தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சண்டக்கோழி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இது விஷாலின் 25வது படம் என்பதால் பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
இதற்கு முன்னதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அதில் நாயகன் விஷால் பேசும்போது…
“சினிமா விமர்சனங்கள் ஒரு திரைப்படத்துக்கு முக்கியம். ஆனால், ஆன்லைன் மீடியாவில் படம் குறித்து விமர்சனம் செய்பவர்கள், அந்தப் படம் வெளியாகி மூன்று நாள்களுக்குப் பிறகு, அவரவர் விமர்சனங்களைப் பதிவு செய்தால், நன்றாக இருக்கும்.
ஒரு சில ஆன்லைன் மீடியாக்களுக்கு இதை என்னுடைய கோரிக்கையாகவே முன்வைக்கிறேன். இதை ஏற்றுக்கொண்டால், நன்றாகயிருக்கும்.
முதல் மூன்று நாட்கள் படத்தில் நடித்தவர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் மிகவும் முக்கியம்.
மூன்று நாள் கழித்து விமர்சனம் எழுதினால் சிறிய,பெரிய படத்திற்கு ஒரு நல்ல இடம் கிடைக்கும்” என்றார் விஷால்.