தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நான்கு நண்பர்கள் கூடிவிட்டால் அதில் ஒருவர் குடிப்பழக்கம் இல்லாதவர் என்றால் அவரை கேலி செய்யும் பல நண்பர்களை பார்த்து இருக்கிறோம்..
பீர் கூட குடிக்காத நீ எதற்காக உயிரோடு இருக்கிறாய்.? என கிண்டல் பேச்சுகளும் ஏராளம்.. பீர் அடிப்பது கெத்து என பீத்திக் கொள்ளும் பல 2K கிட்ஸை கூட பார்த்து வருகிறோம்.
பீர் எல்லாம் இப்போது குடிநீர் போல அதில் ஒன்றுமே இருக்காது என்ற பேச்சுக்கள் இளைஞர்கள் மத்தியில் பிரபலம்.. எனவே தான் பள்ளி மாணவிகளும் பீர் அடிக்க தொடங்கிவிட்டனர்.
பீர் அடிக்காத நீ எல்லாம் எங்களுடன் சேராதே என தோழனை கூட கழட்டி விட்டு பல நண்பர்கள் கூட்டத்தை நாம் பார்த்து இருக்கிறோம்..
BEER பீர் அடித்து அடித்து ஒரு பிரபல நடிகர் தன் உயிரை மாய்த்து மரண அடைந்த செய்திதான் இது. ( கிட்டத்தட்ட இதுவும் ஒரு தற்கொலை.. சிறு சிறு துளிகள் பெரு வெள்ளமாக மாறி அவரை உயிரைக் குடித்து விட்டது.)
மலையாளத்தில் மிக பிரபலமான நடிகர் கலாபவன் மணி. இவர் ஒரு மிமிக்ரி கலைஞரும் கூட. மலையாளத்தில் பிரபலமானதை தொடர்ந்து மற்ற மாநில மொழி படங்களிலும் இவருக்கு ஏராளமான வாய்ப்புகள் வந்தன.
தமிழில் ‘ஜெமினி’, ‛மறுமலர்ச்சி’, மழை, ஜே.ஜே, உனக்கும் எனக்கும், குத்து, எந்திரன் உள்ளிட்ட பல படங்களின் நடித்திருக்கிறார்.
மலையாளத்தில் இவர் கண் தெரியாதவராக நடித்திருந்த படத்தை தான் தமிழில் விக்ரம் நடிப்பில் ‘காசி’ என்ற படமாக உருவாகி இருந்தனர். அதன் பின்னர் தான் ‘ஜெமினி’ படத்தில் விக்ரம் மற்றும் கலாபவன் மணி இணைந்து நடித்திருந்தனர்.
இவர் தேசிய விருதையும், கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருதினையும் பெற்று இருக்கிறார்.
கடந்த 2016-ம் ஆண்டு திருச்சூர் , சாலக்குடியில் அவரது பண்ணை வீட்டில் ரத்த வாந்தி எடுத்த நிலையில் இறந்து கிடந்தார்.
பரிசோதனைக்கு பின் அவர் உடலில் மெத்தில் மற்றும் எத்தில் ஆல்கஹால் இருந்ததாகவும், க்ளோரோபைரபோஸ் என்ற கிருமிநாசினி இருந்ததாகவும் அப்போதே கூறப்பட்டது.
ஆனால் இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் தெரிவிக்கவே இது பெரும் சர்ச்சையானது.
பின்னர் சிபிஐ விசாரிக்க கோரி கடந்த 2017ஆம் ஆண்டு உறவினர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இதனையடுத்து கேரள உயர் நீதிமன்றம் சிபிஐ விசாணைக்கு உத்தரவிட்டது. இரண்டு வருட விசாரணைக்கு பின் கொச்சி நீதிமன்றத்தில் கலாபவன் மணி கல்லீரல் பாதிப்பால் தான் மரணமடைந்தார் என 2019-ம் ஆண்டு டிசம்பரில் அறிக்கை தாக்கல் செய்நப்பட்டது.
இந்த நிலையில் கேரளா ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் நடிகர் கலாபவன் மரணம் தற்போது கூறியதாவது…
கலாபவன் மணி பீர் குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்.
ஒரு நாளைக்கு 12 பீர் குடிக்கும் பழக்கம் கொண்டவர் கலாபவன் மணி. இறந்த அன்றும் கூட 12 பாட்டில் பீர் குடித்து இருந்தார்.
கல்லீரல் பாதிக்கப்பட்டும் மணி பீர் குடிக்கும் பழக்கத்தை விடவில்லை. பீரில் இருந்த மெத்தில் ஆல்கஹால் அவரது உடலில் அதிகளவு சேர்ந்துவிட்டது. (மெத்தில் ஆல்கஹால் என்பது டர்பெண்டெயின், பெயிண்ட் அகற்ற பயன்படுத்தக் கூடிய வேதிப்பொருள் ஆகும்).
இதுவே அவர் மரணத்திற்கு விஷம் ஆகிவிட்டது” என தெரிவித்திருக்கிறார் உன்னிராஜன்.
Beer became poison in Actor Kalabhavan Mani death