தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு பக்கம் சமூகம் சார்ந்த சேவைகள் மறுபக்கம் கலையுகப் பணிகள் என ஓய்வில்லாமல் உழைத்து வருபவர் ராகவா லாரன்ஸ்.
இதனிடையில் நேற்று பிற்பகல், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவரது இல்லத்தில், லாரன்ஸ் தலைமையில் மாணவர்கள், இளைஞர்கள் சந்தித்து பேசினர்.
அப்போது ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுத்ததற்காகவும், மாணவர்கள் போராட்டத்துக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்ததற்காகவும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் தன் கலைப்பணிகளில் முழுமூச்சுடன் இறங்கிவிட்டார் லாரன்ஸ்.
லாரன்ஸ் நடிப்பில் சாய்ரமணி இயக்கியுள்ள மொட்ட சிவா கெட்ட சிவா மற்றும் பி. வாசு இயக்கியுள்ள சிவலிங்கா ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் (பிப்ரவரி 17) வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தன்னுடை இரண்டு படங்களையும் லாரன்ஸ் ஏன் ஒரே நாளில் வெளியிடுகிறார்?
இரண்டு படங்களும் மோதிக் கொண்டால் ஒரு படத்தின் வசூல் மற்ற படத்தை பாதிக்காதா? இதை லாரன்ஸ் கவனிப்பாரா? என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
Raghava lawrance going to release his 2 movies in same date