திருட்டு விசிடி எடுக்கும் தியேட்டர்களுக்கு சண்டக்கோழி2 கிடையாது; விஷால் அதிரடி

திருட்டு விசிடி எடுக்கும் தியேட்டர்களுக்கு சண்டக்கோழி2 கிடையாது; விஷால் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalஅண்மையில் வெளியான சீமராஜா, இமைக்கா நொடிகள், ஒரு குப்பை கதை உள்ளிட்ட புதிய படங்களை வெளியான அன்றே திருட்டு தனமாக வீடியோ எடுப்பதற்கு உடந்தையாக இருந்த கிருஷ்ணகிரி நயன்தாரா திரையரங்கம் உள்ளிட்ட 10 திரையரங்குகளில் புதிய தமிழ் படங்களை திரையிட தடைவிதித்து என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது

பெரும்பாலான ரசிகர்கள் இணையத்தில் பார்த்ததால் இந்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

சீமராஜா படம் விருத்தாசலம் ஜெய் கிருஷ்ண திரையரங்கிலும், மங்களூர் சினிபொலீஸ் திரையரங்கிலும் திருட்டு வீடியோ எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கபட்டது.

இமைக்கா நொடிகள் படம் பெங்களூரு சத்யம் சினிமாவில் திருட்டு வீடியோ எடுப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது போலவே கோலி சோடா 2 கிருஷ்ணகிரி நயன்தாரா திரையரங்கிலும் , ஒரு குப்பை கதை என்கிற திரைப்படம் மயிலாடுதுறை கோமதி, கரூர் எல்லோரா ஆகிய திரையரங்குகளிலும், தொட்ரா, ராஜா ரங்கூஸ்கி ஆகிய இரு படங்களும் கரூர் கவிதாலயாவிலும் திருட்டு வீடியோ எடுக்கப்பட்டுள்ளன.

மனுஷனா நீ என்கிற படம் கிருஷ்ணகிரி முருகன் திரையரங்கிலும், மிஸ்டர் சந்திரமவுளி என்ற படம் ஆரணி சேத்பட் பத்மாவதியிலும் திருட்டு வீடியோ எடுக்கப்பட்டதை கியூப் நிறுவனத்தின் ரகசிய பதிவென் மூலம் ஆதாரத்துடன் கண்டுபிடித்து புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து கிருஷ்ணகிரி நயன்தாரா, மயிலாடுதுறை கோமதி உள்ளிட்ட 8 திரையரங்குகளில் இருந்து டிஜிட்டல் புரொஜெக்டர்களை திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆனால் கியூப் நிறுவனம் அந்த திரையரங்கிற்கு புதிய புரொஜெக்டர் வழங்கியுள்ளது.

இதனால் தொடர்ந்து திருட்டு வீடியோ தயாரிப்பில் ஈடுபட்ட அந்த திரையரங்குகளில் தொடர்ந்து புதிய படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

கியூப்பின் இந்த நடவடிக்கை சம்பந்தப்பட்ட பட தயாரிப்பாளர்களை கடும் மன உளைச்சளில் தள்ளியது.

இதையடுத்து திருட்டு வீடியோ தயாரிப்பில் ஈடுபடும் திரையரங்குகளுக்கு புதிய படங்களை கொடுக்க கூடாது என ஒரு குப்பை கதை படத்தின் தயாரிப்பாளர் கோரிக்கை விடுத்தார்.

நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த கோரிக்கைக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது செவி சாய்த்திருக்கிறது.

நடிகர் விஷாலின் சண்ட கோழி 2 படம் வெளிவர இருக்கும் நிலையில் அந்த 10 திரையரங்கங்களுக்கும் புதிய படங்கள் ஏதும் திரையிட கொடுக்க கூடாது என்று கியூப்புக்கு தடை போட்டுள்ளனர்.

இதனால் அந்த திரையரங்குகளில் புதிய படங்கள் திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டியில் தேர்வான 66 நபர்களுடன் ஒரு கலந்துரையாடல்

காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டியில் தேர்வான 66 நபர்களுடன் ஒரு கலந்துரையாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaatrin mozhiகாற்றின் மொழி திரைப்படத்தின் படக்குழு பாடல் எழுதும் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது.

இதில் தமிழகம் முழுவதிலுமிருந்து 700 பேர் பங்கேற்று இருந்தார்கள். அவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 66 பேர் காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டி சார்ந்த விழாவில் பங்கேற்றனர்.

இதில் பாடலாசிரியர் மதன் கார்க்கி, இயக்குனர் ராதாமோகன் உள்ளிட்ட ஜாம்பவான்கள் பங்கேற்று பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் படத்தின் பாடல் சிடி வழங்கப்பட்டது.

மேலும் சிறப்பாக பாடல் எழுதிய இருவருக்கு பரிசு வழங்கப்பட்டது. பாடலாசிரியர் மதன் கார்க்கி எல்லோரிடமும் தான் காற்றின் மொழி படத்துக்கு பாடல் எழுதிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

பாப்டா நிறுவனம் சார்பாக G. தனஞ்ஜெயன் தயாரித்து, ஜோதிகா நடித்து, ராதா மோகன் இயக்கியுள்ள காற்றின் மொழி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

சண்முக ராஜா மீது பாலியல் புகார்; திடீர் பல்டி அடித்த நாட்டாமை டீச்சர்

சண்முக ராஜா மீது பாலியல் புகார்; திடீர் பல்டி அடித்த நாட்டாமை டீச்சர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shanmuga rajan and raniஒரு சில படங்களில் நாயகியாக நடித்தாலும் நாட்டாமை படத்தில் இடம் பெற்ற டீச்சர் கேரக்டர் மூலம் பிரபலமானவர் ராணி.

பின்னர் விக்ரமுடன் ஓ போடு என ஆட்டமும் போட்டு இருந்தார்.

இவர் தற்போது நடிகை குஷ்புவின் கணவர் சுந்தர் சி தயாரிப்பில் நந்தினி என்ற டிவி சீரியலில் நடித்து வருகிறார்.

இதில் தனக்கு கணவனாக நடித்த சண்முகராஜா என்ற வில்லன் நடிகர் நடிப்புக்காக தொடாமல் நிஜமாகவே தன்னை தொட்டு பாலியல் தொல்லை கொடுப்பதாக செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனால் சண்முகராஜா பாலியல் வழக்கில் கைதாகும் நிலை உருவானது.

இதனையடுத்து சில மணி நேரங்களில் சண்முகராஜா காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னத்திரை நடிகர் சங்கத்தினர் பாலியல் புகார் கொடுத்த நடிகை ராணியிடம் அவசர அவசரமாக சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

சண்முகராஜா கைதானால் நந்தினி சீரியல் நின்று விடும் இந்த தொடரை நம்பி உள்ள 350 பேரின் குடும்பங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் புகாரை வாபஸ் வாங்கும் படியும் கூறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனால் பாலியல் புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை ராணி பல்டி அடித்தார்

இதன் பின்னர் நடிகை ராணியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வெளியே வந்த, சண்முகராஜாவோ, படப்பிடிப்பில் கைகலப்பு மட்டுமே நடந்தது பாலியல் தொல்லை அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

தேவர் மகன் 2 பட தலைப்பை மாற்றும் கமல்ஹாசன்

தேவர் மகன் 2 பட தலைப்பை மாற்றும் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

devar magan 2மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.

ஆங்காங்கே பொதுக் கூட்டங்களையும் நடத்தி பேசி வருகிறார்.

இதனையடுத்து சென்னை திரும்பும்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.

அப்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால், வரவேற்பதாக கூறினார்.

மேலும் தேவர் மகன்-2 படத்திற்கு இன்னும் தலைப்பு தேர்வு செய்யப்படவில்லை எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

வடசென்னை-யை வரவேற்க தனுஷுக்கு 120 அடி உயர கட்-அவுட்

வடசென்னை-யை வரவேற்க தனுஷுக்கு 120 அடி உயர கட்-அவுட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vada chennaiதனுஷ் தயாரித்து நடித்துள்ள வடசென்னை படம் நாளை மறுநாள் அக். 17-ல் ரிலீஸாகிறது.

வெற்றிமாறன் இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் வெளியிடுகிறது.

3 பாகமாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகத்தை மட்டும் தற்போது வெளியிடுகின்றனர்.

தனுஷ் & வெற்றிமாறன் கூட்டணி என்றாலே அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.

இதனை வரவேற்கும் விதமாக நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர்கள் அவருக்கு 120 அடி உயர கட் அவுட் வைத்திருக்கிறார்களாம்.

தனுஷ் படத்தை முடித்துவிட்டு *முண்டாசுப்பட்டி2* படத்தை இயக்கும் ராட்சசன் டைரக்டர்

தனுஷ் படத்தை முடித்துவிட்டு *முண்டாசுப்பட்டி2* படத்தை இயக்கும் ராட்சசன் டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mundasupattiவிஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கிய படம் முண்டாசுப்பட்டி.

இதனையடுத்து பல வருடங்களுக்கு பிறகு ராட்சசன் படத்திற்காக இந்த கூட்டணி இணைந்தது.

இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில் ‘ராட்சசன்’ பட வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க இருக்கிறாராம் ராம்குமார்.

அதனை முடித்து விட்டு ‘முண்டாசுப்பட்டி’ இரண்டாம் பாகத்தின் வேலைகளை தொடங்கவிருக்கிறார் ராம்குமார்.

More Articles
Follows