பிப் 26 முதல் மார்ச் 3 வரை ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

பிப் 26 முதல் மார்ச் 3 வரை ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Baashaசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பது நாம் அறிந்ததே.

எனவே அவரது படங்கள் ரிலீஸ் முதல் பிறந்தநாள் வரை ஒன்றையும் விடாது அனைத்தையும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் வருகிற பிப்ரவரி 26ஆம் தேதி ரஜினிகாந்த்-லதா தம்பதியரின் திருமண நாள் வருகிறது.

எனவே இதனை கொண்டாட காமன் புரபைல் பிக்சரை (Common Profile Picture) டிசைன் செய்து வருகின்றனர்.

மேலும் அடுத்த மாதம் மார்ச் 3ஆம் தேதி பாட்ஷா படத்தின் டிஜிட்டல் வெர்ஷன் வெளியாகிறது.

எனவே இதனையும் கொண்டாடி அசத்தவிருக்கிறார்களாம்.

ஆக, ஒரு வாரத்திற்கு இணையத்தை ரஜினி ரசிகர்கள் அதிர வைக்க போகிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

Rajini fans going to celebrate Thalaivar wedding Day and Baasha re-release

அழகான வாழ்க்கை தந்த அனைவருக்கும் கார்த்தி நன்றி

அழகான வாழ்க்கை தந்த அனைவருக்கும் கார்த்தி நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthiசிவகுமாரின் இளைய மகன், சூர்யாவின் தம்பி என்ற அடையாளம் இருந்தாலும், ஆர்ப்பாடமில்லாமல் பருத்தி வீரனில் அறிமுகமானார் கார்த்தி.

இதனையடுத்து நான் மகான் அல்ல, பையா என அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகராகியுள்ளார்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மெட்ராஸ், தோழா, காஷ்மோரா ஆகிய படங்கள் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளது.

இந்நிலையில் இன்று பிப்ரவரி 23ஆம் தேதியுடன் இவர் திரைக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதனையொட்டி தனக்கு அழகான வாழ்க்கையை தந்த குடும்பம், தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

Karthi celebrates 10 years in Cinema Industry

karthi tnks

பார்வையிழந்த பெண்மணிக்கு வாய்ப்பு கொடுத்த ஜிவி பிரகாஷ்

பார்வையிழந்த பெண்மணிக்கு வாய்ப்பு கொடுத்த ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakashஇசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரட்டை குதிரைகளில் வெற்றி பவனி வருபவர் ஜிவி. பிரகாஷ்.

இவரது நடிப்பில் ரவி அரசு இயக்கும் ஐங்கரன் படத்தின் சூட்டிங் அண்மையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சரத்குமார் மற்றும் ஜிவி. பிரகாஷ் நடிக்கும் அடங்காதே படத்தில் ஒரு பின்னணி பாடகி ஜோதியை அறிமுகப்படுத்துகிறார் ஜி.வி. பிரகாஷ்.

இந்த பாடகி பார்வை குறைப்பாடு உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

G.V.Prakash KumarVerified account‏@gvprakash
Yes this wonderful singing talent Jyothi will be making her debut in my next musical album #adangathey

GV Prakash introduce play back singer Jothi in his Adangathey movie

தயாரிப்பாளர் சங்கத்துக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

தயாரிப்பாளர் சங்கத்துக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal teamதயாரிப்பாளர் சங்கத்தினுடைய தேர்தல் ஏப்ரல் 2 – இரண்டாம் தேதி உட்லண்ட்ஸ் ( Woodlands ) திரையரங்கில் நடைபெறவுள்ளது

ஓய்வு பெற்ற நீதிபதியும் தமிழ்த்திரைப்பட தேர்தல் அதிகாரியுமான திரு . ராஜேக்ஷ்வரன் அவர்கள் இன்று காலை 11மணி அளவில் filmchamber அலுவலகத்தில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் தேர்தல் சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் 27.02.2017 அன்று வரை உறுப்பினர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்படுமாயின் புகார் கொடுக்கலாம்.

28.02.2017 -ல் புகார்களுக்கு பதில் கிடைக்கும் என்று கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாபஸ் பெற கடைசி நாள் 01.03.2017.

ஏப்ரல் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை Wood lands திரையரங்கில் தேர்தல் நடைபெறும் அன்று இரவே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார். இக்கூட்டத்தில் மூத்த தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

விஷால் அணி சார்பாக பிரகாஷ் ராஜ் ,ஆர்.பார்த்திபன், K.E.ஞானவேல்ராஜா, பாண்டிராஜ் ,SR.பிரபு ,AL உதயா மற்றும் உடன் ராதாகிருஷ்ணன், கேயார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தன்னுடைய கதாபாத்திரம் கன கச்சிதமாக உருவாக, தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொண்டார் அருண் விஜய் – இயக்குநர் அறிவழகன்

தன்னுடைய கதாபாத்திரம் கன கச்சிதமாக உருவாக, தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொண்டார் அருண் விஜய் – இயக்குநர் அறிவழகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arun Vijay and Director Arivazhaganஅருண் விஜய் – மஹிமா நம்பியார் நடிப்பில், இயக்குநர் அறிவழகன் இயக்கி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் 23’. ‘ரெதான் – தி சினிமா பீப்பல்’ நிறுவனத்தின் சார்பில் இந்தெர் குமார் தயாரித்து, மெடிக்கல் – கிரைம் – திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் ‘குற்றம் 23’ திரைப்படத்தை, வருகின்ற மார்ச் 3 ஆம் தேதி அன்று ‘அக்கராஸ் பிலிம்ஸ்’ நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

“ஒரு தரமான மெடிக்கல் – கிரைம் – திரில்லர் திரைப்படத்தை நான் உருவாக்கி இருக்கின்றேன் என்று முழுமையாக நம்புகின்றேன். இந்த படத்தில் ஒரு வலுவான கருத்தையும் நான் உள்ளடக்கி இருக்கின்றேன்.

‘என்னை அறிந்தால்’ படத்தில் சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட அருண் விஜயை , இந்த ‘குற்றம் 23’ படம் மூலம் சட்டத்தை பாதுகாக்கும் ஒரு காவல் துறை அதிகாரியாக ரசிகர்கள் காண்பார்கள். தன்னுடைய கதாபாத்திரம் கன கச்சிதமாக உருவாக, தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் ஒரு நடிகர் அருண் விஜய்.

முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அருண் விஜய், அவருடைய வேடம் மிக சரியாக அமைய பல முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். ஒரு புதிய நட்சத்திர நாயகனின் உதயத்தை, ரசிகர்கள் விரைவில் உறுதி செய்வார்கள்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் அறிவழகன்.⁠⁠⁠⁠

என்னை உயர்த்திய இந்த சமூகத்துக்கு மறுபடியும் நான் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் – விஷால்

என்னை உயர்த்திய இந்த சமூகத்துக்கு மறுபடியும் நான் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் – விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vishal speechசிதம்பரம் மாவட்டம் பிச்சாவாரத்தில் உள்ள பள்ளி விழாவில் “ துப்பறிவாளன் “ திரைப்படத்தின் படபிடிப்பில் இருந்த நடிகர் விஷால் மற்றும் பிரசன்னா கலந்து கொண்டனர். இவர்களோடு ஆபர் தொண்டு நிர்வண தலைவி நடிகை பூங்கோதை கலந்துகொண்டார்.

தென்னிந்திய நடிகர் சங்கமும் , ஆபர் தொண்டு நிறுவனமும் இனைந்து எம்.ஜி.ஆர் நகர் மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி செய்தனர். விஷால் மாணவர்களுக்கு காலணிகள் , நோட்டு புத்தகங்கள் , சீருடைகள் வழங்கிய பின் பேசினார். அவ்விழாவில் விஷால் பேசியது ;

ஒவ்வொரு முறை ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும் போது அங்கே நாம் எதற்காக போகிறோம், என்ன செய்ய போகிறோம், நாம் அங்கு செல்வதனால் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்க போகிறது என்பதை அலசி பார்த்து தான் எல்லா நிகழ்ச்சிக்கும் நான் செல்கிறேன். நான் இங்கு இருந்து கிளம்பியவுடன் எனக்கு அணிவித்த இந்த சால்வைகளை எல்லாம் விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் இன்னும் ஒரு குழந்தையை படிக்க வைக்க போகிறேன்.

எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் சால்வை அணிவிப்பது. முதலில் மாணவர்களாகிய நீங்கள் தான் இந்த மேடையில் அமர வேண்டும். நான் உங்கள் இடத்தில் அமர்ந்து பேச வேண்டும். உங்களுக்கு தான் இந்த மேடை. நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை இங்கே நின்று பேசுவதற்கு. நான் இந்த கிராம மக்களுக்கு மட்டும்மல்ல காதால் கேட்கும் விஷயங்களுக்கும் , கண்ணால் பார்க்கும் விஷயங்களுக்கும் முடிந்த அளவிற்கு உதவி செய்கிறேன். நான் உதவி செய்வது பெரிய விஷயம் அல்ல இந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவி வயதான பெண்மணி ஒருவருக்கு உதவி செய்துள்ளார்.

இது மிகப்பெரிய ஒரு விஷயமாகும். நான் வளர்ந்து இந்த நிலைக்கு வந்த பிறகு தான் அனைவருக்கும் உதவி செய்கிறேன். நான் நல்ல நிலைக்கு வர நீங்கள் தான் காரணம் , நீங்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி என் படத்தை பார்ப்பதனால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன்.

என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ள இந்த சமூகத்துக்கு ஏதாவது நாம் நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு நான் உதவி வருகிறேன். என்னை பாராட்டுவதை விட எட்டாம் வகுப்பு படிக்கும் போதே பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டுள்ள இந்த மாணவியை பாராட்டுவது தான் சரியாக இருக்கும் என்றார் விஷால்.

More Articles
Follows