தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல பின்னணி பாடகர் பாம்பா பாக்யா திடீர் மரணம். இவருக்கு வயது 49.
ஏஆர். ரஹ்மான் வீட்டு டிரைவர் இல்ல திருமண விழாவில் பாக்யராஜ் ஒரு மேடை கச்சேரியில்… “மயிலிறகே மயிலிறகே…” என்ற பாடலை பாடியுள்ளார்.
அந்த விழாவுக்கு வந்திருந்த ரகுமான் இவரது பாடலை கேட்டு பாக்யராஜை சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
‘இராவணன்’ படத்தில் கெடாகறி என்ற பாடலை முதன்முறையாக இவர் பாடினார்.
இவருக்கு பாம்பா என்ற பெயரிட்டவரும் ரஹ்மான்தான். தென் ஆப்பிரிக்காவில் பிரபலமான பாடகர் ஒருவரின் ஒருவரால் கவரப்பட்ட ரகுமான் அவருக்கு இந்த பெயரை சூட்டினாராம்.
பாம்பா பாக்யாவின் இயற்பெயர் பாக்கியராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சினிமாவில் பாடுவதற்கு முன்பு பல மேடை கச்சேரிகளில் பாடியிருக்கிறார்.
முக்கியமாக தேனிசைத் தென்றல் தேவாவின் இசை கச்சேரியில் இவர் முக்கிய நபராக இடம் பெற்றிருந்தார். அதன் பின்னர் விஜய் ஆண்டனி ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டவர்களும் கச்சேரிகளிலும் இவர் பாடியிருக்கிறார்.
இவர் தலைப்பாகை அணிந்தபடி தான் சமீப காலமாக காணப்பட்டார். அதற்கு முக்கிய காரணம் ஏ ஆர் ரகுமான் தான்.
அவர் சொன்னதன் பெயரில் தான் இந்த தோற்றத்தில் அவர் காட்சியளித்து வந்தார்.
சந்தோஷம் தயாநிதி இசையமைத்த ராட்டி என்ற ஆல்பத்தில் “ஏண்டி உன்ன பார்த்தேன்னு நினைக்க வைக்கிறியே…” என்ற பாடல் மிக பிரபலம் ஆனது.
ரஜினி நடித்த எந்திரன் படத்தில்.. “இவன் பேர் சொல்லும்… எந்திரா எந்திரா..” என்ற பாடலை இவர் பாடியிருக்கிறார்.
அதனை தொடர்ந்து ஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் “புள்ளினங்காள்…” என்ற பாடலையும் இவர் பாடியிருக்கிறார்.
விஜய்யின் ‘சர்க்கார்’ படத்தில் இடம்பெற்ற “சிம்டங்காரன்….” பாடலையும் பாடியவர் இவரே. பிகில் படத்திலும் பாடியிருக்கிறார்.
விரைவில் வெளியாக உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இடம்பெற்ற ‘பொன்னி நதி…..’ என தொடங்கும் பாடல் ஆரம்ப வரிகளை இவர் பாடியிருக்கிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
Play back Singer Bamba Bakya is no more
RIP singer #BambaBakya .. He is known for his beautiful and unique voice.
Raati, Pullinangal, Simtaangatan and the starting bit of Ponni Nadhi will always be special!