தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இவ்வுலகில் பிறக்கும் எந்தவொரு உயிரினத்திற்கும் இறப்பு நிச்சயம்தான்.
ஆனால் அவை இயற்கை மரணம் என்றால் அதில் வியப்பேதும் இல்லை.
சாதித்துக் கொண்டிருப்பவர்கள் குறைந்த வயதில் மரணம் எய்தால், நாம் ஆண்டவனை என்ன சொல்வது..?
இந்த ஆகஸ்ட் மாதம் இரண்டு 2 வாரங்களை கடந்துள்ளது.
இதில் கடந்த 10 நாட்களில் மட்டும் நம் தமிழ் திரையுலகை சார்ந்த் ஆறு பிரபலங்கள் மரணமடைந்துள்ளனர்.
அவர்களை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு இதோ…
ஆகஸ்ட் 4, 2016
தமிழில் ”தேவி தரிசனம், தேவி திருவிளையாடல், யாமிருக்க பயமேன், அந்த சில நாட்கள், சூப்பர் குடும்பம்” உள்ளிட்ட சுமார் 27 படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் டிஎஸ்.சேதுராமன்(83). இவருக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட காலமானார்.
ஆகஸ்ட் 6, 2016
பழம்பெரும் திரைப்பட இயக்குனரும், வசனகர்த்தாவும், நடிகருமான வியட்நாம்வீடு சுந்தரம்(வயது 72) உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக ஆகஸ்ட் 6-ம் தேதி காலமானார்.
ஆகஸ்ட் 8, 2016
ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி (வயது 68) காலமானார்.
ஆகஸ்ட் 9, 2016
தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், கதாசிரியர்… என பல்துறை வித்தகரான பஞ்சு அருணாசலம் (வயது 75) காலமானார்.
ஆகஸ்ட் 10, 2016
தமிழில் ‛பேரழகன்’ மற்றும் ‘பகடை பகடை’ படத்தை இயக்கிய கேரளாவை சேர்ந்த இயக்குநர் சசி சங்கர் (வயது 58), ஆகஸ்ட் 10-ம் தேதி மாரடைப்பால் காலமானார்.
ஆகஸ்ட் 14, 2016
இவர்கள் அனைவரும் 50 வயதை கடந்தவர்கள். ஆனால் பாடல் ஆசிரியர் நா முத்துக்குமார் தனது 41 வயதிலேயே நேற்று மரணமடைந்துள்ளார்.
மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்ட நா.முத்துக்குமார், அந்த நோயின் தாக்கம் தீவிரமானதால் நேற்று(ஆகஸ்ட் 14ம் தேதி) மரணம் அடைந்தார்.
10 நாட்களில் ஆறு திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம்…
இத்தொடர் மரணம் திரையுலகினர் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.