தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சண்டக்கோழி 2 படத்தை அடுத்து தற்போது ‘அயோக்யா’ படத்தில் நடித்து வருகிறார் விஷால்.
வெங்கட் மோகன் இயக்கும் இப்படத்தில் நாயகியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.
மேலும் பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலரும் நடிக்க சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தை முடித்துவிட்டு ஒரு படத்தை இயக்கவுள்ளார் விஷால்.
நிஜ வாழ்க்கையில் விலங்குகளை அதிகம் நேசிப்பவர் விஷால். எனவே நாய்களை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.
இப்படம் பற்றிய அறிவிப்பை 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிட உள்ளதாக தெரிகிறது.