தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனிக்கப்படும் நடிகராக வளர்ந்து வருகிறார் விஜய் சேதுபதி.
இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ஷாருக்கானின் ‘ஜவான்’ படம் உலக அளவில் 600 கோடிக்கு மேல் வசூலித்து மக்கள் வரவேற்பை பெற்று வருகிறது.
குறுகிய காலத்தில் 50 படங்களில் நடித்து விட்டார் விஜய்சேதுபதி. இவரது 50வது படமாக நித்திலன் இயக்கத்தில் மகாராஜா என்ற படம் உருவாகியுள்ளது.
விஜய்சேதுபதி ஏற்கனவே ஹிந்தியில் நடித்துள்ள ‘மெரி கிறிஸ்மஸ்’ படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் விஜய் சேதுபதியின் புதிய பட தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை மிஷ்கின் இயக்க ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
விஜய்சேதுபதியின் டிஎஸ்பி படத்தில் இசை விழாவில் சிறப்பு விருந்தினராக மிஷ்கின் பங்கேற்று பேசும்போது.. “என்னுடைய இயக்கத்தில் நடிக்க சான்ஸ் கேட்டு வந்திருந்தார் விஜய்சேதுபதி அப்போது அவரை நிராகரித்து விட்டேன். இப்போது அவர் பெரும் நடிகராக வளர்ந்து இருக்கிறார். விரைவில் அவரை வைத்து படம் இயக்குவேன் என்று மிஷ்கின் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் மிஷ்கின் படங்களுக்கு இளையராஜாவை இசை அமைத்து வருகிறார். தற்போது ஏ ஆர் ரகுமான் இசையமைக்க ஒப்பு கொண்டு உள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
Mysskin VIjaysethupathi Rahman in new project