தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட மூத்த கலைஞர் பஞ்சு அருணாசலம் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.
சென்னையில் இன்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
எனவே திரையுலகை சேர்ந்த பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவரது மறைவுக்கு ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியிருந்தார் ரஜினி.
ஆனால், அவரது உடலுக்கு ரஜினி நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை.
அவருக்கு பதிலாக லதா ரஜினிகாந்த் அஞ்சலி சென்றார்.
டாக்டர்களின் அறிவுரைப்படி வெளியில் செல்லாமல் ஓய்வில் இருந்து வருகிறார் ரஜினி.
ரஜினியின் திரையுலக வாழ்வில் மறுக்க முடியாத நபர்களில் பஞ்சு அருணாசலம் அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.