CHANDRAMUKHI 2 LIVE மனித உருவில் கடவுள் லாரன்ஸ்.; மகிமா – சுபிக்‌ஷா – ஸ்ருஷ்டி டாங்கே பேச்சு

CHANDRAMUKHI 2 LIVE மனித உருவில் கடவுள் லாரன்ஸ்.; மகிமா – சுபிக்‌ஷா – ஸ்ருஷ்டி டாங்கே பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லாரன்ஸ் நடிப்பில் வாசு இயக்கியுள்ள ‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை சோளிங்கநல்லூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்தப் படத்தில் நடித்துள்ள மகிமா நம்பியார் & ஸ்ருஷ்டி டாங்கே மற்றும் சுபிஷா ஆகியோர் மேடை ஏறினர்.

அவர்கள் மூவரில் மகிமா நம்பியார் முதலில் பேசும்போது…

‘சந்திரமுகி2’ படத்தில் வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் லாரன்ஸ் மாஸ்டர் ஆகியோருக்கு நன்றி கூறினார்.

லாரன்ஸ் மாஸ்டர் அடிக்கடி சர்வீஸ் இஸ் காட் என்பார் சேவையே கடவுள் என்பார்.

அவர் செய்து வரும் சேவைகள் மிகப்பெரியது. எனக்கு தெரிந்த கடவுள் அவர் தான் என்றார். அவர் பேசும்போது கங்கனா மற்றும் வடிவேலுவை குறிப்பிட்டு பேச மறந்து விட்டார்.

அதன் பின்னர் மைக்கை வாங்கி.. “கங்கனா.. நீங்கள் இங்க இருக்கும் பெண்கள் எல்லாருக்கும் மாடலாக இருக்கிறீர்கள்.” என்றார்.

சுபிக்‌ஷா பேசும் போது.. “வடிவேல் அண்ணா உங்களை டிவியில் திரைப்படங்களில் பார்த்து இருக்கிறேன். உங்களுடன் நடிப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை..

நீங்கள் முதலில் எங்களுடன் பேசிவீர்களா என்று தயக்கமாக இருந்தது.. ஆனால் நீங்கள் என்னுடன் வந்து பேசுனீர்கள்.

அதன் பின்னர் இறுதியாக ஸ்ருஷ்டி டாங்கே பேசும்போது அரங்கத்தில் ரசிகர்களின் கர ஓலி விசில் சத்தம் பயங்கரமாக எழுந்தது. வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி.. படம் சிறப்பாக வந்துள்ளது.. திரையில் பார்த்து மகிழுங்கள்” என்றார்.

Mahima Subiksha Srusti speech at Chandramukhi 2 audio launch

CHANDRAMUKHI 2 LIVE ராஜமவுலி கிட்ட சொல்லுங்க – பாபா பாஸ்கர்..; ‘சந்திரமுகி 1 & 2’ கனெக்சன் இருக்கு – மதன்கார்க்கி

CHANDRAMUKHI 2 LIVE ராஜமவுலி கிட்ட சொல்லுங்க – பாபா பாஸ்கர்..; ‘சந்திரமுகி 1 & 2’ கனெக்சன் இருக்கு – மதன்கார்க்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லாரன்ஸ் நடிப்பில் வாசு இயக்கியுள்ள ‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை சோளிங்கநல்லூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

மேடையில் நடனமாடிய பின்னர் பாபா பாஸ்கர் பேசியதாவது…

ஐ லவ் யூ கங்கனா ஜீ.. எப்படி இருக்கீங்க.?

லாரன்ஸ் மாஸ்டர. உங்கள் படங்களை தொடர்ந்து எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதன் பின்னர் இசையமைப்பாளர் கீரவாணியை பார்த்து.. ராஜமௌலி சாரிடம் வாய்ப்பு வாங்கி கொடுங்கள். இதை கேட்பதற்கு எனக்கு வெட்கம் எதுவும் இல்லை” என்றார் பாபா பாஸ்கர்.

அதன் பின்னர் பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசும் போது…

இந்தப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. தமிழ் படத்தில் உள்ள தெலுங்கு பாடல்கள் சைதன்யா எழுதி உள்ளார். தெலுங்கு படத்தில் உள்ள தமிழ் பாடல்களை நான் எழுதி இருக்கிறேன்.

சந்திரமுகி 1 & 2 படத்திற்கும் ஒற்றுமை இருக்கு. அது இயக்குனர் வாசு.. நடிகர் வடிவேலு… ஆனால் அதையும் தாண்டி சந்திரமுகி 1 படத்துடன் இந்த சந்திரமுகி 2 படத்தை கனெக்ட் செய்துள்ளார் பி. வாசு. அது அருமையாக அமைந்துள்ளது” என்றார் மதன் கார்க்கி.

Baba Baskar and Madhan Karki speech at Chandramukhi 2 audio launch

கண்ட இடங்களில் கையெழுத்து போட்டு மாட்டிகிட்டேன்.; ‘துடிக்கும் கரங்கள்’ விழாவில் விமல் வேதனை

கண்ட இடங்களில் கையெழுத்து போட்டு மாட்டிகிட்டேன்.; ‘துடிக்கும் கரங்கள்’ விழாவில் விமல் வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேலுதாஸ் இயக்கத்தில் விமல் நடித்த ‘துடிக்கும் கரங்கள்’ படம் செப்டம்பர் 1 தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் டிரைலர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற நடிகர் விமல் பேசும்போது…

“பலரும் ஏன் உங்கள் படம் அடிக்கடி வருவதில்லை என்று கேட்கிறார்கள்.. கடவுள் புண்ணியத்தில் இப்போது நிறைய படங்களில் நடித்து வருகிறேன்.. இனி அடுத்தடுத்து எனது படங்கள் வெளியாகும்..

இப்போது எல்லாம் நிறைய கையெழுத்துக்கள் போடுவதில்லை. அதனால் இனிமேல் எனக்கு படங்கள் நிறைய வரும்.. சினிமாவுக்கு வந்த புதிதில் நம்ம படம் தானே என நீட்டிய இடத்தில் எல்லாம் நம்பி கையெழுத்து போட்டு விட்டேன். ஆனால் அதற்கெல்லாம் பின்னாடி மொத்தமாக சேர்த்து வைத்து கிடைத்தது..

விமல் படங்களே வரவில்லையே, இவரை வைத்து படம் எடுக்கலாமா என்று பலரும் யோசிக்கும் அளவிற்கு கடந்த மூன்று வருடங்கள் ஓடி விட்டன.

அந்த சமயத்தில் என்னை நம்பி வந்த படம் தான் இந்த துடிக்கும் கரங்கள். சொல்லப்போனால் லாக்டவுன் சமயத்தில் எனக்கு கைகொடுத்த படமும் கூட. இந்த படத்தில் நடிக்கிறேன் என்கிற தகவல் பரவியதால் தான் எனக்கு ‘விலங்கு’ உள்ளிட்ட இன்னும் சில பட வாய்ப்புகள் தேடி வந்தன. என் தரப்பில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் யாரையும் அழைக்கவில்லை.

கூப்பிட்டு வரவில்லை என்றால் சங்கடமாகிவிடும். அதற்கும் ஒரு நேரம் வரும். ஆனால் சவுந்தர்ராஜா தனது சார்பில் சிறப்பு விருந்தினர்களை அழைத்து வந்து விட்டார். ரோபோ சங்கர் ஒரு பல்கலைக்கழகம். அவரை பார்த்து பல பேர் திருந்தி விட்டார்கள். நானும் கடந்த 45 நாட்களாக திருந்தி விட்டேன்” என்று கூறினார்.

இயக்குனர் வேலுதாஸ் பேசும்போது,…

“இன்றைய இளைஞர்களை சூழ்ந்திருக்கும் ஒரு அபாயம் குறித்து தான் இந்த படத்தில் பேசி இருக்கிறேன். இந்த படம் துவங்கியதில் இருந்து நானும் விமலும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வோம். பிறகு பாசமாக பேசிக் கொள்வோம். எல்லோரும் இந்த கதையில் விமலையா நடிக்க வைக்கிறீர்கள் என கேட்டார்கள். ஆனால் விமல் வழக்கமாக கிராமத்து கதைகளிலேயே நடித்து வருவதால், இந்த சிட்டி சப்ஜெக்ட்டில் ஒரு யூடியூபராக அவர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என நினைத்தேன்.

அதேபோல அவர் மொத்த படத்திலும் எந்த இடத்திலும் ஒரு குறுக்கீடும் செய்யாமல் நான் சொன்ன அத்தனை விஷயங்களையும் செய்திருக்கிறார்.

இசையமைப்பாளர் மணி சர்மாவின் சகோதரர் மகன் ராகவ் பிரசாத் தான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மும்பையில் தற்போது மணி சர்மாவின் இசை நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டிருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை” என்று கூறினார்.

My signatures took me in trouble says Vimal

சத்யராஜுக்கு அடுத்து விமல்.. யூடியூபர்கள் சண்டையில் பலிகடா ஆகிடாதீங்க – பேரரசு

சத்யராஜுக்கு அடுத்து விமல்.. யூடியூபர்கள் சண்டையில் பலிகடா ஆகிடாதீங்க – பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேலுதாஸ் இயக்கத்தில் விமல் நடித்த ‘துடிக்கும் கரங்கள்’ படம் செப்டம்பர் 1 தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் டிரைலர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற இயக்குனர் பேரரசு பேசும்போது..

“நடிகர் விமல் மிகச்சிறந்த நடிகர். சத்யராஜுக்கு அடுத்ததாக மிக நீளமான வசனங்களையும் நிறுத்தாமல் பேசக்கூடியவர்.

நடிகர் மோகனுக்கு அடுத்ததாக எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கக்கூடிய நடிகராக இப்போது இருப்பவர் நடிகர் விமல் தான். அவரது திறமையை இந்த திரையுலகம் சரியாக பயன்படுத்தவில்லை.

இப்படத்தில் விமலா இது என ஆச்சரியப்படும் வகையில் ஆக்ஷனில் பின்னி இருக்கிறார். இன்றைய சூழலில் யூடியூபர்கள் எல்லா நடிகர்களின் படங்களையும் ஆதரிக்க வேண்டும். அவர் பெரியவரா, இவர் பெரியவரா என்ற சண்டையை பெரிதாக்க கூடாது.

நாங்கள் என்ன அரசியலா செய்து கொண்டிருக்கிறோம் ? நாங்கள் சினிமா படம் எடுக்கிறோம். யாருக்கு எந்த பட்டம் கொடுக்க வேண்டும் என நீங்கள் உங்களுடைய பிழைப்பை நடத்துவதற்காக தயவு செய்து எங்கள் குடும்பத்தில் கை வைக்காதீர்கள்.

ஒவ்வொரு ஹீரோவின் படத்தையும் மற்ற ஹீரோக்களின் ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். யூடியூபர்கள் மூட்டிவிடும் சண்டையில் பலிகடா ஆகி விடாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

Vimal follows actor Sathyaraj says Perarasu

ரஜினிக்கு மும்பை.. விஜய்க்கு காஷ்மீர்..; வச்சி செய்த கே.ராஜன்

ரஜினிக்கு மும்பை.. விஜய்க்கு காஷ்மீர்..; வச்சி செய்த கே.ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேலுதாஸ் இயக்கத்தில் விமல் நடித்த ‘துடிக்கும் கரங்கள்’ படம் செப்டம்பர் 1 தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் டிரைலர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது….

“பெரிய படங்கள் வெற்றி பெற்றால் அதில் கிடைக்கும் கட்டுக்கட்டான பணம் மீண்டும் திரையுலக்கிற்கு வருவதில்லை.

ஆனால் இதுபோன்ற சின்ன படங்கள் வெற்றி வரும்போது அந்த பணம் மீண்டும் அடுத்த படத்திற்காக இங்கேயே புழக்கத்தில் இருக்கும். சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு என ஒரு ஹீரோ இருக்கிறார் என்றால் அது விமல் தான்.

ரஜினியின் கடந்த சில படங்கள் மும்பையில் தான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அங்குள்ள தொழிலாளர்கள் தான் அந்த படத்தில் வேலை பார்த்தார்கள். ஆனால் வசூல் மட்டும் தமிழ்நாட்டில் இருந்து வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

சமீபத்தில் காஷ்மீரில் நடைபெற்ற ஒரு படத்தின் படப்பிடிப்பு அங்கே ஏதோ பிரச்சனை என்பதால் நிறுத்தப்பட்டு இங்கே சென்னையில் செட் போட்டு எடுத்தார்கள்.. அது சாத்தியம் என்கிற போது இங்கே தமிழ்நாட்டிலேயே படம் எடுக்கலாமே” என்று கூறினார்.

K Rajan questions Rajini and Vijays outdoor shooting

யூடியுபர்ஸ் என்னை கொன்னுட்டாங்க.; வீட்டில் கஷ்டப்படுறாங்க.. – ரோபோ சங்கர்

யூடியுபர்ஸ் என்னை கொன்னுட்டாங்க.; வீட்டில் கஷ்டப்படுறாங்க.. – ரோபோ சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேலுதாஸ் இயக்கத்தில் விமல் நடித்த ‘துடிக்கும் கரங்கள்’ படம் செப்டம்பர் 1 தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் டிரைலர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற நடிகர் ரோபோ சங்கர் பேசும்போது..

“கடந்த ஆறு மாத காலத்திற்குள் நான் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்புவதற்குள் ஒரு குறிப்பிட்ட சில யூடிபர்கள் என்னை பலமுறை கொன்று விட்டார்கள். என் வீட்டில் எவ்வளவு வேதனையை அனுபவித்திருப்பார்கள்.

மற்றவர்களை மகிழ்விக்கும் ஒரு கலைஞனை இப்படி காயப்படுத்தலாமா ?” என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

Youtubers spreading rumours says Robo Shankar

More Articles
Follows