தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வினோத் இயக்கத்தில் கார்த்தி-ரகுல் பிரித்தி சிங் நடிப்பில் உருவான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் கடந்த நவம்பர் 17ஆம் தேதி வெளியானது.
விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவுடன் இப்படம் தற்போது வரை அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
எனவே படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் நாயகி ரகுல் பிரித்தி சிங் தவிர மற்ற கலைஞர்கள் கலந்துக் கொண்டனர்.
இச்சந்திப்பில் கார்த்தி தன் பட அனுபவங்களை பகிர்ந்தார். அப்போது அவர் பேசியதாவது…
எனக்கு ரொமான்ஸ் வராது என பலரும் சொல்வார்கள். ஆனால் இந்த படத்தில் ரகுல் பிரித்தியுடன் காதல் காட்சிகள் நன்றாக இருந்தது என்றார்கள்.
ஒரு 55 வயது மிக்கவர் என்னுடன் பேசும்போது வீட்டிற்கு போவேன். பிள்ளைகள் கேட்டதை வாங்கி கொடுப்போன். ஆனால் வேலை காரணமாக என் மனைவியுடன் ரொமான்ஸ் செய்யவில்லை. இந்த படத்தை பார்த்தபோது மனதில் அது பட்டது என்றார்.
இதற்கு முன் சிறுத்தை படத்தில் நான் ரத்னவேல் பாண்டியன் என்ற போலீஸ் வேடத்தில் நடித்திருந்தேன். அது மாஸ் காட்டும் போலீஸ்.
எனவே என் ரசிகர்களுக்கு தீரன் போன்ற போலீஸை பிடிக்கவில்லை” என்றனர்.
My fans dont like Theeran police says Karthi