தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள இருமுகன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயன், நிவின்பாலி, இயக்குனர் ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது விக்ரம் பேசியதாவது…
இப்படம் உருவாவதில் நிறைய தாமதம் ஏற்பட்டது.
எனக்காக ஒரு பெரிய நடிகரின் படத்தை ஆனந்த் சங்கர் நிராகரித்து விட்டார். அவருடைய நம்பிக்கைக்கு நன்றி.
‘இருமுகன்’ படத்தில் நான் ஒரு காட்சியில்தான் நர்ஸ் ஆக நடித்துள்ளேன்.
அது ஒரு ஊறுகாய் மாதிரிதான். ஆனால், ‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன் பிரியாணியே செய்திருப்பார் என நம்புகிறேன்.
அவரை ‘ரெமோ’ என்று அழைப்பது எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.” என்றார்.