லேட்டா வந்தாலும் Sure-ஆ அடிக்கணும்.. – ரஜினியின் 2.0 பன்ச்

லேட்டா வந்தாலும் Sure-ஆ அடிக்கணும்.. – ரஜினியின் 2.0 பன்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthலைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள படம் 2.0.

ஏஆர். ரஹ்மான் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் டிரைலர் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசும் போது…

படம் தொடங்கிய பிறகு என் உடல்நிலை ஒத்துக் கொள்ளாத காரணத்தால் விலக முடிவெடுத்தேன்.

நான் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து விடவும், படமாக்கப்பட்ட வரை ஆன செலவையும் கொடுத்து விடுறேன்.

ஆனால் எனக்காக 4 வருடங்கள் வரை கூட காத்திருப்பேன் என்று லைகா சுபாஷ்கரன் சொன்னார்.

2.0 படம் லேட்டா வருவதாக பலர் கமெண்ட் செய்தனர்.

லேட்டா வந்தாலும் Sure-ஆ அடிக்கணும்.. நா படத்த சொன்னேன்” என்று பேசினார் ரஜினிகாந்த்.

எமலோகத்திலும் எலெக்சன்; போட்டி போடும் யோகிபாபு-கருணாகரன்

எமலோகத்திலும் எலெக்சன்; போட்டி போடும் யோகிபாபு-கருணாகரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yogi Babu And Karunakaran Battle For Next Yama In Dharmaprabhuஸ்ரீவாரி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் புதிய படம் “தர்மபிரபு”.

ஏற்கனவே நாணயம், கள்வனின் காதலி, இராமேஸ்வரம் மற்றும் பல படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்த இவர் பல படங்களை தமிழ்நாடு உரிமை பெற்று ரிலீஸ் செய்தும் உள்ளார்.

மேலும் 100-க்கும் அதிகமான படங்களின் வெளிநாட்டு மட்டும் சேட்டிலைட் உரிமையும் வாங்கி வியாபாரம் செய்வது என்று சுமார் 18 வருடம் அனுபவம் பெற்றவராக, முதன்முதலாக இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இப்படத்தை முத்துகுமரன் இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் ஏற்கனவே விமல் நடித்து வரும் ‘கன்னிராசி’ படத்தை இயக்கியுள்ளார்.

அப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக இப்படத்தை 2-வது படமாக இயக்குகிறார்.

எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில், புதிய எமனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. அது வாரிசு அடிப்படையில் யோகிபாபுவும், சித்ரகுப்தனாக பதவி வகித்துவரும் கருணாகரன் பதவி அடிப்படையிலும் எமனுக்கு போட்டி போடுகிறார்கள்.

இதில் யார் எமன் பதவியை தட்டி செல்கிறார்கள். தன் தகுதியை எப்படி நிரூபித்து கொள்ளப் போகிறார்கள் என்பதே கதை.

இந்த கதையை கேட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிரிக்கத்தான் தோன்றும். அதுவும், சமீபத்தில் தன் உடல் மொழியாலும், வசன உச்சரிப்பாலும், குரல் வளத்தாலும் பார்த்த உடன் அனைவரையும் தன் பக்கம் ரசிகர்களாக மாற்றி கொண்டிருப்பவர் யோகிபாபு.

இவர் திரையில் வந்தாலே சிரிக்க தோன்றுகிறது. அப்படிப்பட்ட இவர் இந்த எமன் கேரக்டரில் நடிக்க ஒத்துக் கொண்டுள்ளது படத்திற்கு மிக பெரிய பலம்.

நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் கருணாகரனும் நடிப்பது மிக பலம் வாய்ந்த கூட்டணியாக அமைந்துள்ளது.

இப்படத்திற்காக ஸ்டூடியோவில் பல ‘செட்’டுகள் அமைக்கப்படுகிறது. முக்கியமாக எமலோகம் செட் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது.

இதற்காக கலை இயக்குநர் C.S.பாலசந்தர் அரங்க அமைப்பிற்க்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

டிசம்பர் மாதம் முதல் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. முழுக்க முழுக்க சென்னையில் படப்பிடிப்பு நடைபெறும். சில பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளது.

இசை : ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு : மகேஸ் முத்துசாமி
படத்தொகுப்பு : சான் லோகேஷ்
பாடல்கள் : யுகபாரதி
நிர்வாக தயாரிப்பு : ராஜா செந்தில்
தயாரிப்பு : P.ரங்கநாதன்

Yogi Babu And Karunakaran Battle For Next Yama In Dharmaprabhu

Yogi Babu And Karunakaran Battle For Next Yama In Dharmaprabhu

பாலின சமத்துவ விருதை வென்ற *சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்*

பாலின சமத்துவ விருதை வென்ற *சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivaranjani and two other women movie won Gender Equality Awardஜியோ MAMI மும்பை திரைப்பட விழா 2018 நிகழ்ச்சியில், இயக்குநர் வஸந்த் எஸ். சாய் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” என்கிற திரைப்படத்திற்காக பாலின சமத்துவ (Gender Equality Award) விருதைப் பெற்றுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதத்தில் மும்பை திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 20வது மும்பை திரைப்படவிழா மும்பையில், அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கி நேற்று (நவம்பர் 01) முடிவடைந்தது.

இந்தத் திரைப்படவிழாவில், இயக்குநர் வஸந்த் எஸ். சாய் இயக்கிய “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” என்கிற திரைப்படம் திரையிடப்பட்டது.

இந்தப் படத்தில், பார்வதி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, சுந்தர், கருணாகரன், கார்த்திக் கிருஷ்ணா, ஆகியோர் நடித்துள்ளனர். எழுத்தாளர்கள் அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோர் எழுதிய சிறுகதைகளை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தப் படத்திற்காக, ‘பாலின சமத்துவ’ (Gender Equality Award) பிரிவில் SPECIAL JURY MENTION விருது “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படத்திற்காக இயக்குநர் வஸந்த் எஸ். சாய்க்கு வழங்கப்பட்டது.

Sivaranjani and two other women movie won Gender Equality Award

vasanth sivaranjani

அரசியல்வாதிகளுக்கு எக்ஸாம் வேண்டும்.; எழுத நான் ரெடி.. : கமல்

அரசியல்வாதிகளுக்கு எக்ஸாம் வேண்டும்.; எழுத நான் ரெடி.. : கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Politician must have exam I am ready to write says KamalhassanGhibbie Comic cinemas சார்பில் ஜெயா ராதாகிருஷ்ணன் பாடல் வரிகள் எழுத, ஜிப்ரான் இசையமைத்திருக்கும் “Get your freaking hands off me” என்ற இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் கலந்து கொண்டு ஆல்பத்தை வெளியிட்டு சிறப்பு பேருரை ஆற்றினார். அப்போது கல்லூரி மாணவ, மாணவியர் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

முன்னதாக ஜேப்பியார் கல்லூரி முதல்வர் வேணுகோபால் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பேசினார்.

ரெஜினா ஜேப்பியார் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தார்.

கமல் சார் இருக்கும் மேடையில் பேசுவது பதட்டமாக இருக்கிறது. எதை பற்றி பேச பயப்படுகிறோமோ, கூச்சப்படுகிறோமோ அதை நிச்சயம் பேச வேண்டும்.

இதற்கு முன்னோடி கமல் சார். அவர் போட்ட பாதையில் தான் நான் எழுதி வருகிறேன். பாலியல் வன்கொடுமை உலகம் முழுக்க நடந்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் பேசுவதை தவிர, அதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் ஜிப்ரான் சார் இந்த பாடலை எழுத சொல்லி கேட்டார்.

நிறைய வார்த்தைகளை எழுதினாலும் அது போதவில்லை. எழுத எழுத வந்து கொண்டே இருந்தது. இந்த பாடல் மூலம் ஒரு பாலியல் வன்கொடுமை என்ற வேதனை நமக்கு நடக்கும்போது, அதை நினைத்து நாம் நின்று போய் விடவோ, பயந்து ஓடவோ கூடாது.

அதை தாண்டி சாதிக்க வேண்டும் என்பதை தான் சொல்லி இருக்கிறேன் என்றார் பாடலாசிரியர் ஜெயா ராதாகிருஷ்ணன்.

சமீப காலமாக நிறைய சர்ச்சைகள் இந்த சமூகத்தில் நம்மை சூழ்ந்து வருகின்றன. அந்த நேரத்தில் ஒரு நேர்மறையான சிந்தனையை விதைக்க முன்வந்தார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

நல்ல விஷயங்கள் நிறையவே நடந்தாலும் இந்த மாதிரி விஷயங்கள் தான் அதை விட அதிகம் ஆக்கிரமிக்கின்றன.

கமல் சார் மாதிரி ஒரு நல்ல தலைவர் இந்த சமூகத்துக்கு வேண்டும். அவர் அலுவலகத்தில் யார் வேண்டுமானாலும் அவரை சந்திக்கலாம். அப்துல கலாம் சார் உடன் கொஞ்சம் பயணித்திருக்கிறேன்.

நாட்டிற்காக அவர் எப்போதும் சிந்தித்து கொண்டே இருந்தார். அவரை போலவே கமல் சார் நாட்டையும், இளைஞர்களையும் பற்றி சிந்தித்து வருகிறார்.

எங்கு போனாலும் கமல் சாரின் அரசியலை பற்றி பேசுகிறார்கள். புது அரசியலை எதிர்பார்க்கிறார்கள். ரெஜினா மேடம் நல்ல விஷயங்கள் எல்லாவற்றிற்கும் எந்த தயக்கமும் இல்லாமல் முன் நிற்கிறார் என்றார் சமூக ஆர்வலர் அப்துல் கனி.

சமூகத்தில் எல்லோரும் கூச்சப்படுகிற, பேச பயப்படுகிற ஒரு விஷயத்தை துணிச்சலாக முயற்சித்திருக்கிறோம். கமல் சார் பள்ளியில் இருந்து நான் வந்திருக்கிறேன் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.

சமூகத்துக்கு திருப்பி கொடுப்பதில் கமல் சார் என்றைக்குமே தவறியதில்லை. நானும் ஏதாவது பண்ணனும் என்பதன் வெளிப்பாடு தான் இந்த ஆல்பம். கமல் சார் இல்லாமல் இது எதுவும் நடந்திருக்காது.

என்னை ஊக்குவித்த அப்துல் கனிக்கு நன்றி, நல்ல விஷயங்களை எப்போதும் ஊக்குவிக்கும் ரெஜினா ஜேப்பியார் அவர்களுக்கும் நன்றி. இதை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டியது மாணவர்களாகிய உங்கள் கைகளில் தான் இருக்கிறது என்றார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

என்னுடைய 3 வயதில் இருந்து வெவ்வேறு வயது மனிதர்கள் அன்பினால் தான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன்.

இந்த வீடியோவை வெளியிடும் தேவையே இங்கு வந்திருக்க கூடாது என்று நினைக்கிறேன். ஜிப்ரானுக்கு முன்னாலேயே பாரதியார் இந்த கொடுமைக்கு எதிராக பாடல் எழுதியிருக்கிறார். பெண்ணுக்கு தலைவருக்கு பொறுப்பை கொடுக்கலாமா என்று உலகம் யோசித்து கொண்டிருந்த வேளையில் இந்தியா ஒரு பெண்ணை தலைவராக்கியது.

பெண்களுக்கு தற்காப்பு கற்றுக் கொடுப்பது சரியாக இருக்காது, பயமே இல்லாமல் செய்தாக வேண்டும். அந்த பொறுப்பு ஆண்கள் கைகளில் தான் இருக்கிறது.

நான் ஒரு பெண்ணின் தந்தை மட்டுமல்ல, ஒரு தந்தைக்கு பிள்ளை. வன்புணர்வு மட்டுமல்ல, வன்முறையாக கைகுலுக்குவதும் கூட தவறு தான்.

நியாயமான குரல் எப்போது வேண்டுமானால் எழலாம், அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாது. ஜேப்பியார் இந்த இடத்தில் கல்லூரி கட்ட போகிறேன் என்று சொன்னபோது, இவ்வளவு தூரம் வந்து யார் படிப்பாங்க என்று நினைத்தேன்.

ஆனால் நானே இங்கு வந்திருக்கிறேன். இன்று விருட்சம் வளர்ந்து ஆலமரமாகி இருக்கிறது. ஜேப்பியார் ஆகச்சிறந்த முன்னோடி. அப்போதே இதை கணித்திருக்கிறார்.

வலதாக அல்லது இடதாக இருக்கணும் அது என்ன மய்யம் என்கிறார்கள், அது தான் வள்ளுவர் கூறும் நடுநிலைமை. ஒரு அற்புதமான நிலையில் எங்கள் மக்கள் நீதி மய்யம் உதித்திருப்பது மகிழ்ச்சி.

நாளைய இந்தியாவின் சிற்பி மாணவர்களாகிய நீங்கள், அதனால் தான் உங்களிடம் இந்த அரசியலை சொல்கிறேன். உங்களை நம்பி இருப்பது மக்கள் நீதி மய்யம் மட்டுமல்ல, மக்களும் தான். வழக்கமாக அரசியல்வாதிகள் தான் வாக்குறுதி கொடுப்பார்கள், இங்கு நீங்கள் எனக்கு வாக்குறுதி தர வேண்டும்.

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தேர்வு இருப்பது போல அரசியல்வாதிகளுக்கு தேர்வு வைக்க வேண்டும். நான் அந்த தேர்வுக்கு தான் தயாராகி வருகிறேன்.

கேள்விகளை கேளுங்கள், என்னை சோதியுங்கள் நான் பதிலளிக்க தயார். மக்கள் தலைவர் ஆக என்னிடம் நேர்மை என்ற திறமை இருக்கிறது. நம் முன்னோர்களின் தாக்கத்தில் இருந்தும், என் மக்களுக்கு நீதி வேண்டும் என்ற கோபத்தில் தான் மக்கள் நீதி மய்யம் உருவானது.

மக்களுக்காக தான் வந்திருக்கிறேன், எனக்காகவும் வந்திருக்கிறேன். இங்கு கொடுக்கும் ஆதரவை வாக்குச் சாவடிக்கு வந்தும் தர வேண்டும். உங்கள் கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என்றார் உலக நாயகன் கமல்ஹாசன்.

Politician must have exam I am ready to write says Kamalhassan

GYFHOM kamal speech

கறி விருந்துடன் *காலா* 100வது நாளை கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்

கறி விருந்துடன் *காலா* 100வது நாளை கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

No power can split me and my fans says Rajinikanthடல்லாஸ் : காலா திரைப்படத்தின் 100 வது நாளை அமெரிக்க ரஜினிகாந்த் ரசிகர்கள் விருந்து வைத்து கொண்டாடி உள்ளார்கள்.

கிடாக்கறி, கோழிக்கறி, பாயசம் என பலவகை உணவுகளுடன் 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட “காலா கறி விருந்து” டல்லாஸ் மாநகரின் இர்விங் ஜெஃபர்சன் பார்க்கில் நடைபெற்றுள்ளது.

இந்தியர்கள் பெருமளவில் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள இந்தப் பூங்கா “காந்தி பார்க்” என்று பரவலாக அழைக்கப்பட்ட நிலையில், பூங்காவின் ஒரு பக்கத்தில் காந்தி சிலையும் சில வருடங்களுக்கு முன்னால் நிறுவப்பட்டது.

பூங்காவின் மறு பகுதியில் உள்ள பிக்னிக் திடலை, நகர நிர்வாகத்திடம் அனுமதி பெற்று “காலா கறி விருந்து” க்காக வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ.)சார்பில் விழா ஏற்பாடு செய்து இருந்தனர்.

விழா தொடங்குவதற்கு முன்னதாக திடலுக்கு வந்த ரசிகர்கள், தமிழகத்தைப் போலவே கொடிகள், பேனர்கள் என அலங்கரித்தனர்.

ஜெனரேட்டர் உதவியுடன் மின்சார வசதி செய்து, ஸ்பீக்கர்கள் மூலம் ரஜினிகாந்த் படப் பாடல்களை ஒலிக்கச் செய்துள்ளனர். அதனால் அந்தப் பகுதியில் காலை முதலாகவே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.

காலை பதினோரு மணி முதலாகவே ரசிகர்கள் கார்களில் வரத்தொடங்கினார்கள். 50க்கும் மேற்பட்ட கார்களில் குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் விழாவில் பங்கேற்றுள்ளார்கள்.

தமிழ்த் தாய் வாழ்த்துடன் விழா கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை சைவ அசைவ உணவுகள் வழங்கப்பட்டது. கிடாக்கறி, கோழிக்கறி, இனிப்பு உட்பட 15 க்கும் மேற்பட்ட வகை உணவுகள், விருந்தில் இடம் பெற்றது. ரஜினிகாந்த் படப்பாடல்களை கரோக்கி இசையுடன் பாடினார்கள்.

காலா படத்தை நினைவு கூறும் வகையில் ரஜினி வாசு – விஜய் நடிப்பில் “காலாவும் ஹரிதாதாவும்” நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் காட்சியை அரங்கேற்றி அசத்தினார்கள்.

2 வயதுக் குழந்தை முதல் பெரியவர்கள் வரையிலும் 150க்கும் மேற்பட்டோர், இந்த விழாவில் பங்கேற்று ரசிகர்களின் ஆரவாரத்தில் பிரம்மித்துப் போனார்கள். இந்த விழா பற்றி விழா ஏற்பாட்டாளர்கள் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

ரஜினிவாசு, “காலா தலைவரின் வெற்றிப்படம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. தலைவரின் வெற்றியை கொண்டாடும் வகையில் க்றி விருந்து வைத்து விழா எடுத்தோம்.

தெய்வபக்தியும் தேசபக்கியும் கொண்ட தலைவரின் வழியில் என்றென்றும் அயராது உழைப்போம் ” என்று கூறினார்.

அன்புடன் ரவி கூறுகையில் “எனது பிள்ளைகள் காலா படத்தை பார்த்துவிட்டு இந்தியாவில் இது போன்ற நில உரிமை பிரச்சினை இருக்கிறதா?, என்று வருத்தத்துடன் கேட்டார்கள், குழந்தைகளிடம் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது காலா,“ என்று தெரிவித்தார்.

ரஜினி ராஜா,”அமெரிக்காவில் தலைவர் ரஜினி படம் எப்போதும் மிகப்பெரிய வெற்றி பெரும். அதுபோல காலாவிற்கு, மக்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்து மாபெரும் வெற்றியடைய செய்தனர்.

100 நாள் விழா கொண்டாடியது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. காலா வெளியான முதல் நாள் கொண்டாடத்திற்கு இணையான கொண்டாட்டமாக இந்த 100 வது நாள் விழா அமைந்தது,” என்று கூறினார்.

மிஷிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரிலிருந்து விழாவில் பங்கேற்க வந்திருந்த அருள், “தமிழ்நாட்டுக்குச் சென்று தலைவர் பட விழாக்களில் கலந்து கொள்ள முடியவில்லை என்ற ஆதங்கத்தை இந்த விழா தீர்த்து வைத்தது.

அமெரிக்காவில் ரஜினி ரசிகர்களின் விழாவில் பங்கேற்பது என்பது பெருமையாகவும் இருக்கிறது. தலைவர் ரசிகர்களை சந்தித்தது, குடும்பத்தினரை சந்தித்து விட்டு வந்து போல் மனநிறைவை தந்தது,” என்று கூறினார்.

இர.தினகர் கூறும் போது, “தலைவர் 40 வருடமாகவே குடும்பத்தை முதலில் பாருங்கள் என்று சொல்லி வருகிறார். அமெரிக்காவில் நேரம் என்பது மிகவும் அரிதாகிவிட்ட வேளையிலும், குடும்பத்தினராக குழந்தைகளுடன் விழாவில் பங்கேற்றது முக்கியத்துவம் வாய்ந்தது. தலைவர் ‘முதலில் குடும்பத்தை கவனியுங்கள்’ என்று சொன்னதாலோ என்னவோ, உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு ரஜினி ரசிகரின் குடும்பமும் தலைவரின் தீவிர விசுவாசிகள் ஆகிவிட்டனர். வரப்போகும் தேர்தலில் இது நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை தலைவருக்குத் தேடித் தரும்” என்று தெரிவித்தார்.

காலா விருந்து வெற்றிகரமாக நடைபெற உதவிபுரிந்த அனைவருக்கும், பங்கேற்றவர்களுக்கும் ரஜினி வாசு நன்றி தெரிவித்தார். காலா வெற்றிப்படமா தோல்விப்படமா என்ற விவாதத்திற்கு இடமின்றி, காலா ஒரு மாபெரும் வெற்றிப்படம் என்று ரசிகர்கள் கொண்டாட்டம் மூலம் தெள்ளத் தெளிவாக தெறிக்க விட்டுள்ளார்கள்.

விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ). சார்பில் ரஜினிவாசு, இன்பா, சரத்ராஜ், அறிவு, பிரபு, சதிஷ், நாகா, செந்தில், கார்த்திக், சங்கர், சந்தர், ஸ்ரீகாந்த், புனித், அருள், சுப்பு, பாலாஜி, மோனி, ராம்குமார், ரமேஷ், மகேஷ், ஆனந்த், கிருஷ்ணகுமார், ஸ்ரீனிவாசன், ரஜினி ராஜா, அன்புடன் ரவி, இர.தினகர் ஆகியோர் செய்து இருந்தார்கள்.

அமெரிக்காவிலும் ரஜினிகாந்துக்கு இப்படி தீவிர ரசிகர்கள் இருப்பதைப் பார்க்கும் போது, அவருடைய அரசியல் வெற்றி ஒன்றும் ஆச்சரியப்படக்கூடியது அல்ல என்றே தெரிகிறது.

Rajinikanth fans celebrated Kaala 100 days in America
Rajinikanth fans celebrated Kaala 100 days in America

விஜய்யின் சர்காருக்கு கடும் கெடுபிடிகள் காட்டும் தமிழக சர்கார்

விஜய்யின் சர்காருக்கு கடும் கெடுபிடிகள் காட்டும் தமிழக சர்கார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarkarவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகிறது.

கடந்த சில வருடங்களாகவே பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் தினத்தில் அதிகாலை 4 மணிக்கே காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.

எனவே சர்கார் திரைப்படத்திற்கும் அதிகாலை காட்சிகள் இருக்கும் என ரசிகர்கள் நினைத்திருந்தனர்.

ஆனால் காலை காட்சிகள் 6 மணிக்கே ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாலை காட்சிகளுக்கு எந்த தியேட்டரிலும் முன்பதிவு செய்யப்படவில்லை..

சிறப்புக் காட்சிகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் அரசு தரப்பிலும் கடுமையான கெடுபிடி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால்தான் பல தியேட்டர்களில் அதிகாலைக் காட்சிகளை ரத்தாகியுள்ளது.

More Articles
Follows