தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சரத்குமார்.
(இந்த கேரக்டரில் நடிக்க தான் மணிரத்னத்திடம் கேட்டு இருந்தார் ரஜினிகாந்த். ஆனால் இது போன்ற சின்ன கேரக்டரில் உங்களை நடிக்க வைத்தால் உங்கள் ரசிகர்கள் திட்டுவார்கள் என மணிரத்னம் மறுத்து விட்டதாக தெரிவித்து இருந்தார் ரஜினி என்பதும் குறிப்பிடத்தக்கது)
இந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தைப் பார்த்து ஒவ்வொருவரையும் பாராட்டி வருகிறார் ரஜினி.
நடிகர்கள் கார்த்தி ஜெயம் ரவி ஆகியோர் பாராட்டுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தனர்.
அதுபோல சரத்குமாரையும் பாராட்டி இருக்கிறார் ரஜினி.
இதனையடுத்து அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்துள்ளார் நடிகர் சரத்குமார்.
இந்த சந்திப்பு தொடர்பாக சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில்….
“அன்பு நண்பர் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் “பெரிய பழுவேட்டரையர்” கதாபாத்திரம் ஏற்று நடித்த என்னை அலைபேசியில் அழைத்து ஆத்மார்த்தமாக பாராட்டியதற்கு நன்றி் தெரிவிக்கும் விதமாக இன்றைய (அக்டோபர் 9) தினம் அவரை நேரில் சந்தித்ததில் இனிய தினமாக நாள் துவங்கியது.
எனது பணிகள், மகள் வரலட்சுமியின் பணிகள், திரைத்துறை வளர்ச்சி மற்றும் பொதுவான கருத்துகளை பகிர்ந்து காபியுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட உரையாடலில் இருவருக்கும் இடையேயான நட்பினை எண்ணி நெகிழ்ந்தேன்” என பதிவிட்டுள்ளார் சரத்குமார்.