தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அண்மையில் வெளியான சீமராஜா, இமைக்கா நொடிகள், ஒரு குப்பை கதை உள்ளிட்ட புதிய படங்களை வெளியான அன்றே திருட்டு தனமாக வீடியோ எடுப்பதற்கு உடந்தையாக இருந்த கிருஷ்ணகிரி நயன்தாரா திரையரங்கம் உள்ளிட்ட 10 திரையரங்குகளில் புதிய தமிழ் படங்களை திரையிட தடைவிதித்து என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது
பெரும்பாலான ரசிகர்கள் இணையத்தில் பார்த்ததால் இந்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
சீமராஜா படம் விருத்தாசலம் ஜெய் கிருஷ்ண திரையரங்கிலும், மங்களூர் சினிபொலீஸ் திரையரங்கிலும் திருட்டு வீடியோ எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கபட்டது.
இமைக்கா நொடிகள் படம் பெங்களூரு சத்யம் சினிமாவில் திருட்டு வீடியோ எடுப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது போலவே கோலி சோடா 2 கிருஷ்ணகிரி நயன்தாரா திரையரங்கிலும் , ஒரு குப்பை கதை என்கிற திரைப்படம் மயிலாடுதுறை கோமதி, கரூர் எல்லோரா ஆகிய திரையரங்குகளிலும், தொட்ரா, ராஜா ரங்கூஸ்கி ஆகிய இரு படங்களும் கரூர் கவிதாலயாவிலும் திருட்டு வீடியோ எடுக்கப்பட்டுள்ளன.
மனுஷனா நீ என்கிற படம் கிருஷ்ணகிரி முருகன் திரையரங்கிலும், மிஸ்டர் சந்திரமவுளி என்ற படம் ஆரணி சேத்பட் பத்மாவதியிலும் திருட்டு வீடியோ எடுக்கப்பட்டதை கியூப் நிறுவனத்தின் ரகசிய பதிவென் மூலம் ஆதாரத்துடன் கண்டுபிடித்து புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து கிருஷ்ணகிரி நயன்தாரா, மயிலாடுதுறை கோமதி உள்ளிட்ட 8 திரையரங்குகளில் இருந்து டிஜிட்டல் புரொஜெக்டர்களை திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆனால் கியூப் நிறுவனம் அந்த திரையரங்கிற்கு புதிய புரொஜெக்டர் வழங்கியுள்ளது.
இதனால் தொடர்ந்து திருட்டு வீடியோ தயாரிப்பில் ஈடுபட்ட அந்த திரையரங்குகளில் தொடர்ந்து புதிய படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.
கியூப்பின் இந்த நடவடிக்கை சம்பந்தப்பட்ட பட தயாரிப்பாளர்களை கடும் மன உளைச்சளில் தள்ளியது.
இதையடுத்து திருட்டு வீடியோ தயாரிப்பில் ஈடுபடும் திரையரங்குகளுக்கு புதிய படங்களை கொடுக்க கூடாது என ஒரு குப்பை கதை படத்தின் தயாரிப்பாளர் கோரிக்கை விடுத்தார்.
நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த கோரிக்கைக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது செவி சாய்த்திருக்கிறது.
நடிகர் விஷாலின் சண்ட கோழி 2 படம் வெளிவர இருக்கும் நிலையில் அந்த 10 திரையரங்கங்களுக்கும் புதிய படங்கள் ஏதும் திரையிட கொடுக்க கூடாது என்று கியூப்புக்கு தடை போட்டுள்ளனர்.
இதனால் அந்த திரையரங்குகளில் புதிய படங்கள் திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.