சினிமாவில் ஆறு மரணம்; அதிர்ச்சி மாதமாகிய ஆகஸ்ட்!

சினிமாவில் ஆறு மரணம்; அதிர்ச்சி மாதமாகிய ஆகஸ்ட்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

In august 2016 there were 6 celebrities passed awayஇவ்வுலகில் பிறக்கும் எந்தவொரு உயிரினத்திற்கும் இறப்பு நிச்சயம்தான்.

ஆனால் அவை இயற்கை மரணம் என்றால் அதில் வியப்பேதும் இல்லை.

சாதித்துக் கொண்டிருப்பவர்கள் குறைந்த வயதில் மரணம் எய்தால், நாம் ஆண்டவனை என்ன சொல்வது..?

இந்த ஆகஸ்ட் மாதம் இரண்டு 2 வாரங்களை கடந்துள்ளது.

இதில் கடந்த 10 நாட்களில் மட்டும் நம் தமிழ் திரையுலகை சார்ந்த் ஆறு பிரபலங்கள் மரணமடைந்துள்ளனர்.

அவர்களை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு இதோ…

ஆகஸ்ட் 4, 2016

தமிழில் ”தேவி தரிசனம், தேவி திருவிளையாடல், யாமிருக்க பயமேன், அந்த சில நாட்கள், சூப்பர் குடும்பம்” உள்ளிட்ட சுமார் 27 படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் டிஎஸ்.சேதுராமன்(83). இவருக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட காலமானார்.


ஆகஸ்ட் 6, 2016

பழம்பெரும் திரைப்பட இயக்குனரும், வசனகர்த்தாவும், நடிகருமான வியட்நாம்வீடு சுந்தரம்(வயது 72) உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக ஆகஸ்ட் 6-ம் தேதி காலமானார்.

ஆகஸ்ட் 8, 2016

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி (வயது 68) காலமானார்.

ஆகஸ்ட் 9, 2016

தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், கதாசிரியர்… என பல்துறை வித்தகரான பஞ்சு அருணாசலம் (வயது 75) காலமானார்.

ஆகஸ்ட் 10, 2016

தமிழில் ‛பேரழகன்’ மற்றும் ‘பகடை பகடை’ படத்தை இயக்கிய கேரளாவை சேர்ந்த இயக்குநர் சசி சங்கர் (வயது 58), ஆகஸ்ட் 10-ம் தேதி மாரடைப்பால் காலமானார்.

ஆகஸ்ட் 14, 2016

இவர்கள் அனைவரும் 50 வயதை கடந்தவர்கள். ஆனால் பாடல் ஆசிரியர் நா முத்துக்குமார் தனது 41 வயதிலேயே நேற்று மரணமடைந்துள்ளார்.

மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்ட நா.முத்துக்குமார், அந்த நோயின் தாக்கம் தீவிரமானதால் நேற்று(ஆகஸ்ட் 14ம் தேதி) மரணம் அடைந்தார்.

10 நாட்களில் ஆறு திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம்…

இத்தொடர் மரணம் திரையுலகினர் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

‘தமிழ்நாட்டை ஆள முயற்சிக்காதீர்கள் விஷால்’ – சுரேஷ் காமாட்சி விளாசல்

‘தமிழ்நாட்டை ஆள முயற்சிக்காதீர்கள் விஷால்’ – சுரேஷ் காமாட்சி விளாசல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer suresh kamatchi stillsநடிகர் விஷாலின் செயல்பாடுகளை கண்டித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது….

“நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் அவர்களே…

சமீப காலமாக உங்களது பேச்சுகள் – தனிப்பட்ட முறையிலும் சரி, பொது வெளியிலும் சரி – மிகுந்த சந்தேகங்களை எழுப்புவதாக அமைந்துள்ளது. சந்தேகங்கள் மட்டுமல்ல, ஆபத்தானவையாகவும் கூட உள்ளன.

நடிகர் சங்கத்தைப் பிடித்தாயிற்று. அடுத்தது தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்றுவேன் என்று சமீபத்தில் நீங்கள் பேட்டி அளித்துள்ளீர்கள்.

மேலும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் பற்றியும் அவதூறாகப் பேசியுள்ளீர்கள். தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதி என்ற முறையில் உங்களுக்கு சில கேள்விகள்…

நீங்கள் வெறும் நடிகர் மட்டுமல்ல… நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர். என்னென்னவோ வாக்குறுதிகளை அள்ளி வீசி, தினமும் மீடியாவின் வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொண்டு, கடைசி நேர வாக்குப்பதிவின் போது நடக்காத ஒரு அடிதடியை நடந்ததாக சீன் கிரியேட் செய்து, ஓட்டுக்களைப் பெற்று ஜெயித்தவர்.

ஒரு அமைப்பின் வலிமையான பொறுப்பில் உள்ள நீங்கள், சினிமாவுக்கு அடிப்படையாக விளங்கும் தயாரிப்பாளர்களைப் பற்றி, அவர்களுக்கான சங்கத்தைப் பற்றி அவதூறாகப் பேசலாமா?

அந்த அதிகாரத்தை உங்களுக்குத் தந்தது யார்? தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராகவே இருந்தாலும், இப்படிப் பேசுவது சரிதானா?

நடிகர் சங்க நிர்வாகம் சரியில்லை என்று பிரச்சாரம் செய்து, அந்த சங்கத்தில் போய் உட்கார்ந்து விட்டீர்கள். இப்போது தயாரிப்பாளர் சங்கம் சரியில்லை… அதனால் அதையும் கைப்பற்றுவேன் என்கிறீர்கள்.

அடுத்து? தமிழ்நாட்டு நிர்வாகம் சரியில்லை. எனவே அந்த அதிகாரத்தையும் கைப்பற்றுவேன் என்று கூறுவீர்களோ?

யார் கண்டது… உங்கள் நோக்கம் அதுவாகவும் கூட இருக்கலாம்.

அதற்காகத்தானே தேவி அறக்கட்டளை மூலம் கல்வி உதவிகள், நலிந்தவர்களுக்கான உதவிகள், ரசிகர் மன்றங்களை உசுப்பேற்றுதல் போன்றவை நடக்கிறதோ என்ற ஆழமான சந்தேகத்தைத் தூண்டி விட்டிருக்கிறீர்கள்.

தமிழ்நாட்டில் உள்ள தமிழ் நடிகர் சங்கத்தை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை, ஏன் தமிழ் நாட்டையே ஆளும் ஆசை உங்களுக்கு இருக்கலாம். தப்பில்லை. ஆனால் இம்மியளவுக்காக தமிழ் உணர்வு இருக்கிறதா உங்களுக்கு?

தென்னிந்திய நடிகர் சங்கம் என்று இருந்ததை இப்போது ‘சௌத் இந்தியன் ஆர்டிஸ்ட் அசோசியேஷன்’ என்று மாற்றியிருக்கிறீர்கள். அட, அந்த சீல் கூட ‘சௌத் இந்தியன் ஆர்டிஸ்ட் அசோசியேஷன்’ என்றே இப்போது மாற்றப்பட்டிருக்கிறது.

நீங்கள் பதவிக்கு வரும்போது என்ன கூறி வந்தீர்கள்? பல கோடி பேர் மதிக்கும், போற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ன கூறினார் உங்களிடம்?

12 கோடி மக்களின் ஏகப் பிரதிநிதி தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா என்ன விரும்பினார்?

நடிகர் சங்கத்தில் யார் பதவிக்கு வந்தாலும் முதல்வேலையாக தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை ‘தமிழ்நாடு நடிகர்கள் சங்கம்’ என்று மாற்ற வேண்டும் என்றுதானே கூறினார்கள்.

நீங்கள் செய்திருப்பதென்ன? ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ என்ற தமிழ்ப் பெயர் கூட இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு தீர்மானித்து அதை ‘சௌத் இந்தியன் ஆர்டிஸ்ட் அசோசியேஷன்’ என்று மாற்றியிருக்கிறீர்களே… இது எத்தனை பெரிய தமிழர் விரோதப் போக்கு… அயோக்கியத்தனம்!

திருட்டு வீடியோவை நீங்களே ஒழித்துவிடுவேன் என்று முழங்கி களமிறங்கினீர்களே… அது ஒவ்வொரு முறையும் உங்கள் படங்கள் ரிலீசாகும் முன்பு, பின்பு மட்டும்தானா? மற்றவர்களின் படங்களின் திருட்டு வீடியோ எங்கு ஓடினாலும் கவலையில்லையா?

சரி, நீங்க திருட்டு வீடியோவைத் தடுக்க வேணாம்… அதை தயாரிப்பாளர் சங்கம் பார்த்துக் கொள்ளும்.

ஆனால் அப்படி தயாரிப்பாளர் சங்கம் உருப்படியாக மேற்கொண்ட திருட்டு வீடியோ ஒழிப்புக்கு உங்கள் பங்களிப்பு என்ன?

பல லட்சம் செலவழித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் திரு எஸ் தாணு திருட்டு வீடியோவை ஒழிக்க உயர்நீதிமன்ற ஆணைப் பெற்று, டெல்லி வரை போனார்.

அவர் தனியாகத்தான் போராட வேண்டியிருந்தது. கேட்டால் அது அவர் படம் என்று ஒதுங்கினீர்கள்.

அவரோடு கைகோர்த்து அத்தனைப் பேரும் களமிறங்கியிருந்தால் இன்று திருட்டு வீடியோ திருடர்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடியிருப்பார்கள். ஆனால் உங்கள் குறி, தயாரிப்பாளர் சங்கப் பதவிதானே!

எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது விஷால். மீடியா வெளிச்சம் நடிகர்கள் கண்களை மறைத்ததால் நீங்கள் நடிகர் சங்கத்தைப் பிடித்திருக்கலாம். ஆனால் தயாரிப்பாளர் சங்கம்… உங்கள் கபடத்தை வேரறுத்துவிடும். எச்சரிக்கிறேன்.

தயாரிப்பாளர் சங்கத்தை குறை சொல்ற நீங்க தயாரிப்பாளர்களுக்கு எந்த வகையில் பயனுள்ளவராய் இருந்திருக்கிறீர்கள்?

சாடிலைட் ரைட்ஸ் ரூ 10 கோடி போன காலகட்டத்தில் நீங்கள் 7 கோடி சம்பளம் கேட்டீர்கள். ஆனால் இப்போது… எந்தப் படத்துக்கு சாட்டிலைட் பிஸினஸ் ஆகிறது? 2 கோடி, 3 கோடி என்கிறார்கள். ஆனால் நீங்களோ இன்னும் அதே 7 கோடியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

பாலிவுட்டில் இப்போது ஹீரோக்கள் பர்சன்டேஜ் அடிப்படையில் படம் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். அதாவது தயாரிப்பாளரின் லாப நஷ்டத்தில் பங்கேற்க வந்துவிட்டார்கள். நீங்களும் இதற்குத் தயாரா?

படம் ஹிட்டடித்தாலும் ப்ளாப் ஆனாலும் உங்களுக்குப் படம் கிடைத்துவிடுகிறது. ஆனால் தயாரிப்பாளர் நிலை, அதோ கதிதானே.

வாய்ச் சவடால் மூலம் தமிழ் சினிமாவை, தமிழ் நாட்டை ஆள முயற்சிக்காதீர்கள். இருக்குமிடம் தெரியாமல் செய்துவிடுவார்கள் தமிழ் ரசிகர்களும், தமிழக மக்களும். தமிழக அரசு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் உள்ளது.”

 

இவ்வாறு சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

‘உன் கண்ணீர் துளியில் வாழ்வேன்…’ மகனுக்கு நா முத்துக்குமார் கடிதம்.

‘உன் கண்ணீர் துளியில் வாழ்வேன்…’ மகனுக்கு நா முத்துக்குமார் கடிதம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

na muthukumar familyஇரண்டு தேசிய விருதுகளை தன் இளம் வயதிலேயே வென்று அனைவரையும் கவர்ந்தவர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.

இன்று திடீரென அவர் மரணமடைந்தார். இவரது மனைவி பெயர் தீபலக்‌ஷ்மி (37).

இந்த தம்பதியருக்கு ஆதவன் (9) என்ற மகனும் யோகல‌ஷ்மி (8 மாதம்) குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் இவர் தனது மகன் ஆதவன் நாகராஜனுக்கு எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அந்த கடிதம் நெஞ்சை உருக்குவதாக உள்ளது. அந்த கடிதம் இதோ…

“அன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது,

இது நான் உனக்கு எழுதும் முதல் கடிதம். இதைப் படித்துப் புரிந்து கொள்ளும் வயதில் நீ இல்லை.

மொழியின் விரல் பிடித்து நடக்கப்பழகிக்கொண்டு இருக்கிறாய்… வயதின் பேராற்றாங்கரை உன்னையும் வாலிபத்தில் நிறுத்தும்.

சிறகு முளைத்த தேவதைகள் உன் கனவுகளை ஆசீ்ர்வாதிப்பார்கள். பெண் உடல் புதிராகும்.

என் தகப்பன் என்னிடமிருந்து ஒளித்து வைத்த ரகசியங்கள் அடங்கிய பெட்டியின் சாவியை நான் தேட முற்பட்டதை போல நீயும் தேடத் தொடங்குவாய்.

பத்திரமாகவும் பக்குவமாகவும் இருக்க வேண்டிய பருவம் அது. உனக்குத் தெரியாதது இல்லை. பார்த்து நடந்து கொள்.

நிறைய பயணப்படு. பயணங்களின் ஜன்னல்களே முதுகுக்குப் பின்னாலும் இரண்டு கண்களைத் திறக்கின்றன.

புத்தகங்களை நேசி ஒரு புத்தகததை தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடவாய். உன் பாட்டனும் தகப்பனும் புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள்.

உன் உதிரத்திலும் அந்த காகித நதி ஓடிக்கொண்டே இருக்கட்டும்.

கிடைத்த வேலையை விட பிடித்த வேலையைச்செய். இனிய இல்லறம் தொடங்கு. யாராவது கேட்டால் இல்லை எனினும் கடன் வாங்கியாவது உதவி செய். அதில் கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது.

உறவுகளிடம் நெருங்கியும் இரு, விலகியும் இரு. இந்த உலகில் எல்லா உறவுகளையும்விட மேன்மையானது நட்பு மட்டுமே.

நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை நேராகும்.

இவையெல்லாம் என் தகப்பன் எனக்கு சொல்லாமல் சொன்னவை. நான் உனக்கு சொல்ல நினைத்துச் சொல்பவை.

என் சந்தோஷமே நீ பிறந்த பிறகுதான் என் தகப்பனின் அன்பையும் அருமையையும் நான் அடிக்கடி உணர்கிறேன்.

நாளை உனக்கொரு மகன் பிறக்கையில் என் அன்பையும் அருமையையும் நீ உணர்வாய்.

நாளைக்கும் நாளை நீ உன் பேரன் பேத்திகளுடன் ஏதோ ஒரு ஊரில் கொஞ்சிப் பேசி விளையாடிக் கொண்டு இருக்கையில் என் ஞாபகம் வந்தால், இந்தக் கடிதத்தை எடுத்துப்படித்துப்பார்.

உன் கண்களில் இருந்து உதிரும் கண்ணீர் துளியில் வாழ்ந்து கொண்டிருப்பேன் நான்.

இப்படிக்கு…

அப்பா நா.முத்துக்குமார்

கலெக்டரை சந்தித்த விஜய் எப்போது மக்களை சந்திப்பார்..?

கலெக்டரை சந்தித்த விஜய் எப்போது மக்களை சந்திப்பார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay stillsகேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அடிப்படை வசதிகளே இல்லாத கிராமங்கள் உள்ளன.

அதில் அட்டப்பாடி என்ற கிராமமும் ஒன்று. அதற்கு துணை கலெக்டராக இருப்பவர் உமேஷ் கேசவன்.

அந்த கிராமத்தில் அவர் ஆய்வுகளை மேற்கொண்ட போது, கல்வி மற்றும் அடிப்படை தேவைகளில் இந்த கிராமம் மிகவும் பின் தங்கியிருந்தாலும், அங்குள்ள மக்கள் நடிகர் விஜய்யை நன்கு அறிந்து வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் இதனை தன் பேஸ்புக்கத்திலும் பதிவிட்டு இருந்தார்.

இதனையறிந்த விஜய், அவரை சந்தித்து பேசியுள்ளார். மேலும் அந்த கிராமம் பற்றிய விவரங்களை கேட்டறிந்தாராம்.

இருவரும் சுமார் ஒரு மணி நேரம் இருவரும் உரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் விரைவில் அட்டப்பாடி கிராமத்திற்கு விஜய் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாடலாசிரியர் நா. முத்துக்குமார் திடீரென மரணம்

பாடலாசிரியர் நா. முத்துக்குமார் திடீரென மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyricist Na Muthukumarசீமானின் வீர நடை திரைப்படத்தின் மூலம் திரைத் துறைக்கு அறிமுகமானவர் நா. முத்துக்குமார்.

தற்போது இவரின் பாடல்கள் இல்லாத படமே தமிழில இல்லை என்னுமளவுக்கு நிறைய பாடல்கள் எழுதியுள்ளார்.

புரியாத வார்த்தை, புதுப்புது வார்த்தை என்று செல்கின்ற தமிழ் சினிமாவை தன் அழகான தமிழ் சொற்களால் கட்டி போட்டு வைத்திருப்பவர் இவர்.

ஆனால் மரணம் இவரை இன்று காலை கட்டிக் கொண்டு அழைத்துச் சென்று விட்டது.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட இவர் இன்று இயற்கை எய்தினார்.

இச்சம்பவம் கோலிவுட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தங்கமீன், சைவம் படங்களின் பாடல்களுக்காக தேசிய விருதுகளை பெற்று இருக்கிறார்.

இவரது மனைவி பெயர் தீபலக்‌ஷ்மி (37) மகன் ஆதவன் (9) மகள் யோகலக்‌ஷ்மி 8 மாதம்

சினிமாவில் அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் பாடல்களை எழுதியவர் இவர். கடந்த 15 வருடங்களில் 1,500 பாடல்களை இவர் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘கபாலியுடன் என்னை இணைத்த தாணு சாருக்கு நன்றி’ – சாந்தனு

‘கபாலியுடன் என்னை இணைத்த தாணு சாருக்கு நன்றி’ – சாந்தனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shanthanu speechசெந்தில்குமார் இயக்கத்தில் சாந்தனு, கே.பாக்யராஜ், கவுண்டமணி, தியாகராஜன், பூர்ணிமா பாக்யராஜ், மனோஜ், பிருத்வி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வாய்மை.

இப்படத்தின் பிரஸ்மீட் சற்றுமுன் சென்னையில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன் எஸ்.தாணு, கபாலி டைரக்டர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது நடிகர் சாந்தனு பேசியதாவது…

“வாய்மை பட இயக்குனர் செந்தில்குமார் இப்படக் கதையை என்னிடம் முழுவதுமாக சொல்லவில்லை.

ஏதோ தோராயமாகத்தான் சொன்னார். ஆனால் நான் இதுவரை நடிக்காத ஒரு கேரக்டர் என்பதால் ஓகே செய்தேன்.

முதலில் கொஞ்சம் பயந்தேன். ஆனால் என் மீது நம்பிக்கை வைத்தார்.

இதில் ஒரு அழகான சோசியல் மெசேஜை சொல்ல வரும் படம். இதுபோன்ற கருத்துள்ள படத்தை நிச்சயம் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

நான் நடித்து விரைவில் வெளியாகவுள்ள முப்பரிமாணம் படத்தின் டீசரை கபாலி படத்துடன் வெளியிட்டுள்ளார் தாணு.

அவர் செய்துள்ள இந்த உதவியை நான் ஒருநாளும் மறக்க மாட்டேன்” என்றார்.

More Articles
Follows