சிவகார்த்திகேயனுக்கு வில்லியாக ரஜினியின் புதுப்பட நாயகி

சிவகார்த்திகேயனுக்கு வில்லியாக ரஜினியின் புதுப்பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seema rajaபொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘சீமராஜா’.

’24 AM STUDIOS’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசை.

இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி மதுரையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடக்கவிருக்கிறது.

இந்த படத்தில் சிம்ரன் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார் என்று மட்டும் பேசப்பட்டது.

இப்போது ‘சீமராஜா’வில் சிம்ரன் வில்லியாக நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சிம்ரன் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டி வர்ணனையாளர் சமீர் கோச்சாரும் கோலிவுட் வருகிறார்

ஐபிஎல் போட்டி வர்ணனையாளர் சமீர் கோச்சாரும் கோலிவுட் வருகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

IPL Star Samir Kochhar makes his Kollywood debutஇந்தியா முழுமைக்கும் இருக்கிற கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களில் சமீர் கோச்சாரை அறிந்திராதவர்கள் யாருமே இருக்க முடியாது.

அதிலும் குறிப்பாக “ஐ.பி.எல்” போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்றதின் மூலம் இந்தியாவின் கடைக்கோடி வரை அறிந்த பிரபலமானார் சமீர் கோச்சார்.

தனது ஆரம்ப காலகட்டத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ ஹாத் சே ஹாத் மிலா” என்ற எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தொடங்கியவர், இன்று பாலிவுட் சினிமா வரை வளர்ந்திருக்கிறார்.

இவர் நடிப்பில், தற்போது “NETFLIX” வலைதளத்தில் ஒளிபரப்பாகி வரும் “சேக்ரட் கேம்ஸ்” என்ற தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

மேலும் “ஜனத்”, “ஹவுஸ்ஃபுல் 3 போன்ற பாலிவுட் வெற்றித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்

இந்நிலையில், “Century International Films” தயாரிப்பில் அமலா பால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் “அதோ அந்த பறவை போல” திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக இருக்கிறார் சமீர் கோச்சார்.

இப்படத்தின் கதையில் அவருடைய கதாபாத்திரத்தின் வலிமையை உணர்ந்து கொண்டு நடிக்க சம்மதம் தெரிவித்ததோடு, தனது நடிப்பின் மூலம் படக்குழுவினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் சமீர் கோச்சார்.

அதுமட்டுமல்லாமல் தற்போது, “தும்சே பியார் கித்னா” என்கிற பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.

IPL Star Samir Kochhar makes his Kollywood debut

தினம் 7கிமீ நடந்து செல்லும் மாணவிகளை காரில் ஏற்றிய வரலட்சுமி

தினம் 7கிமீ நடந்து செல்லும் மாணவிகளை காரில் ஏற்றிய வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Varalakshmi met 7 School students and dropped them in car‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘ சண்டக்கோழி-2’ ‘சர்கார்’, ‘வெல்வெட் நகரம்’ உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் வரலட்சுமி.

இந்நிலையில், இவர் படப்பிடிப்புக்கு காரில் செல்லும்போது சில மாணவிகளை சந்தித்துள்ளார்.

அந்த மாணவிகள் தினமும் 7 கிலோமீட்டர் நடந்து செல்லும் பள்ளி சிறுமிகளை சந்தித்துள்ளார் வரலட்சுமி.

உடனே அவர்களை தன்னுடைய காரில் ஏற்றிக் சென்று இறக்கி விட்டிருக்கிறார்.

அவர்களுடன் நம் வாழ்க்கையை ஒப்பிடும்போது நாம் எவ்வளவோ நன்றாக வாழ்கிறோம். இந்த சிறுமிகளை நினைத்து பெருமைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

varu sarathkumar‏Verified account @varusarath

So proud of these girls who walk everyday 7km to school..today was car pool day.decided to pick them up and drop them..so much excitement n happiness on their faces..makes my heart melt..god bless them..so amazing to see them feel so proud when they get of car..makes me wonder(1)

Makes me wonder how blessed we are to have so much in our lives..and we still end up complaining about life..god bless these innocent souls…muahhhhhh….

என்ஜிகே-விஸ்வாசம் விலகல்; தீபாவளிக்கு சர்கார் சரவெடி மட்டுமே!

என்ஜிகே-விஸ்வாசம் விலகல்; தீபாவளிக்கு சர்கார் சரவெடி மட்டுமே!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Viswasam and NGK movies postponed Only Sarkar will release on Diwali 2018தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்து விஜய், அஜித், சூர்யா விக்ரம் ஆகியோர் உள்ளனர்.

இதில் அஜித், விஜய், சூர்யா ஆகியோரின் படங்கள் இந்தாண்டு 2018 தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதாவது விஜய்யின் சர்கார், அஜித்தின் விஸ்வாசம், சூர்யாவின் என்ஜிகே ஆகிய படங்கள்தான் இவை.

இதனால் இந்த தீபாவளிக்கு கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையில் சில தினங்களுக்கு முன் அஜித்தின் விஸ்வாசம் இந்தாண்டில் வெளியாகாது எனவும் இது அடுத்த ஆண்டு 2019 பொங்கலுக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

தற்போது சூர்யாவின் என்ஜிகே படமும் இந்தாண்டு தீபாவளி ரேசில் இருந்து விலகுவதாக தெரிய வந்துள்ளது.

என்ஜிகே பட இயக்குனர் செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தில் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் படத்தை 2018 கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

எனவே விஜய்யின் சர்கார் மட்டும் இந்தாண்டு தீபாவளிக்கு வந்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கலாம்.

Viswasam and NGK movies postponed Only Sarkar will release on Diwali 2018

ரஜினிக்கு ஒரு நியாயம்? எனக்கு ஒரு நியாயமா? ; சென்சாரை வெளுக்கும் வாராகி

ரஜினிக்கு ஒரு நியாயம்? எனக்கு ஒரு நியாயமா? ; சென்சாரை வெளுக்கும் வாராகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director varagiஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிவா மனசுல புஷ்பா’.. நடிகர் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் இந்தப்படத்தின் டைட்டில் எந்த அளவுக்கு அதிர்வுகளை ஏற்படுத்தியதோ, அதே அளவுக்கு தயாரிப்பாளருக்கு தற்போது சிக்கலையும் இழுத்துவிட்டுள்ளது. ஆம்.. இந்தப்படத்தின் டைட்டிலையே தூக்குங்கள் என கூறி, தயாரிப்பாளரும் இயக்குனருமான வாராகியை அதிரவைத்துள்ளனர் சென்சார் அதிகாரிகள்..

இந்த பிரச்சனையை பொதுவெளிக்கு கொண்டுசெல்வதற்காகவும் சென்சார் அதிகாரிகளின் எதேச்சதிகார போக்கை வெட்டவெளிச்சம் போட்டு காட்டுவதற்காவும் பத்திரிகையாளர்களை சந்தித்தார் வாராகி.

“நான் எடுத்துள்ளது அரசியல் காதல் படம்.. சம கால நிகழ்வுகளை கற்பனை கலந்து படமாக்கி இருக்கிறேன்.. படம் ஓடக்கூடிய மொத்த நேரமே 1 மணி 45 நிமிடம் தான்.. ஆனால் இந்தப்படத்தை பார்த்துட்டு இரண்டரை மணி நேரம் விவாதிச்சிட்டு சில அரசியல் வசனங்கள், கிளாமர் காட்சிகள், சில பெயர்கள் உள்ளிட்ட சிலவற்றை நீக்க சொன்னார்கள். நான் அவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டதால் டில்லியில் உள்ள சேர்மனுக்கு அனுப்பி வைத்தார்கள்.

அங்கிருந்து வந்த உத்தரவில் படத்தின் டைட்டிலையும் மாற்ற சொல்லி வந்ததுடன் படத்தின் மைய கதாபாத்திரங்களான சிவா, புஷ்பா ஆகிய இரண்டு பெயர்களுக்கு பதிலாக வேறு பெயர்களை மாற்றச்சொல்லி இன்னொரு அதிர்ச்சியும் கொடுத்தார்கள்…

சிவா, புஷ்பாங்கிற பெயர்கள் எல்லாம் தடை செய்யப்பட்ட பெயர்களா என்ன..? இல்லை இந்த பெயர்களை மாற்றுங்கள் என யாரவது புகார் கொடுத்தார்களா..? சிவா மனசுல சக்தி வந்தப்போ மட்டும் தடை செய்யலையே.. மோடி மனசுல அமித்ஷான்னு நான் படம் எடுக்கலையே.. அட அப்படியே வக்கிரம் பிடித்த பெயராக இருந்தால் கூட, அவர்கள் சொல்வது நியாயம் என சொல்லலாம். இருட்டு அறையில் முரட்டு குத்துன்னு ஒரு படம் வந்துச்சு.. இப்போ அடுத்ததா பல்லுப்படாம பார்த்து செய்யுங்கன்னு ஒரு படம் வரப்போகுது….இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு சென்சார் அதிகாரிகளுக்கு தெரியாதா என்ன..? அவற்றையே அனுமதித்த சென்சார் அதிகாரிகள் என் படத்தின் டைட்டிலை மாற்றச்சொல்லும் காரணம் என..?

சென்சார் விதிகளின்படி டைட்டிலை மாற்றச்சொல்ல எந்த அதிகாரிக்கும் அதிகாரமில்லை… சென்சார் குழுவில் சினிமா தவிர்த்து பார்த்தால் பத்திரிகையாளர், சமூக சேவகர்கள் இருக்கலாம்… ஆடிட்டருக்கு சென்சாரில் என்ன வேலை..? இதனால் என்ன கூத்து நடந்துச்சு தெரியுமா..? சம்பந்தமே இல்லாத இடத்தில் வசனங்களை மியூட் பண்ண சொன்னாங்க.. ஆனா எதை வெட்டுவாங்கன்னு நாங்க எதிர்பார்த்தோமோ, அதை அவங்க கண்டுக்கவே இல்லை.. அப்புறம் இவங்க என்ன பெரிய அறிவாளி..?

புகை பிடிக்கிற காட்சியிலயும் மது அருந்துற காட்சியிலயும் அது கெடுதல்னு எச்சரிக்கை வாசகம் போட சொல்றாங்க.. அப்படின்னா என் படத்துல லஞ்சம் வாங்குற காட்சி இருக்கு. கொலை செய்யுற காட்சி இருக்கு. எல்லாத்துக்கும் எச்சரிக்கை வாசகம் போடமுடியுமா..?. இப்படி ஒவ்வோர் விஷயத்துக்கும் குத்தம் கண்டுபிடிச்சா அப்புறம் எப்படி படம் எடுக்குறது..?

ஒரு காட்சி படமாக்குறப்போ ஏதேச்சையா ஒரு பூனை நடந்து போகுது.. அதை நாங்க எந்த தொந்தரவும் பண்ணலை.. ஆனா அதுக்கு வனவிலங்கு வாரியத்துல சான்றிதழ் வாங்கிட்டு வான்னு சொல்றாங்க..

ரஜினி படத்தின் டைட்டில் எல்லாம் பெயர்களில் தான் வருகிறது.. பெரிய படங்களுக்கு ஏன் பண்ணவில்லை..? பெரிய நடிகர் சின்ன நடிகர் பாகுபாடு காட்டுகிறார்களோன்னு சந்தேகம் வருது. சென்சார் ஒருதலை பட்சமா செயல்படுவது நன்றாகவே தெரிகிறது.. அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உறவினர்களும் வேண்டியவர்களும் தான் சென்சாரில் இருக்கிறார்கள்.

என்னோட படத்தோட டீசர் ‘சிவா மனசுல புஷ்பா’ எனும் பெயரில்தான் சென்சாரில் இருந்து சர்டிபிகேட் வாங்கினேன்.. அப்போது தவறாக தெரியாத ‘சிவா மனசுல புஷ்பா’ பெயர் இப்பொழுது தவறாக தெரிவதால்தான் எனக்கு அவர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நான் கடந்த பல வருடங்களாக பல விஷயங்களில் சமூக நோக்கோடு வழக்கு தொடர்ந்து வருவதால் தற்போது இதன் பின்னணியில் அரசியல் தலையீடு இருக்கலாமோ என்கிற சந்தேகமும் உண்டாகிறது…

நான் ஒரு சின்ன தயாரிப்பாளர்.. ஒவ்வொரு முறையும் பணம் கட்டி மேல்முறையீடு செய்யும் அளவுக்கு வசதி இல்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன்… இப்படி டைட்டில் பிரச்னை ஓடிக்கொண்டு இருப்பது அவர்களுக்கும் தெரியும்.. எல்லாவற்றையும் சொன்னால்தான் செய்வார்களா.?

சான்றிதழ் கொடுப்பதுதான் சென்சாரில் வேலை.. அதை நிறுத்தி வைக்க அவர்களுக்கு உரிமையில்லை.. காழ்ப்புணர்ச்சியில தான் இப்படி செய்கிறார்கள். அதனால் தான் ரிவைசிங் கமிட்டிக்கு விண்ணப்பித்துள்ளேன்.. இதில் எனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தின் கதவை தட்டுவேன்… என்னைப்போல இனி வரும் தயாரிப்பாளர்களுக்கு சென்சார் மூலம் இதுபோன்ற சோதனைகள் நிகழக்கூடாது என்பதால் தான் நானே நேரடியாக களமிறங்கி விட்டேன்.. ஊடகங்கள் மூலமாக இந்த பிரச்னை உரியவர்கள் கவனத்துக்கு சென்று நல்ல தேர்வு கிடைக்கும் என நம்புகிறேன்” என கூறினார் வாராகி.

சொன்ன தேதிக்கு முன்பே *கழுகு-2* சூட்டிங்கை முடித்த சத்யசிவா

சொன்ன தேதிக்கு முன்பே *கழுகு-2* சூட்டிங்கை முடித்த சத்யசிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kazhugu 2 movie stillsகிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் கிருஷ்ணா நடிக்கும் கழுகு – 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது.

30 நாட்களில் வசன காட்சிகளுக்கான படப்பிடிப்பை முடிப்பதாக உறுதி கூறிய இயக்குநர் சத்யசிவா 28 நாட்களில் மொத்த வசன காட்சிகளுக்கான படப்பிடிப்பையும் இன்று முடித்து கொடுத்துள்ளார்.

பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் கடைசி வாரத்தில் துவங்க இருக்கிறது.

படத்தை அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிட தயாரிப்பாளர் சிங்காரவேலன் முடிவெடுத்துள்ளார்.

முதல் நாள் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து நூறு நாட்களுக்குள் மொத்த படப்பிடிப்பு பணிகளையும் முடித்து படத்தை வெளியிட இருப்பது தமிழ் சினிமாவின் சமீபத்திய சாதனையாக பார்க்கப்படுகிறது.

4 கோடியில் தயாராகியுள்ள இந்த படத்தின் வியாபாரம் 7 கோடியை தாண்டும் என சினிமா விமர்சர்கள் கணித்துள்ளனர்.

More Articles
Follows