தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெஃப்சி தொழிலாளர்கள் இடையே பிரச்சினை எழுந்துள்ளதால், நேற்றுமுதல் பெஃப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
இதனால் ரஜினியின் காலா, விஜய்யின் மெர்சல் உள்ளிட்ட 37 படங்களின் சூட்டிங் ரத்தானது.
ஆனால் பெப்சி சாராத தொழிலாளர்களை வைத்து விஷால் தான் நடிக்கும் துப்பறிவாளன் பட சூட்டிங்கை நடத்தி வந்தார்.
இந்நிலையில் பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி இப்பிரச்சினை குறித்து கமலிட்ம் பேசினார்.
அவர் சில ஆலோசனைகளை வழங்கியதாக தெரிவித்தார்.
இந்நிலையில் சற்றுமுன் ரஜினிகாந்தை சந்தித்தார் ஆர்.கே.செல்வமணி.
அவர்கள் சந்திப்பையடுத்து ரஜினி ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது…
எனக்கு பிடிக்காத சில சொற்களில் வேலை நிறுத்தம் (ஸ்டிரைக்) என்கிறது ஒன்று.
எந்த பிரச்சினையாக இருந்தாலும் சுயகௌரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி, அன்பான வார்த்தைகளிலே பேசி, தீர்வு காணலாம்.
தயாரிப்பாளர் சங்கமும், பெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமூகமான தீர்வு காண வேண்டுமென்று மூத்த கலைஞன் என்கிற முறையில் அன்பான வேண்டுகோள்.
என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
Rajinikanth statement about FEFSI strike