ப்பது ரொம்ப முக்கியம். குழந்தைகளுக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.” என்று பேசினார்.