தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சீனியர் நடிகரான கமல் மற்ற நடிகர்களை பாராட்டுவதிலும் அவர்களின் குறைகளை சுட்டிக் காட்டுவதிலும் தவறுவதில்லை.
இந்நிலையில் கமல் ஒரு தனியார் டிவிக்கு அளித்த பேட்டியின் போது விஜய்யின் படங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.
அவர் கூறியதாவது…
ரஜினி சார், விஜய் சார் படங்கள் பார்ப்பேன். ரஜினியின் முள்ளும் மலரும் படம் எனக்கு பிடிக்கும். அவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.
விஜய் படங்களையும் நிறைய பார்த்து இருக்கிறேன். அவர் தற்போது வெற்றிப் பெற்ற நடிகராக வளர்ந்து இருக்கிறார்.
அவரும் வித்தியாசமான படங்கள் செய்ய வேண்டும். இந்தியில் பல வெற்றி பெற்ற நடிகர்கள் நல்ல தரமான படங்களை செய்கின்றனர்.
நான் சகலகலா வல்லவன் படத்தை செய்தேன். அது கமர்சியல் படம்தான் நல்ல பெயர் கிடைத்தது.
அதுபோல் மூன்றாம் பிறை படத்தில் நடித்தேன். அதுவும் நல்ல பெயரை பெற்றுத் தந்தது.” என்றார் உலகநாயகன்.