பீர் அடிப்பவர்களே பீத்தி கொள்ளாதீங்க.; கலாபவன்மணி மரண ரிப்போர்ட்டை படிச்சு திருந்துங்க

பீர் அடிப்பவர்களே பீத்தி கொள்ளாதீங்க.; கலாபவன்மணி மரண ரிப்போர்ட்டை படிச்சு திருந்துங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நான்கு நண்பர்கள் கூடிவிட்டால் அதில் ஒருவர் குடிப்பழக்கம் இல்லாதவர் என்றால் அவரை கேலி செய்யும் பல நண்பர்களை பார்த்து இருக்கிறோம்..

பீர் கூட குடிக்காத நீ எதற்காக உயிரோடு இருக்கிறாய்.? என கிண்டல் பேச்சுகளும் ஏராளம்.. பீர் அடிப்பது கெத்து என பீத்திக் கொள்ளும் பல 2K கிட்ஸை கூட பார்த்து வருகிறோம்.

பீர் எல்லாம் இப்போது குடிநீர் போல அதில் ஒன்றுமே இருக்காது என்ற பேச்சுக்கள் இளைஞர்கள் மத்தியில் பிரபலம்.. எனவே தான் பள்ளி மாணவிகளும் பீர் அடிக்க தொடங்கிவிட்டனர்.

பீர் அடிக்காத நீ எல்லாம் எங்களுடன் சேராதே என தோழனை கூட கழட்டி விட்டு பல நண்பர்கள் கூட்டத்தை நாம் பார்த்து இருக்கிறோம்..

BEER பீர் அடித்து அடித்து ஒரு பிரபல நடிகர் தன் உயிரை மாய்த்து மரண அடைந்த செய்திதான் இது. ( கிட்டத்தட்ட இதுவும் ஒரு தற்கொலை.. சிறு சிறு துளிகள் பெரு வெள்ளமாக மாறி அவரை உயிரைக் குடித்து விட்டது.)

மலையாளத்தில் மிக பிரபலமான நடிகர் கலாபவன் மணி. இவர் ஒரு மிமிக்ரி கலைஞரும் கூட. மலையாளத்தில் பிரபலமானதை தொடர்ந்து மற்ற மாநில மொழி படங்களிலும் இவருக்கு ஏராளமான வாய்ப்புகள் வந்தன.

தமிழில் ‘ஜெமினி’, ‛மறுமலர்ச்சி’, மழை, ஜே.ஜே, உனக்கும் எனக்கும், குத்து, எந்திரன் உள்ளிட்ட பல படங்களின் நடித்திருக்கிறார்.

மலையாளத்தில் இவர் கண் தெரியாதவராக நடித்திருந்த படத்தை தான் தமிழில் விக்ரம் நடிப்பில் ‘காசி’ என்ற படமாக உருவாகி இருந்தனர். அதன் பின்னர் தான் ‘ஜெமினி’ படத்தில் விக்ரம் மற்றும் கலாபவன் மணி இணைந்து நடித்திருந்தனர்.

இவர் தேசிய விருதையும், கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருதினையும் பெற்று இருக்கிறார்.

கடந்த 2016-ம் ஆண்டு திருச்சூர் , சாலக்குடியில் அவரது பண்ணை வீட்டில் ரத்த வாந்தி எடுத்த நிலையில் இறந்து கிடந்தார்.

பரிசோதனைக்கு பின் அவர் உடலில் மெத்தில் மற்றும் எத்தில் ஆல்கஹால் இருந்ததாகவும், க்ளோரோபைரபோஸ் என்ற கிருமிநாசினி இருந்ததாகவும் அப்போதே கூறப்பட்டது.

ஆனால் இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் தெரிவிக்கவே இது பெரும் சர்ச்சையானது.

பின்னர் சிபிஐ விசாரிக்க கோரி கடந்த 2017ஆம் ஆண்டு உறவினர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இதனையடுத்து கேரள உயர் நீதிமன்றம் சிபிஐ விசாணைக்கு உத்தரவிட்டது. இரண்டு வருட விசாரணைக்கு பின் கொச்சி நீதிமன்றத்தில் கலாபவன் மணி கல்லீரல் பாதிப்பால் தான் மரணமடைந்தார் என 2019-ம் ஆண்டு டிசம்பரில் அறிக்கை தாக்கல் செய்நப்பட்டது.

இந்த நிலையில் கேரளா ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் நடிகர் கலாபவன் மரணம் தற்போது கூறியதாவது…

கலாபவன் மணி பீர் குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்.
ஒரு நாளைக்கு 12 பீர் குடிக்கும் பழக்கம் கொண்டவர் கலாபவன் மணி. இறந்த அன்றும் கூட 12 பாட்டில் பீர் குடித்து இருந்தார்.

கல்லீரல் பாதிக்கப்பட்டும் மணி பீர் குடிக்கும் பழக்கத்தை விடவில்லை. பீரில் இருந்த மெத்தில் ஆல்கஹால் அவரது உடலில் அதிகளவு சேர்ந்துவிட்டது. (மெத்தில் ஆல்கஹால் என்பது டர்பெண்டெயின், பெயிண்ட் அகற்ற பயன்படுத்தக் கூடிய வேதிப்பொருள் ஆகும்).

இதுவே அவர் மரணத்திற்கு விஷம் ஆகிவிட்டது” என தெரிவித்திருக்கிறார் உன்னிராஜன்.

Beer became poison in Actor Kalabhavan Mani death

சிசிடிவி கோணத்தில் முதன்முறையாக ஒரே லென்ஸில் படமாக்கப்பட்ட ‘கேப்சர்’

சிசிடிவி கோணத்தில் முதன்முறையாக ஒரே லென்ஸில் படமாக்கப்பட்ட ‘கேப்சர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னட சூப்பர்ஸ்டார் உபேந்திராவின் மனைவி பிரியங்கா, உலகிலேயே முதன்முறையாக முழுவதுமாக சிசிடிவி கேமராவின் கோணத்தில் படமாக்கப்பட்ட ஒரு தனித்துவமான பரிசோதனை முயற்சியிலான ஒரு படத்துடன் தயாராகி வருகிறார்.

அதுமட்டுமல்ல உலகிலேயே ஒரே லென்ஸை மட்டுமே பயன்படுத்தி படமாக்கப்பட்ட அரிதான படங்களில் ஒன்றும் கூட. நாவல்களை படமாக்குவதற்காக பெயர்பெற்ற இயக்குனர் லோஹித்.ஹெச் இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் மம்மி மற்றும் தேவகி ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக பிரியங்காவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.

ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரடக்சன்ஸ் சார்பில் ரவி ராஜ், ஷாமிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப்படத்தை தயாரித்துள்ளார். ராதிகா குமாரசாமி CAPTURE இந்தப்படத்தை வழங்குகிறார்.

இந்தப்படம் முழுவதும் கோவாவில் 30 நாட்களில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகும் விதமாக தயாராகி வருகிறது.

இதற்கிடையே சுற்றிலும் பல சிசிடிவி கேமராக்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் பிரியங்கா உபேந்திரா, முகம் முழுவதும் மிகுந்த ரத்தக்காயங்களுடன் காணப்படும் ஒரு புதிய போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு கேமராவின் மீது ஒரு காகம் அமர்ந்திருப்பதையும் இந்த போஸ்டரில் நாம் பார்க்க முடிகிறது.

பிரியங்காவின் புன்னகை மற்றும் சந்தேகத்திற்கிடமான முகம் நம்மிடையே படம் குறித்து அதிகம் தெரிந்துகொள்ளும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இப்படி பதட்டம் ஏற்படுத்தும் போஸ்டர் இந்தப்படம் எதைப்பற்றியது என அறிந்துகொள்ளும் ஆவலை நம்மிடம் உருவாக்குகிறது..

சிவராஜ்குமாரின் டகரு படத்தின் மூலம் புகழ்பெற்ற மன்விதா காமத் இந்தப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றாக நடித்துள்ளார்.

மாஸ்டர் கிருஷ்ணராஜ் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் அறிமுகமாகிறார். பாண்டிக்குமார் ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை ரவிச்சந்திரன் மேற்கொள்கிறார்.

Priyanka Upendras Birthday Special Poster From Capture movie Unleashed

முதன்முறையாக பெண் அகோரா பற்றிய ‘பைராதேவி’.; ராதிகா பிறந்தநாளில் டீசர்

முதன்முறையாக பெண் அகோரா பற்றிய ‘பைராதேவி’.; ராதிகா பிறந்தநாளில் டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல கன்னட நடிகையும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவியுமான ராதிகா குமாரசாமி என்கிற குட்டி ராதிகா தற்போது நடித்துவரும் ‘பைராதேவி’ என்ற படத்தில் அகோரா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு டீசரை வெளியிட்டுள்ளனர்.

பைராதேவி என்ற டைட்டில் கதாபாத்திரத்தில் ஒரு பெண் அகோராவாக நடித்துள்ள ராதிகா குமாரசாமியை இந்த டீசர் அறிமுகப்படுத்துகிறது.

பல அகோராக்களுடன் சேர்ந்து ஒரு இறந்த உடலின் தலைப்பக்கம் அமர்ந்து ராதிகா குமாரசாமி தாந்த்ரீக பூஜை செய்வது போல இந்த டீசரின் வீடியோ துவங்குகிறது. அதன்பிறகு ஒரு ரவுடி கும்பலால் தாக்கப்பட்ட ஒரு பெண்ணை காப்பாற்ற முயற்சிக்கிறார். டிரைலர் நிஜமாகவே சிலிர்க்கவைக்கும் விதமாக இருப்பதுடன் ராதிகாவும் அகோரா கதாபாத்திரத்தில் வியப்பை ஏற்படுத்துகிறார்.

ஒரு பெண் அகோராவை பற்றிய கதையம்சத்துடன் இந்திய சினிமாவிலேயே உருவாகும் முதல் படம் இது என்பது முற்றிலும் உண்மை. சீனியர் நடிகரான ரமேஷ் அரவிந்த்தையும் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்துகிறது இந்த டீசர்

இதில் நாயகியாக நடிப்பதுடன் படத்தையும் தானே தயாரிக்கிறார் ராதிகா குமாரசாமி. இயக்குநர் ஸ்ரீ ஜெய் கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி இப்படத்தை இயக்குகிறார்.

நிர்வாக தயாரிப்பாளர்களாக ரவிராஜ் மற்றும் யாதவ் ஆகியோர் இருக்கின்றனர். ரங்காயன ராஜூ, ரவிசங்கர் (பொம்மலி), ஸ்கந்தா அசோக், அனு முகர்ஜி, மாளவிகா அவினாஷ் மற்றும் சுசித்ரா பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

JS வாலி இந்தப்படத்தின் ஒளிப்பதிவை கையாள, கே.கே.செந்தில் பிரசாத் இசையமைக்கிறார். படத்தொகுப்பை C.ரவிச்சந்திரனும் சண்டைக்காட்சிகளை K.ரவிவர்மாவும் கவனிக்கின்றனர்.

நடனத்தை மோகனும் கலை இயக்கத்தை மோகன் B கெரேவும் கவனிக்கின்றனர். தெலுங்கு பாடல் வரிகளை ராமா ஜோகய்யா சாஸ்திரி மற்றும் ஸ்ரீ ஜெய்யும் தமிழ் பாடல் வரிகளை தாமரை மற்றும் ஸ்ரீ ஜெய் ஆகியோரும் எழுதியுள்ளனர்

வாரணாசி, காசி, ஹரித்துவார், ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பைரதேவி படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

Kutty Radhika and Ramesh Aravind starrer Bhairadevi Teaser Launched

முன்னாள் முதல்வர் மனைவி குட்டி ராதிகாவின் ‘அஜாக்ரதா’..; பாலிவுட் நடிகருடன் கூட்டணி

முன்னாள் முதல்வர் மனைவி குட்டி ராதிகாவின் ‘அஜாக்ரதா’..; பாலிவுட் நடிகருடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல கன்னட நடிகையும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவியுமான குட்டி ராதிகா என அழைக்கப்படும் ராதிகா குமாரசாமி, கர்நாடாகவிலேயே சூப்பர் ஹிட் பட தயாரிப்பு நிறுவனம் என பெயரெடுத்த ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரடக்சன் தயாரிக்கும் ‘அஜாக்ரதா’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

ரவிராஜ் தயாரிப்பில் உருவாகும் இந்தப்படத்தை இயக்கவுள்ள இயக்குநர் சசிதர் மிக பிரமாண்டமாக உருவாக்க முடிவு செய்துள்ளார். அதற்கேற்றபடி மிகப்பெரிய அளவில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அஜாக்ரதா

ராதிகா குமாரசாமியின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தும் விதமாக ராதிகாவின் கதாபாத்திர போஸ்டரை ஹிந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சிவப்பு நிற பட்டுப்புடவையில் மிகுந்த ஆபரணங்களுடன் அதிரடியாக காட்சியளிக்கிறார் ராதிகா. அவர் பின்னால் பல தீபங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது.

அவருடைய பிறந்தநாளுக்கு மட்டுமல்லாமல் தீபாவளிக்கும் சேர்த்து இது ஒரு பொருத்தமான போஸ்டர் தான்.

அஜாக்ரதா

‘தி ஷேடோஸ் பிஹைன்ட் தி கர்மா’ என்பதுதான் இந்தப்படத்தின் டேக்லைன். பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் இந்தப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடிக்க உள்ளார். விரைவில் அவரது பெயர் அறிவிக்கப்படும்.

ஆக்சன் த்ரில்லராக உருவாக உள்ள இந்தப்படத்தில் ஸ்ரேயாஸ் தல்பேட் முக்கிய பங்காக இருக்கிறார்.

மேலும் சுனில், ராவ் ரமேஷ், ஆதித்யா மேனன், தேவராஜ், வினய் பிரசாத், ஷ்ரவன் மற்றும் பல தென்னிந்திய நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

அஜாக்ரதா

Ex CM wife Radhikas Pan India Film Ajagratha Character Unveiled

தீபாவளியில் ‘லால் சலாம்’ டீசர்.. பொங்கலுக்கு ரிலீஸ்.; மத அரசியலைப் பேசும் ரஜினி

தீபாவளியில் ‘லால் சலாம்’ டீசர்.. பொங்கலுக்கு ரிலீஸ்.; மத அரசியலைப் பேசும் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடித்து உள்ள படம் ‘லால் சலாம்’.

லைக்கா நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் தம்பி ராமையா, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் நவம்பர் 12 தீபாவளி விருந்தாக ‘லால் சலாம்’ படத்தின் டீசர் வெளியானது.

கிரிக்கெட் போட்டி மத மோதலாக உருவாகி பெரும் கலவரம் வெடிப்பதுடன் இந்த டீசர் தொடங்குகிறது.

இந்த டீசரில் மொய்தீன்பாய் கேரக்டரில் ரஜினி பேசும் வசனங்கள் பட்டையை கிளப்புகின்றன..

“விளையாட்டுல மதத்தை கலந்துருக்கீங்க… குழந்தைகள் மனசுல விஷத்தை விதைச்சுருக்கீங்க… தப்பு..” என்கிறார்.

2024 பொங்கல் தினத்தில் லால் சலாம் படம் வெளியாகிறது. இதன் வெளியிட்டு உரிமையை உதயநிதியின் ரெட்ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Aishwarya Rajinis Lal Salaam teaser goes viral

சைலன்டாக வந்த ‘சைரன்’ டீசர்.; கைதியாக ஜெயம்ரவி.. போலீஸாக கீர்த்தி சுரேஷ்

சைலன்டாக வந்த ‘சைரன்’ டீசர்.; கைதியாக ஜெயம்ரவி.. போலீஸாக கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்திருக்கும் படம் ‘சைரன்’.

இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ், அனுபமா, சாந்தினி ஆகியோர் நடிக்க யோகிபாபு, சமுத்திரகனி, அழகம் பெருமாள் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார்.

காஞ்சிபுரத்தை கதைக்களமாகக் கொண்ட இந்த படம் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.

நாயகன் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பாக மிகப்பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்.

அரசியல், ஆம்புலன்ஸ் சேவைகளை கலந்து ஆக்சன் திரில்லராக இந்த படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் தீபாவளி விருந்தாக சைரன் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

ஜெயம் ரவி ஜெயில் கைதியாக நடிக்க போலீஸ் அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

பிக் பாஸ் 7 சீசனில் இந்த டீசர் வெளியிடப்பட்டது. 14 வருட சிறை தண்டனைக்கு பிறகு பரோலில் வரும் ஒரு கைதியின் கதை இது என்பது டீசரில் தெளிவாக தெரிகிறது.

விறுவிறுப்பாக செல்லும் இந்த டீசரில் ஜெயம் ரவியின் குரலும் கீர்த்தி சுரேஷின் குரலும் பின்னணியில் ஒலிக்கிறது.

டிசம்பர் மாதத்தில் ‘சைரன்’ படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Jayam Ravi and Keerthy Suresh starrer Siren teaser

More Articles
Follows