தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தூத்துக்குடி கோவில்பட்டியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துக கொண்டார்.
அப்போது அவரிடம் ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் தர்பார் படம் சிறப்பு காட்சி குறித்து, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
ரஜினி நடித்துள்ள தர்பார் படம் வரும் 9ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் சிறப்பு காட்சி திரையரங்குகளில் காட்டப்படும். அதற்கான அனுமதி வேண்டும் என கேட்டு இதுவரை தயாரிப்பு நிறுவனம் சார்பில் யாரும் அணுகவில்லை.
அப்படி அணுகினால், அதற்குரிய பரிசீலனைக்குப் பின், முதல்வர் ஒப்புதலோடு அனுமதி வழங்கப்படும்.
அரசு அனுமதி வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை என்றார்.
இது ரஜினி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஏன் தர்பார் தயாரிப்பு நிறுவனம் லைகா அனுமதி கேட்டு அரசை அணுகவில்லை என கேட்டு வருகின்றனர்.