‘லியோ’ ரிலீஸாகும் தியேட்டர்களில் இணையும் தனுஷ் – லாரன்ஸ் பட டீசர்கள்

‘லியோ’ ரிலீஸாகும் தியேட்டர்களில் இணையும் தனுஷ் – லாரன்ஸ் பட டீசர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.

இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்க நாளை அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாக உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை 9:00 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் இந்தியா தவிர மற்ற நாடுகளின் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லாரன்ஸ் & எஸ் ஜே சூர்யா நடித்துள்ள ‘ஜிகர்தண்டா டபுள் X’ என்ற படத்தின் டீசரும் லியோ வெளியாகும் அயல்நாட்டு தியேட்டர்களில் திரையிடப்படும் என தெரிய வந்துள்ளது.

Captain Miller and Jigarthanda Double X teaser joins with Leo

ரசிகர்கள் எதிர்பார்த்த முக்கிய தியேட்டர்களில் ‘லியோ’ ரிலீஸ் ஆகாது.; காரணம் இதான்.!

ரசிகர்கள் எதிர்பார்த்த முக்கிய தியேட்டர்களில் ‘லியோ’ ரிலீஸ் ஆகாது.; காரணம் இதான்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.

இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்க நாளை அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாக உள்ளது.

கடந்த சில தினங்களாகவே ‘லியோ’ படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் இருக்குமா? இல்லையா? என்பது பற்றி விவாதங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை 9:00 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ரோகினி மற்றும் வெற்றி ஆகிய தியேட்டர்களில் லியோ திரைப்படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் ‘லியோ’ தயாரிப்பு நிறுவனம் ஒரு வாரத்தில் 80 சதவிகித லாபத்தை கொடுக்க வேண்டும் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு தியேட்டர் நிர்வாகம் ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் செய்யவில்லை என தெரிய வந்துள்ளது.

இவை மட்டும் இல்லாமல் சென்னையில் இன்னும் சில தியேட்டர்களிலும் இந்த பிரச்சனை நீடித்து வருவதால் லியோ திரைப்படம் ரிலீசாகாது எனவும் கூறப்படுகிறது.

Leo will not be released in Rohini and Vettri theatres

‘லியோ’ விமர்சனம் பதிவிட்டு தளபதி விஜய் அண்ணாவை வாழ்த்திய உதய்ண்ணா

‘லியோ’ விமர்சனம் பதிவிட்டு தளபதி விஜய் அண்ணாவை வாழ்த்திய உதய்ண்ணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.

இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்க நாளை அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாக உள்ளது.

கடந்த சில தினங்களாகவே ‘லியோ’ படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் இருக்குமா? இல்லையா? என்பது பற்றி விவாதங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை 9:00 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகரும் தமிழக அரசின் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி அவர்கள் ‘லியோ’ படத்தை பார்த்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் அந்த விமர்சனம் குறித்து பதிவிட்டுள்ளார்.

விஜய் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.. இயக்குனர் லோகேஷ் கனகராஜன் இயக்கம் மிகவும் அருமை. அனிருத்தின் பின்னணி இசை சூப்பர்.. LCU வில் லியோ படம் சூப்பர்.. அன்பறிவ்வின் ஆக்சன் அசத்தல்.. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

Udhayanidhi review about Leo movie and wishes Vijay

1990s கதைக்களத்தில் காதலிக்கும் சசிகுமார் & லிஜோ மோல்

1990s கதைக்களத்தில் காதலிக்கும் சசிகுமார் & லிஜோ மோல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijayaganapathy’s Pictures சார்பில் பாண்டியன் பரசுராம் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஷ் நடிப்பில், கழுகு புகழ் சத்யசிவா இயக்கத்தில் உருவாகும் புதிய திரில்லர் டிராமா திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

1990களில் நடந்த உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தின் தலைப்பினை விரைவில் படக்குழு அறிவிக்கவுள்ளது.

‘கழுகு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா 90களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார். விறுவிறுப்பான திரில்லர் டிரமாவாக இப்படம் உருவாகிறது.

1990 கால கடத்தில் நடக்கும் கதை என்பதால் அந்த கால கட்டத்தைத் திரையில் கச்சிதமாகக் கொண்டுவரப் படக்குழு கடுமையாக உழைத்து வருகிறது. 90 களின் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் மிகப்பெரும் பொருட்செலவில் ஒரு பிரம்மாண்டமான செட் அமைத்துப் படத்தின் காட்சிகளைப் படக்குழு படமாக்கி வருகிறது.

இயக்குநர் நடிகர் சசிக்குமார் இப்படத்தில் நாயகனாக, மாறுபட்ட வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார். ஜெய்பீம் படத்தில் கவனம் ஈர்த்த லிஜோமோல் ஜோஸ் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

பாலிவுட் படங்களில் மிரட்டும் சுதேவ் நாயர் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் பருத்திவீரன் சரவணன், கேஜிஎஃப் மாளவிகா, போஸ்வெங்கட், மு ராமசாமி, ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தமிழில் பல பிரமாண்ட படங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றிய பாண்டியன் பரசுராம், முதல் முறையாக Vijayaganapathy’s Pictures சார்பில் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படத்தினைத் தயாரிக்கிறார்.

இன்னும் தலைப்பிடப்படாத இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் தலைப்பு, டீசர் , டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில்நுட்ப குழு விபரம்

தயாரிப்பு நிறுவனம் – Vijayaganapathy’s Pictures
தயாரிப்பாளர் – பாண்டியன் பரசுராம்
இயக்கம் – சத்ய சிவா
இசை – ஜிப்ரான்
ஒளிப்பதிவு – NS உதயகுமார்
எடிட்டர் – ஶ்ரீகாந்த் NB

Sasikumar teams up with director Sathya Siva for a thriller drama

மோகினிப்பட்டி என்ற கிராமத்து சாபம்.; SAC நடித்த ஃபேண்டஸி த்ரில்லர்

மோகினிப்பட்டி என்ற கிராமத்து சாபம்.; SAC நடித்த ஃபேண்டஸி த்ரில்லர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் உதவி இயக்குநர் ஜெயவீரன் காமராஜ் இயக்கும் ‘மோகினிப் பட்டி’ என்ற படத்தில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரன் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். இது ஒரு பேண்டஸி திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது.

பண்ருட்டிக்காரரான இயக்குநர் ஜெயவீரன் காமராஜ், அடிப்படையில் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர்.

ஒரு பிலிம் அகாடமியில் சினிமா சார்ந்த படிப்பை முடித்துவிட்டு இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். மனமெங்கும் அவள் ஞாபகம், அறியாமை ,நீரின்றி அமையாது உலகு போன்ற சுமார் பத்து குறும்படங்கள், இசை ஆல்பங்கள் என்று இயக்கியவர்.

படம் பற்றி இயக்குநர் ஜெய வீரன் காமராஜ் பேசும்போது…

“மோகினிப்பட்டி என்பது கற்பனையாக
உருவாக்கப்பட்ட ஒரு கிராமம். அந்த ஊரில் ஒரு சாபம் உள்ளது. அதை அந்த ஊர்க்காரர்கள் மட்டுமே அறிவார்கள். அதை முன்னிட்டு அவர்களிடம் ஒரு ரகசியக் கட்டுப்பாடு உள்ளது.

அதன்படி அங்கு யாரும் காதலித்து திருமணம் செய்ய முடியாது. இப்படிப்பட்ட சூழலில் அங்கு நாயகனும் நாயகியும் காதலிக்கிறார்கள். ஊர்க் கட்டுப்பாடு குறுக்கே நிற்கிறது. அவர்கள் அந்தச் சாபத்தை எப்படி எதிர்கொண்டார்கள்? அந்த ஊர்ச் சம்பிரதாயத்தைச் சமாளித்தார்களா? வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா என்பது தான் படத்தின் கதை ”
என்று படத்தைப் பற்றி இயக்குநர் ஜெயவீரன் கூறுகிறார்.

அவர் மேலும் கூறும்போது,

“இந்தக் காலத்தில் இப்படி ஒரு கதையா என்று நினைக்கலாம். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஊருக்குள்ளும் பிறருக்குத் தெரியாத ரகசியங்கள் மறைந்து கொண்டுள்ளன. அப்படி ஒரு ரகசியத்தை வைத்துதான் இப்படி ஒரு படமாக உருவாக்கி இருக்கிறோம்” என்று கூறுகிறார் .

மோகினிப்பட்டி

முறையான கதையையும் நடிப்புக் கலைஞர்களின் திறமையான நடிப்பையும் நம்பி சிறிய பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகி உள்ளதாகக் கூறும் இயக்குநர், இப்படத்திற்கு எஸ். ஏ. சந்திரசேகரன் நடிப்பதற்குக் கொடுத்த ஒத்துழைப்பைப் பற்றி வியந்து மகிழ்ந்து கூறுகிறார்.

” ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரான எனக்கு சின்ன வயதிலிருந்து சினிமா மீது ஆர்வம் உண்டு .சின்னச் சின்னதாகக் கதைகள் அமைத்துப் பார்ப்பேன். ஆனால் இப்போது அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும்.

இப்படிப்பட்ட சூழலில் நான் ஃபிலிம்அகாடமி ஒன்றில் சேர்ந்து படித்தேன். அங்கு சினிமாவில் இயக்கம், ஒளிப்பதிவு ,எடிட்டிங் என அனைத்தையும் பற்றிய ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. எனக்கு இயக்கம் மட்டுமல்ல ஒளிப்பதிவு செய்யவும் எடிட்டிங் செய்யவும் தெரியும் என்கிற நம்பிக்கை அங்கு கற்ற பிறகுதான் வந்தது. அதன்படியே நான் இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் என்று எல்லாமும் செய்து கொண்டிருக்கிறேன்.

அகாடமி படிப்புக்குப் பிறகு நான் எஸ். ஏ .சந்திரசேகர் அவர்களிடம் ஒரு பைலட் பிலிமில் உதவி இயக்குநராகப் பணி புரிந்தேன். அதன் பிறகு அவர் சமுத்திரக்கனியை வைத்து இயக்கிய
‘நான் கடவுள் இல்லை ‘ என்ற
படத்திலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன்.

அப்போதெல்லாம் அவரிடம் ஏராளம் கற்றுக் கொண்டேன். அவர் மிகவும் கண்டிப்பானவர், கோபக்காரர் என்றெல்லாம் சொல்வார்கள்.நெருங்கிப் பார்த்தால் அவர் மிகவும் அன்பானவர். அவர் உதவி இயக்குநர்கள், இணை இயக்குநர்களுக்குச் சமமான மரியாதை கொடுப்பவர். அனைவரிடம் சமமாகப் பகிர்ந்து கொள்வார். சமமாகவும் சொல்லிக் கொடுப்பார்.

சொல் பேச்சு மாறாமல் இருப்பவர்.
சரியான நேரத்தில் எதையும் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்.

இந்தப் படத்திற்கான கதையை எழுதி அதில் ஒரு பாத்திரத்திற்கு அவரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அவர் நடிப்பாரா என்ற சந்தேகமும் தயக்கமும் எனக்கு இருந்தது. அப்படி ஒரு தயக்கத்தோடு தான் அவரிடம் நான் கதை சொன்னேன் .அவர் கதை பிடித்து, அந்தப் பாத்திரமும் பிடித்து ஓகே சொல்லி விட்டார்.

மோகினிப்பட்டி

அவர் இந்தப் படத்திற்கு உள்ளே வந்த பிறகு வேலைகள் மளமளவென ஆரம்பித்தன.ஆனால் அவரை நடிக்க வைக்கும் போது எனக்குப் பதற்றம் இருந்தது. நாம் உயரத்தில் வைத்து இயக்குநராகப் பார்த்த ஒருவரை வைத்து நாம் எப்படி இயக்குவது என்று தயக்கம் எனக்கு இருந்தது. ஆனால் அதை எல்லாம் சகஜம் ஆக்கிவிட்டு அவர் நடித்துக் கொடுத்துவிட்டார்.

சில காட்சிகளில் எனக்கு அதிருப்தி ஏற்பட்ட போது கூட மேலும் சிறப்பாக அடுத்த ஷாட்டில் நடித்துக் கொடுத்து அந்தப் பாத்திரத்தினை மேலும் உயரத்திற்குக் கொண்டு சென்று விட்டார் .

அந்த வகையில் அவரை நடிக்க வைத்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இதன் படப்பிடிப்பு திருச்சி பகுதியில் நடைபெற்றது.குறிப்பாக கல்லுப்புலியான் கோவில், காவேரிப் பாலம், ஏர்போர்ட் அருகே உள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினோம்.

மோகினிப் பட்டி என்பது ஒரு சித்தரிக்கப்பட்ட பேண்டஸி கிராமம் .அந்த ஊரில் தான் இந்தக் கதை நடக்கிறது.திருச்சியில்தான் பெரும்பாலும் எடுத்தோம்.சென்னையில் சில ஷூட்டிங் ஹவுஸ் களிலும் படப்பிடிப்பு நடந்தது.

இந்தப் படத்தில் புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சினிமா தாகத்தோடு உள்ள பலருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம் .

அப்படி சங்கீத் , நிரஞ்சன் சிவசங்கர், தெளபிக்கா, ஜெயஸ்ரீ என்று நடிக்க வைத்தோம். ஒளிப்பதிவு எம்.கே.கமலநாதன், இசை மனோஜ் குமார் பாபு.
ப்ளூ மூன் ஸ்டுடியோ சார்பில் ஜெயபாரதி காமராஜ் தயாரித்துள்ளார். இது
பேண்டஸி திரில்லர் படமாக உருவாகியுள்ளது

வெப்மூவிக்கான படைப்பு சுதந்திரத்தோடு இது உருவாக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய இந்தப் படம் ஒரு நிமிடம் கூட போர் அடிக்காமல் விறுவிறுப்பாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது” என்கிறார் இயக்குநர்.

மோகினிப்பட்டி

SA Chandrasekar starring Mohinipatti movie news updates

‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்துடன் இணையும் மூன்றாவது நாயகி

‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்துடன் இணையும் மூன்றாவது நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பிரியா பவானி சங்கர் இடம்பெறாத படங்களை இல்லை எனும் அளவுக்கு பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

தனுசு உடன் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்திருந்தார். சிம்புவுடன் ‘பத்து தல’, அருண் விஜய்யுடன் ‘யானை’ உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்துடன் பிரியா பவானி சங்கர் இணைவதாக தகவல்கள் வந்துள்ளன.

ஏற்கனவே இந்த படத்தில் திரிஷா மற்றும் ரெஜினா கெசன்ட்ரா ஆகிய இரு நாயகிகள் உள்ள நிலையில் மழ3வது நாயகியாக பிரியா இணைகிறார்.

மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு துபாய் நாட்டில் உள்ள அஜர்பைஜான் என்ற பகுதியில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பிரியா பவானி சங்கர்

Priya Bavani Shankar join with Ajith and Trisha is Vidamuyarchi

More Articles
Follows