நிவின் பாலி – அஞ்சலி – சூரி இணைந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

நிவின் பாலி – அஞ்சலி – சூரி இணைந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள நடிகர் நிவின் பாலி தற்போது ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க, சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘மாநாடு’ படத்தின் மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து சுரேஷ் காமாட்சி தனது ‘வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டப்பிங் பணிகள் முடிந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி டப்பிங் பேசும் வீடியோ படக்குழு தற்போது வெளியிட்டு அறிவித்துள்ளது.

நிவின் பாலி - அஞ்சலி - சூரி

‘Yezhu kadal yezhu malai’ movie team complete dubbing work

BREAKING சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த மாமுக்கோயா மரணம்.; வாழ்க்கை குறிப்பு..

BREAKING சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த மாமுக்கோயா மரணம்.; வாழ்க்கை குறிப்பு..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் மாமுக்கோயா.

இவருக்கு வயது தற்போது 77 ஆகிறது.

மலையாள சினிமாவில் மட்டும் கிட்டத்தட்ட 450 படங்களுக்கு மேல் காமெடியனாகவும் குணச்சித்திர கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர்.

சமீபத்தில் மலப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று ஏப்ரல் 26 உயிரிழந்தார்.

இவரது மரணம் மலையாளிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரையரங்கினரும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மாமுக்கோயா பற்றி சில தகவல்கள்…

45 வருடங்களாக சினிமாவில் இவர் நடித்து வருகிறார். இவர் பேசும் மலபார் மொழி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

இவர் பிரபல நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால், ஜெயராம் உள்ளிட்ட பல கலைஞர்களுடன் இவர் நடித்துள்ளார்.

இவர் நிறைய மலையாள படங்களில் டீக்கடை நடத்துபவராக நடித்துள்ளார். ஆனாலும் தன் நடிப்பால் ரசிகர்களை இவர் கவர்ந்திருந்தார்.

இவரது மனைவி பெயர் சுகாரா. இந்த தம்பதியருக்கு நான்கு பிள்ளைகள் (Muhammed Nisar, Shahitha, Nadiya and Abdul Rasheed.) உள்ளனர்.

முதலில் நாடகங்களில் நடித்து வந்த இவர் 1979 ஆம் ஆண்டு முதன்முறையாக சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

காந்திநகர் செகண்ட் ஸ்ட்ரீட், மின்னல் முரளி, உஸ்தாத் ஹோட்டல், நாடோடி காற்று உள்ளிட்ட பல படங்கள் இவரது பெயரைச் சொல்லும்.

‘Pattanapravesham’, ‘Unnikale Oru Kadha Parayam’, ‘Vadakkunokkiyantram’, ‘Kireedam’, ‘Oppam’, ‘Sandesham’, ‘Chenkol’, ‘Sharjah To Sharjah’, ‘Vettam’, ‘Sreedharante Onnam Thirumurivu’, ‘Currency’, ‘Oru Marubhoomi Kadha,’ ‘Indian Rupee,’ ‘Kuruthi’, ‘Theerppu’ உள்ளிட்ட படங்களும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.

கேரள அரசின் மாநில விருதை இரண்டு முறை (‘Perumazhakkalam’ – 2004, ‘Innathe Chintha Vishayam’ – 2008) இவர் பெற்றிருக்கிறார்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான படம் ‘சுலைக்கா மஞ்சில்’. மேலும் இவரது நடிப்பில் ( ‘B Nilavarayum Sharjah Palliyum’ and ‘Nancy Rani’) கிட்டத்தட்ட 3-5 படங்கள் தற்போது உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது

Veteran Malayalam actor Mamukkoya 76 passes away in Kerala

ரஜினியுடன் மோதும் சிவகார்த்திகேயன்? ஜெயிக்கப் போவது யாரு?

ரஜினியுடன் மோதும் சிவகார்த்திகேயன்? ஜெயிக்கப் போவது யாரு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் தனது பகுதிகளின் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

இம்மாதத்திற்குள் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என தெரிகிறது.

இதற்கிடையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி சுதந்திர தின வார இறுதியில் ஜெயிலரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது .

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரைக்கு வரும் என சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதிலிருந்து ரஜினியுடன் சிவகார்திகேயன் மோதுவது உறுதியாகிவிட்டது.

யார் இந்த ரேஸில் வெற்றி பெறுவார் என்பது ரிலீசுக்கு பிறகு தெரிய வரும்.

Is Rajinikanth clashing with Sivakarthikeyan at the box office?

கார்த்தி – சிவகார்த்திகேயனை அடுத்து அதிதி ஷங்கரின் 3வது ஹீரோ இவரா.?

கார்த்தி – சிவகார்த்திகேயனை அடுத்து அதிதி ஷங்கரின் 3வது ஹீரோ இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘விருமன்’ படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியானார்.

தற்போது நிறைய விளம்பர படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அதிதி ஷங்கரின் அடுத்த பட ஹீரோ யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இவரது அடுத்த பட நாயகன் விஷ்ணு விஷால் என தெரியவந்துள்ளது.

‘முண்டாசுப்பட்டி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராம்குமார் & விஷ்ணு விஷால் இணைந்த படம் ‘ராட்சசன்’.

ராம்குமார் – விஷ்ணு கூட்டணி 3வது முறையாக மீண்டும் தற்போது இணைந்துள்ளனர்.

இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர்.

இந்த படத்தில்தான் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.

Is he Aditi Shankar’s 3rd hero after Karthi , Sivakarthikeyan?

சூர்யா – தனுஷ் – சிவகார்த்திகேயன் – ஜெயம் ரவி வரிசையில் அசோக் செல்வன்

சூர்யா – தனுஷ் – சிவகார்த்திகேயன் – ஜெயம் ரவி வரிசையில் அசோக் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என்னடா.! இது இப்படி ஒரு தலைப்பா? அப்படின்னு உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்.. சரி விடுங்க சந்தேகத்தை கிளியர் பண்ணிடுவோம்.

இவங்க எல்லாருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.. என்னனு கேட்டீங்கன்னா.. எல்லாருமே 30 – 35 வயதை கடந்த ஹீரோக்கள் தான்.

அப்படி இருந்தாலும் இவங்க எல்லாரும் இப்ப கூட ஸ்கூல் பையனா நடிக்கிறதுக்கு ரெடியா இருக்காங்க..

அந்த அளவுக்கு தங்களுடைய உடலை இளைத்து ஒரு பள்ளி மாணவன் தோற்றத்தில் நடிக்கவும் தயாராக இருந்தவர்கள் தான் இவர்கள்.

(96 என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு பள்ளி மாணவன் கேரக்டர் இருந்தாலும் அதில் வேறு ஒரு நபர் தான் நடித்திருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.)

‘வாரணம் ஆயிரம்’ படத்தில் பள்ளி மாணவன் போல 20 வயது இளைஞனாக நடித்திருந்தார் சூர்யா.

அதுபோல 3 படத்தில் தனுஷ்.. ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயன்.. ‘கோமாளி’ படத்தில் ஜெயம் ரவி ஆகியோர் பள்ளி மாணவராக நடித்திருந்தார்கள்.

அந்த வரிசையில் தற்போது அசோக் செல்வனும் இணைகிறார்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சபாநாயகன்’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் + டீசர் நேற்று ஏப்ரல் 25ல் வெளியானது.

இந்தப் படத்தை சி எஸ் கார்த்திகேயன் என்பவர் இயக்க அரவிந்த் ஜெயபாலன் ஐயப்பன் ஞானவேல் உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர்

இதில் பள்ளி மாணவனாக அசோக் செல்வன் நடிக்க அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

இவர்களுடன் சாந்தினி, மயில்சாமி, மைக்கேல், தங்கதுரை உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைக்க பாலசுப்பிரமணியம் தினேஷ் புருஷோத்தமன் பிரபு ராகவ் உள்ளிட்டோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

https://www.filmistreet.com/video/saba-nayagan-official-teaser/

Ashok selvan’s SabaNayagan first look and teaser released

நடிகர் விஜய் பிறந்தநாளில் சூப்பர் குட் பிலிம்ஸின் 100வது படம்.? டைரக்டர் யார்.?

நடிகர் விஜய் பிறந்தநாளில் சூப்பர் குட் பிலிம்ஸின் 100வது படம்.? டைரக்டர் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கிவரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.

தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை கோபி சந்த் இயக்குவார் எனத் தகவல்கள் வந்தன.

மேலும் விஜய்யின் 68வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாகவும் வந்த தகவல்களை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இந்தப் படத்தை பிரபல சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அந்த நிறுவனத்திற்கு இந்த படம் 100வது திரைப்படமாகும்.

எனவே இந்த படத்தின் அறிவிப்பை ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்த நாளில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் நடித்த பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஜில்லா என பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Thalapathy Vijay to headline the 100th film of super good films?

More Articles
Follows