என் காதலை வரலட்சுமியிடம் சொல்லவில்லை..; விஷால் முன்னிலையில் சதீஷ் பேச்சு

என் காதலை வரலட்சுமியிடம் சொல்லவில்லை..; விஷால் முன்னிலையில் சதீஷ் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal and varalaxmiசண்டக்கோழி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது.

இவ்விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

அப்போது விஷால், கீர்த்தி, வரலட்சுமி, சதீஷ், ஹிப் ஹாப் ஆதி ஆகியோர் மேடையேறினர்.

அப்போது சதீஷை கலாய்த்து விஷாலும் வரலட்சுமியும் கிண்டலடித்தனர்.

சினிமா துறையில் உள்ள பெண்கள் எல்லாரிடமும் சதீஷ் தன் காதலை சொல்லிவிட்டார் என்றார் வரலட்சுமி.

ஆனால் என் காதலை வரலட்சுமியிடம் சொல்லவில்லை. அதற்கு காரணம் விஷால் என்றார் சதீஷ்.

இதனால் அரங்கமே சிரிப்பலையில் கலகலப்பானது.

ஏற்கெனவே விஷால் மற்றும் வரலட்சுமி இருவரும் நெருக்கமான நட்பு கொண்டிருக்கிறார்கள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

தன் முதல் பட சம்பளத்தை கேரளாவுக்கு நிதியாக அளித்த துருவ்விக்ரம்

தன் முதல் பட சம்பளத்தை கேரளாவுக்கு நிதியாக அளித்த துருவ்விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhruv vikramநடிகர் விக்ரமின் மகன் துருவ் அவர்கள் வர்மா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

பிரபல இயக்குனர் பாலா இயக்கியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய முதல் படமான வர்மா திரைப்படத்திற்காக பெற்ற ஊதியத்தை கேரள வெள்ள நிவாரண நிதியாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களிடம் நேரில் சென்று அளித்துள்ளர் துருவ்.

அப்போது அவருடன் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா, இணை தயாரிப்பாளர் AV அனூப், அகில இந்திய விக்ரம் ரசிகர் மன்ற தலைவர் சூர்ய நாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

நல்ல சினிமா *பரியேறும் பெருமாள்*.; யு சர்டிபிகேட் கொடுத்து பாராட்டிய சென்சார்.!

நல்ல சினிமா *பரியேறும் பெருமாள்*.; யு சர்டிபிகேட் கொடுத்து பாராட்டிய சென்சார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Censor Board praises Pariyerum Perumal and give U Certificateஇயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் பரியேறும் பெருமாள் பிஏபிஎல்.

கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு , லிங்கேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்,

ஸ்ரீதர் ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

சமீபத்தில் பரியேறும் பெருமாள் பிஏபிஎல் திரைப்படத்தினை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் அதிகாரிகள் எந்த இடத்திலும் கட் சொல்லாமல் படத்திற்கு U சான்றிதழை வழங்கியிருக்கிறார்கள்.

படத்தின் கதை மற்றும் கதைக்களத்தை வெகுவாக பாராட்டிய அதிகாரிகள் இயக்குனர் மாரிசெல்வராஜிடமும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் திடமும், இரண்டு இடங்களில் மட்டும் மியூட் செய்ய சொல்லிய அதிகாரிகள், இந்த படத்தில் எந்த இடத்திலும் கட் சொல்ல இடமில்லை.

மட்டுமினறி இப்படம் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படம் என்று சொன்னதோடு, இது போன்ற கதையுடன் கூடிய கமர்சியல் திரைப்படங்களில் சின்ன சின்ன இடங்களில் கட் சொன்னால் அதன் உண்மைத்தன்மை குலைந்துவிடும்,

நல்ல சினிமா எடுத்திருக்கிறீர்கள் வாழ்த்துகள் என்று பாராட்டியிருக்கிறார்கள்.

Censor Board praises Pariyerum Perumal and give U Certificate

நடனமாடிக் கொண்டே சாப்பிட சென்னையில் ஒரு *டான்ஸ் கஃபே*

நடனமாடிக் கொண்டே சாப்பிட சென்னையில் ஒரு *டான்ஸ் கஃபே*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dance cafeசென்னையில் புதிதாக ‘டான்ஸ் கஃபே ’ என்ற நடனத்துடன் கூடிய பொழுது போக்கு உணவகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. நடன இயக்குநர் ஷெரீஃப்பின் எண்ணத்தில் உதயமான இந்த ‘டான்ஸ் கஃபே’ என்ற வித்தியாசமான உணவகத்தை நடன இயக்குநர் ராஜு சுந்தரம் திறந்து வைத்தார். வளசரவாக்கத்தில் நடைபெற்ற இந்த உணவகத்தின் திறப்பு விழாவில் திரைப்பட நடன இயக்குநர்களான ராஜு சுந்தரம், சாண்டி, நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி மற்றும் ஏராளமான நாட்டிய கலைஞர்களும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இந்திய அளவில் பிரபலமான நடன இயக்குநர் ஷெரீஃப் அவர்களின் புதுமையான எண்ணத்தில் உதயமானது இந்த டான்ஸ் கஃபே. இந்த கஃபேக்கு வருகைத்தரும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் விரும்பும் உணவு வகைகளை பாரம்பரிய நாட்டியத்துடனும், மேற்கத்திய நடனத்துடனும் இணைந்து வழங்கி அவர்களை முழுமையாக மகிழ்ச்சியடைய வைப்பது தான் இதன் நோக்கம். விருந்தினர்களாக வருபவர்களுக்கு உணவு பரிமாறும் போதே அவர்களுக்கு பிடித்த நாட்டியத்தைப் பற்றி விளக்கமளிப்பதும், அவர்களை நடனமாட தூண்டுவதும் தனிச்சிறப்பு.

நடனமாடிக்கொண்டே சாப்பிடலாம் என்ற எண்ணத்தில் தொடங்கப்படவிருக்கும் இது போன்ற டான்ஸ் கஃபே உணவகம், உங்களின் அருகாமையில் இருப்பது அரிது. நடனக்கலைஞர்கள் தினமும் பயிற்சிக்கு பிறகு தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டே, தங்களின் சக்தியை அதிகரிக்க நினைப்பார்கள். அவர்கள் அது போன்ற ஒரிடத்தை தேடுவது இயல்பு. அத்தகைய நடன கலைஞர்களின் எண்ணத்தை துல்லியமாக புரிந்து கொண்ட நடன இயக்குநர் ஷெரிஃப், அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த டான்ஸ் கஃபேவை வடிவமைத்திருக்கிறார்.

நடன கலைஞர்களுக்காக மட்டுமல்ல. இது அனைவருக்காகவும் திறந்திருக்கும். நாட்டியக்கலைஞர்கள் இங்கு ஒன்று கூடி உலகளவிலான நாட்டியங்களைப் பற்றியும், மேற்கத்திய நடனங்களைப் பற்றியும் விரிவாக விவாதிக்கலாம். தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம். நாட்டியம் தொடர்பான கருத்தரங்குகளையும் இங்கு நடத்தலாம். இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் அனைத்து உணவு வகைகளுக்கும், நாட்டியத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கும் வகையில் அதன் பின்னணி மற்றும் வரலாற்று குறிப்புகளும் உண்டு.

இந்த டான்ஸ் கஃபேவில் நடனமும் உணவும் இரண்டற கலந்திருக்கும். இதுவே தனிச்சிறப்பாகவும் திகழும்.

டான்ஸ் கஃபே அமைவிடம்

ஷெரீஃப் மற்றும் வெங்கட் ராஜ் இருவரும் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த பிரத்கேய டான்ஸ் கஃபே, சென்னையில் வளசரவாக்கத்தில் மெகா மார்ட் எதிரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. வடபழனி, போருர், ராமாபுரம் மற்றும் கோயம்பேடு ஆகிய பகுதிகளில் உள்ள நடனகலைஞர்கள் மட்டுமல்ல அனைத்து தரப்பினரும் ஒன்று கூடும் இடமாக இது இருக்கும். ஒரு டான்ஸ் ஃப்ளோரும், ஒரு காபி ஷாப்பும் ஒரேயிடத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்கள் இனி இங்கு கூடலாம். அவர்கள் தங்களுக்கு பிடித்த காபியை ஆர்டர் செய்துவிட்டு, நடனமாடிக்கொண்டோ அல்லது நாட்டியத்தைப் பற்றி பேசிக்கொண்டோ காபியை சுவைத்து பருகலாம்.

என்னவெல்லாம் இங்கு கிடைக்கும்?

டான்ஸ் கஃபேவில் நீங்கள் ஒரு உணவு வகையை ஆர்டர் செய்யும் போது வித்தியாசமான அனுபவத்தை உணர்வீர்கள். ஏனெனில் நாங்கள் காபியைத் தருவதுடன் அந்த காபியின் பின்னணியில் மறைந்திருக்கும் நடன கலையின் ஆதி வடிவத்தைப் பற்றிய குறிப்புகளையும் இணைத்து தருகிறோம். இது உங்களை ஆச்சரியப்படுத்தும். அத்துடன் எங்களுடைய மெனு கார்டில் ஒரு காபியைப் பற்றி குறிப்பிடும் போதே அதனுடைய இணைந்து அறியப்படும் நாட்டிய வகையையும் குறிப்பிட்டிருப்போம். உதாரணத்திற்கு கப்புசீனோ (Cappuccino) என்ற பெயருடன் கப்புசீனோ பாலேட் என்ற நாட்டிய வகைகையும், அந்த நடனத்தின் ஊடாக அந்த காபியையும் தயாரித்து வழங்கவிருப்பதையும் தெரிவிக்கிறோம். அத்துடன் கப்புசீனோ மற்றும் அந்த நாட்டியம் இத்தாலியை பூர்வீகமாகக் கொண்டது என்ற வரலாற்று குறிப்பையும் அளிக்கிறோம்.

இந்த டான்ஸ் கஃபே உலக நாட்டிய கவுன்சில் என்ற அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது என்பதும், அனைத்து வகையிலான நடனத்தையும் இங்கு ஆடலாம் என்பதற்கான சான்றிதழ் பெறப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் வைரலாக வலம் வரும் தனுஷின் *வட சென்னை* இசை!

இணையத்தில் வைரலாக வலம் வரும் தனுஷின் *வட சென்னை* இசை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vada chennaiதேசிய விருது வென்ற நாயகன் தனுஷ் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கூட்டனில் உருவாகியுள்ள படம்
” வட சென்னை ” . 23 .9 .18 ஞாயிறு அன்று இப்படத்தின் பாடல்கள் வெளியானது.மேலும் பாடல்களுக்கு சிறந்த விமர்சனங்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது. படத்தின் பாடல்கள் யூ -டூப் ட்ரெண்டிங்கிலும் ,மற்றும் Saavn , Jio மியூசிக் ஆகியவற்றில் அனைவராலும் அதிகமுறையில் கேட்கப்பட்டு வருகின்றது.

இத்திரைப்படத்திற்கு காலா ,கபாலி படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார்.இது இவருக்கு 25 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது !

பொல்லாதவன் ,ஆடுகளம் ஆகிய மாபெரும் வெற்றி படங்களை தந்த தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணி இந்த படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.மேலும் தனுஷ் தயாரிப்பில்,வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விசாரணை தேசிய விருதை பெற்றது.அதுமட்டுமில்லாமல் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.காக்காமுட்டை திரைப்படமும் தேசிய விருதினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வட சென்னை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.சமுத்திரக்கனி,ஆண்ட்ரியா ,ஐஸ்வர்யா ராஜேஷ்,அமீர்,டேனியல் பாலாஜி ,கிஷோர் குமார்,பவன் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

தற்போது மக்களிடையே இப்படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.பாடல்கள் மிகப்பெரிய அளவில் அனைவராலும் விரும்பப்பட்ட வருகின்றது.தனுஷ் ,சித்ஸ்ரீராம் மற்றும் சென்னை கானா பாடல்கள் பாடும் கலைஞர்களால் பாடல்கள் பாடப்பட்டுள்ளது.

மீண்டும் எம்ஜிஆரை உயிரோடு கொண்டு வரும் பி.வாசு

மீண்டும் எம்ஜிஆரை உயிரோடு கொண்டு வரும் பி.வாசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MGRஇந்திய திரையுலகின் மக்கள் திலகம் எம். ஜி. ஆர், விரைவில் உலகெங்கும் வெள்ளித்திரையில் புதிய பரிணாமத்தில் “என் ஃபேஸ்” எனும் முற்றிலும் புதிய, அற்புத தொழிட்நுட்பத்தின் மூலம் வலம் வர இருக்கிறார்.

மலேசியாவின் சர்வதேச ஊடக தொழிற்நுட்ப நிறுவனம் ஆரஞ்ச் கவுண்டி, இத்தொழிற்நுட்பத்தை கொண்டு கடந்த கால கதாபாத்திரங்களை நிழற்பட யதார்த்தத்தின் மூலம் உயிரோட்டமாக திரையில் உருவாக்கும் ஒரு மென்பொருளை வடிவமைத்துள்ளது.

மலேசியாவின் ஆரஞ்ச் கவுண்டி நிறுவனமும், முன்னணி சர்வதேச ஹாலிவூட் VFX தொழிட்நுட்ப வல்லுனர்களும் இணைந்து, இந்திய திரையுலகின் மக்கள் திலகம் எம். ஜி. ஆர் என்றழைக்கபடும் ராமச்சந்திரன் அவர்களை, ஒரு சர்வதேச திரைப்படத்தின் மூலமாக மக்கள் முன் மீண்டும் உயிரோட்டமாக காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.

இச்சர்வதேச திரைப்படத்தை புகழ்பெற்ற இயக்குனர் பி. Pவாசு இயக்குகிறார். கதை களமும், கதாபாத்திரங்களும் முறையே மலேசியாவிலும், இந்தியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய, பிராந்திய மற்றும் சர்வதேச நடிக-நடிகையர்கள் மற்றும் கலைஞர்கள் இதில் பங்குபெற இருக்கிறார்கள்.

ஆரஞ்ச் கவுண்டி மலேசியா, “என் ஃபேஸ்” என்ற தனது புதிய, மிகவும் மேம்பட்ட தொழிற்நுட்பத்தை, உலக புகழ்பெற்ற காட்சி விளைவு வடிவமைப்பு வல்லுனர்களின் பங்களிப்போடு நடைமுறைபடுத்துவதில், ஒரு சர்வதேச முன்னணி தொழிற்நுட்ப வல்லுனர்களின் குழுமமாக திகழ்கிறது.

சர்வதேச தயாரிப்பான இத்திரைப்படம் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து, மற்றும் அமெரிக்காவிலும் படமாக்கப்பட இருக்கிறது.

இத்திரைப்படம் முழுவதுமே முப்பரிமாண ஸ்டீரியோஸ்கோபிக் முறையில் தயாரிக்கப்படுவதாலும், ஒவ்வொரு காட்சியுமே முப்பரிமாண முறையில் காட்சிப்படுத்தப்பட இருப்பதாலும், இது மக்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும்.

இருப்பினும், இத்தகைய மேம்பட்ட கலைப்படைப்புகளை உருவாக்குவது என்பது பல்வேறு சவால்களுக்கு பிறகே கைகூடியது எனலாம். இரண்டு வருடங்களுக்கும் மேலாக முன் உற்பத்தி வேலைகளில் தன் முனைப்புடன் இந்நிறுவனம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, இப்புகழ்பெற்ற நடிகரின் ஒவ்வொரு அசைவையும், முக பாவத்தையும், நடத்தையையும் மிகவும் கவனமாகவும் நுணுக்கமாகவும் செயற்கை அறிவாற்றல் தொழிற்நுட்பங்கள் மூலம் பதிவு செய்துள்ளது.

ஆரஞ்ச் கவுண்டி தலைமை செயல் அதிகாரி டத்தோ மார்கழி பழனி கூறும் போது, “இயக்குனர் வாசுவின் தந்தை எம்.ஜி.ஆரின் ஒப்பனை கலைஞராக பணியாற்றிய காரணத்தால், எம்.ஜி.ஆரின் மிக நுண்மையான அசைவுகள், நடத்தைகள், முகபாவங்கள் அனைத்தையும் மிக அருகிலேயே இருந்து, கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பும், அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பும், இயக்குனர் வாசுவிற்கு இயல்பாகவே அமைந்தது.

அதனாலேயே இத்திரைப்படத்தை இயக்குவதற்கு சரியான தேர்வாக அவரை கருதுகிறோம்.

மேலும் அவரது படைப்புகள் வாசு ஒரு திறமையான இயக்குனர் என்பது பறைசாற்றும் விதத்திலேயே அமைந்துள்ளதால், இத்திரைபடத்திற்க்கும் தேவையான தனிச்சிறப்புடைய பங்களிப்பை அவர் தருவார்”.

ஆரஞ்ச் கவுண்டியின் தலைமை தொழிற்நுட்ப அதிகாரி விமலநாதன்,

“இந்தியாவில் எம்.ஜி.ஆர் இன்றும் கடவுளின் அவதாரமாகவே தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறார். மலேசியாவிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் அவருக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன.

அன்னாரது சமாதிக்கு வருகை தரும் எண்ணிலடங்கா மக்களின் மனங்களில் இன்றளவும் அவர் வாழ்கிறார் என்பதே அவரது அபிமானத்திற்கு ஒரு மிகப் பெரிய சாட்சி.

அவர் மறைந்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு, அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் மீண்டும் வெள்ளித்திரையில் அவர் உயிர்பெறும் காட்சிகள், மக்கள் மனதில் ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும். வணிக நோக்கிலும் ஒரு புதிய மற்றும் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவே அமைகிறது.

எம். ஜி. ஆர் குறித்து உருவாக்கியுள்ள டிஜிட்டல் உருவகங்களைக் கொண்டே, வருங்காலத்தில் திரைப்படங்களோ அல்லது விளம்பர படங்களோ உருவாக்க முடியும் என்பதால், இந்த முயற்சி முன்னுரிமை பெறுகிறது”.

“உலகெங்கிலும் பரவியுள்ள தமிழ் மக்களிடையே எம். ஜி. ஆர் ஒரு உயர்ந்த அடையாளமாகவே திகழ்கிறார். இத்திரைப்பட வெளியீட்டின் போது, பல்வேறு விற்பனை பொருட்கள் அவரை நினைவு கூறும் வகையில் வெளியிடப்பட்ட உள்ளது.

இது மறக்கவியலாத ஒரு மாமனிதரின் திருவிழாவாகவே கொண்டாடப்பட இருக்கிறது” என்கிறார் ஆரஞ்ச் கவுண்டியின் ஹர்நரைன் கில்.

இத்திரைப்படத்தின் ஆக்கபூர்வ தயாரிப்பாளரில் ஒருவராகவும், சர்வதேச ஸ்கிரிப்ட் ஆலோசகராகவும் பங்காற்றும் எம். வெங்கடேசன், “இந்த திட்டம் ஒரு தனித்துவமான சர்வதேச தயாரிப்பு மற்றும் சர்வதேச சந்தைப்படுத்துதல் முறைகளை உள்ளடக்கி இருப்பதால், இம்முயற்சி உலக அளவில் ஆசிய திரைப்படங்களுக்கான ஒரு புதிய பாதையை வடிவமைத்து தரும் எனலாம்”.

மேலும் நேர்முக கதாபாத்திரங்களை திரைப்படங்கள், கண்காட்சிகள், மற்றும் தேர்தல் பிரச்சாரங்களுக்காக வடிவமைக்கும் நோக்கில் பல்வேறு நிறுவனங்களுடன் இந்த கூட்டமைப்பு தீவிரமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows